Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறக்கும் விமானத்தில் தூங்கிய விமானி; ஐபேடில் ஆழ்ந்த துணை விமானி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: 280 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தின் விமானி, குட்டித்தூக்கம் போட்டதால் விமானம் 5000 அடிக்கு திடீரென கீழே இறங்கியதால், விபரீதத்தை உணர்ந்து விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துணை விமானியை உஷார்படுத்தியதால் விமானம் தப்பியது.

மும்பையிலிருந்து 280 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் துர்கிஷ் வான்வெளி எல்லையில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 5,000 அடி கீழே இறங்கி 29,000 அடிக்கு வந்தது, இதனையடுத்து அந்த விமானத்தை கண்காணித்து கொண்டிருந்த விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக எச்சரிக்கை தகவல் அனுப்பி, விமானத்தை மேலே செலுத்துமாறு உத்தரவிட்டனர்.

அந்த சமயத்தில் அந்த விமானத்தின் விமானி குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். துணை விமானியோ தனது ஐபேடில் ஏதோ தகவல்களை பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடமிருந்து வந்த அபாய எச்சரிக்கை தகவலை தொடர்ந்து, துணை பைலட் விமானியை எழுப்பி உள்ளார். அதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் மேலே கொண்டு செல்லப்பட்டது.

விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கவனித்ததால், விமானம் விபத்துக்குள்ளாவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தால் சம்மன் அனுப்பப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விமானி, " காக்பிட் (விமானி) அறைக்குள் விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ள விமானம் ஓட்டுவதற்கான விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அவர்களது விளக்கங்களை ஏற்க மறுத்த இயக்குனரகம் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

துணை விமானியோ, அந்த சமயத்தில் தனது ஐபேடில் விமானம் தொடர்பான ஆவணங்கள் டவுன்லோடு ஆகிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உள்மட்ட அளவிலான விசாரணையை தொடங்கி இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.