Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் ஆகிவிட்ட நிலையில், இதை நிறைத்தமாட்டார்கள், பாவம் பிள்ளைகள்.


பெற்றோரின் ஆசைக்காக பலியாடக்கப்படும் சிறுவர்கள்

  • Replies 53
  • Views 13.3k
  • Created
  • Last Reply

உற்று நோக்கினால் தெரியும், மாற்றங்கள் செய்துள்ளார்கள் (DD's talks, magic ball)

http://tamilo.com/2016TamilTVShow/SuperSinger/11/Nov26a.html

http://tamilo.com/2016TamilTVShow/SuperSinger/11/Dec03d.html

தமிழ் நாட்டு (அறிவு, கலை, அடிக்க முடியாது. வறுமையும் எனது உறவுகளை கொல்லுகிறது ) எழுத்துக்கள்(face book jokes), பாடல்கள், படங்கள் இல்லையெனில், ஈழத்து எந்த ஊடகங்களாளும் நின்று பிடிக்க முடியாது, இழுத்து மூடவேண்டியதுதான், மன்னிக்கவும், யாழ் உற்பட

Edited by Knowthyself

  • 9 months later...
  • தொடங்கியவர்

குழந்தையா? காட்சிப்பொருளா?

 

ஏன்டா ! நம்ம பாப்பா டிவில எந்தப்  பாட்டு போட்டாலும் ஆடுறா , பேசாம எதாவது டான்ஸ் ஆடச் சொல்லிக்கொடுக்குற எடத்துல சேத்துவிடுவமா? அவளும் டிவி நிகழ்ச்சியில போய் ஆடுவாள! என் அக்கா கேட்ட கேள்வி இது. இந்தக் கேள்வி டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று ஒளிபரப்பாகும் அத்தனை சேனல்கள் மீதும் வெறுப்பை உண்டு பண்ணியது. காரணம் அந்தக் குழந்தையின் வயது வெறும் இரண்டரை தான்! உங்கள் குழந்தை நன்றாக ‘’தவக்குமா?‘’, உடனே வாருங்கள் இந்தியாவின் சிறந்த தவக்கும் குழந்தைக்கான தேடல்! என்று தான் இன்னமும் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பேர்  வைக்கவில்லை. ஹலோ எங்க குழந்தைக்கு இருக்கும் திறமையை உலகத்துக்கு காட்றோம் உங்களுக்கு என்ன வந்துச்சு என்று கேட்க தோன்றுகிறதா? பிரச்சனை அதுவல்ல, அந்தக் குழந்தைகள் தாங்கள் காட்சிப்பொருளாகக்  காட்டப்படுகிறோம் என்று தெரிந்தா நிற்கிறார்கள் ?

maxresdefault-1-1-701x394.jpg

குழந்தைகள் நடிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று. அதுவும் மிகப்  பிரபலமான சேனலின் நிகழ்ச்சி. அதில் ஒரு 3 வயது சிறுவன்  மாடு போன்று வேடம் போட்ட மற்றொரு  நபரைப் பார்த்து பயந்து பார்வையாளர்கள் இருக்கையில் இருக்கும் அம்மாவைப்  போய் கட்டிப் பிடித்துக் கொண்டான். நெடுநேரம் கழித்து அவர் அந்த வேடத்தைக்  களைத்த  பின்தான் மேடை ஏறுகிறான் ! அதையும் நகைச்சுவை எனச் சிரிக்கிறார்கள் மக்கள். ( வீட்டிற்கு போனதும் எப்படியும் தலைவருக்கு தனி கவனிப்பு கிடைக்கும் அது வேறு கதை) பிஞ்சுக் குழந்தைகளின் மனதை நோகடிக்கும் செயலை எப்படி பொதுவெளியில் பார்க்க அனுமதிக்கிறோம் நாம்? என் நண்பன் அடிக்கடி சொல்வான், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளைக்  குழந்தைத் தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று. சோகம் என்னவென்றால் உண்மையும் அதுதான் .

சரி நகைச்சுவை நிகழ்ச்சியில்தான் இந்தக் கொடுமை என்றால், டான்ஸ் நிகழ்ச்சி என்று அவர்கள் செய்யும் கொடுமையெல்லாம் கருடபுராணம் லெவல்! கட்டிப்  பிடிப்பது முத்தம் கொடுப்பது இரட்டை அர்த்தபாடல்களுக்கு நடனமாடுவது என்று நம்ம ஊர் ஆடல், பாடல் நிகழ்சிகளையெல்லாம் ஓவர்டேக் செய்கிறார்கள். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ( குட் டச்,  பேட் டச்  ) அறியாத குழந்தைகள் இந்த நிகழ்சிகளைப் பார்க்கும்போது   தவறான நோக்குத்தொடு தம்மைத் தொடுபவர்களை எப்படித்  தவிர்ப்பார்கள் அல்லது தாங்கள் தவறான ஆட்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளோம் என்று எப்படித் தெரிந்துகொள்வார்கள்.

சரி அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குக்  கேட்கப்படும் கேள்வி எப்படி இருக்கிறது என்று கவனித்து உள்ளீர்களா ?  அவை இன்னமும் ஆபாசமாகத்தான் உள்ளது.  நிகழச்சித்  தொகுப்பாளர் ஒருவர் ஒரு  குழந்தையிடம்  உங்க அப்பா உங்க அம்மாவைத்  தவிர வேறை யாரையும் லவ் பண்ணியிருக்காரா ? உங்க அம்மா உங்க அப்பாவை அடிப்பாங்களா? , அந்தப்  பெண் அழகாக இருக்கிறாரா ? என்றெல்லாம் கேட்கிறார் . அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு இது எத்தனை தூரம் உதவும்?  ( அந்த டிவி ஷோ வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவும்) ஒரு ஹிந்தி சேனல் ஒன்றில் 9 வயது சிறுவனுக்கும் 2௦ வயது பெண்ணிற்கும் காதல் என்று ஒரு நாடகத்தை ஒளிபரப்ப அது பல்வேறு போராட்டத்திற்குபின் நிறுத்தப்பட்டது ! . இப்படி ஒரு நாடகத்தை நடத்த அவர்கள் எப்படித்  துணிந்தார்கள் ? காரணம் இங்கு நாடங்களுக்கு என்று தரச்சான்று அமைப்பு எதுவும் இல்லை, விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் நாம்தான் குழந்தைகளின் நலனைக்  குழிதோண்டிப்  புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

maxresdefault-3-701x394.jpg

என்னப்பா ! ரெம்ப பில்டப் பன்றியே !, என்ற உங்களின் மைன்ட்வாய்ஸ் கேட்கிறது . இது மிகவும் குறைந்த உதாரணங்களே . அதுவும் நாம் நேரடியாக கவனிக்கக்  கூடிய, ஆனால் கவனிக்க மறந்த நிகழ்வுகள். டிவியில் காட்டப்படும் 9௦ சதவீத பொருட்கள் குழந்தைகளை மையப்படுத்தியே வருகிறது , அது காராக  இருந்தாலும் சரி கொசுபத்திச்  சுருளாக இருந்தாலும் சரி . காரணம் குழந்தைகளைக்  காட்டி என்ன சொன்னாலும் அதை நாம் கண்களை மூடிக்கொண்டு நம்பி விடுவோம். 5 வயதுவரை தெருப்புழுதியில் விளையாடி பின் பள்ளியில் சேர்ந்து படிக்க பிள்ளைகளை அனுப்புவோம் அதுவும் கையால் தலையை சுற்றிக்  காதை தொட்டால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை , இல்லையேல் மீண்டும் விளையாட்டு . இன்று கர்ப்பபையில் குழந்தை இருக்கும் போதே பயிற்சிவகுப்புகள் செல்லுங்கள் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் உங்கள் குழந்தைதான் என்று விளம்பரங்களை பார்க்கமுடிகிறது.

ஏன் தம்பி நீதான் நெட்டுல நிறைய எழுதுவியே  சி.பி.எஸ் .சி, இன்டெர்நேஷனல் ஸ்கூல், இதெல்லாம் வேற வேறைய எதுல சேர்த்தா இந்த நீட் பரீட்சை எல்லாம் ஈசியா புள்ளைங்க பாஸ் ஆகுங்க ? அவ்வளவு அப்பாவியாய் கேட்டார் நண்பர் ஒருவர். அவருக்கு சென்ற வாரம்தான் குழந்தை பிறந்தது என்பதுதான் நகை முரண் . இப்பொழுது குழந்தைகளை 3 வயதுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் ஏதோ கவுரவ பிரச்னைபோல் ஆகிவிட்டது . குறைந்த பட்சம் அவர்களை ப்ளே ஸ்கூலிலாவது சேர்த்துவிட வேண்டும் என்று நம் புற சமுகம் நம்மைத்  தள்ளுவது போன்ற மாயயை இந்த தனியார் நிறுவனங்கள் உருவாக்கி விட்டனர். வெறும் கல்வியோடு முடியவில்லை குழந்தைகளைக்  காட்டி பணம் பிடுங்கும் வேலை , குழந்தைகள் பயன்படுத்தும் உடை, அவர்களின் உணவு, புதிதாக நாட்டுமாட்டுப்  பாலில் தயாரித்த பிஸ்கட்  என்றெல்லாம் வருகிறது ( ஜல்லிக்கட்டில் நாட்டுமாட்டு பாலை பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வைக் காசாக மாற்றும் உத்தி . நல்லாவருவிங்கடா!)

boy-330582_640.jpg

படம்: pixabay

பல உலக நாடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப்  பொருட்களுக்கு உச்சகட்ட தரசோதனை இருக்கிறது. இங்கு நீங்கள் எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளை வேண்டுமானாலும் விற்கலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.( தமிழ்நாட்டில் வர வேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை நம் அமைச்சர்கள் லஞ்சம் கேட்க அதும் உச்சகட்டமாக அவர்கள் ஆந்திரா பக்கம் ஓடியே விட்டார்கள் ) இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்குத் தரமானதைத்  தருவது எப்படி? , எனக்கு விவரம் தெரிஞ்சவரை குழந்தையென்றால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களைத்தான் அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள்.  அதில்தான் நமது  வீடுகளிலும்,  சோப்பு, எண்ணெய் என்று எல்லாம் வாங்கினோம். ஆனால்அதைப்  பயன்படுத்தியதால் தனக்குப்  புற்றுநோய் வந்ததாக வழக்கு தொடர்ந்து,  அதில் வெற்றிபெற்று அந்த நிறுவனத்தை அபராதம் கட்ட வைத்துள்ளார் வெளிநாட்டில் ஒருவர் . அதைப்  பற்றி இந்திய சுகாதாரத்துறை ஏன் இன்னமும் அறிக்கைகூட விடவில்லை என்பது புரியாததல்ல                       (வரவேண்டியது வந்திருக்கும் வேறென்ன) , குழந்தைக்குப்  பயன்படுத்தும் விக்ஸ் போன்றவை தடைசெய்யப்பட்ட பொருட்கள். ஆனால் அவை  தொடர்ந்து நமது கடைகளில் விற்கப்படுகிறதே எப்படி ?

459452-surf.jpg

படம்: dnaindia

நமது ஏழ்மை எந்தச்  சூழலிலும் குழந்தைகளைப்  பாதித்துவிடக் கூடாது என்று கவனம் செலுத்தும் நாம் அவர்களுக்கு சரியான , பாதுகாப்பான , முக்கியமாக தேவையானதை வாங்கித்தருகிறோமா ? கண்டிப்பாய் இல்லை தானே ? . கடலைமிட்டாய், தேங்காய் மிட்டாய்     எல்லாம் அவர்களிடம் இருந்து இந்த டிவி பூதம் பிடுங்கி விட்டது. பள்ளியின் அருகில் வயதான பாட்டி, தாத்தாகளின் மூலம் கிடைத்த நாவல் பழம், கொய்யா பழம் , சீத்தா பழம் என்று சத்தான உணவை எல்லாம் கார்ப்பரெட் பள்ளிகள் ஒழித்துவிட்டன. இப்பொழுது அவர்கள் சாப்பிடும் நொறுக்குத்  தீனி முழுமையாய் அவர்களை நோயாளிகளாக மாற்றும் என்பது மட்டும் உறுதி. ஆனால் காற்று அடைத்த பையில் விற்பதை வாங்கி உண்பது கவுரவம் என்ற எண்ணத்தில் அதைத்தான் நாமும் ஆதரிக்கிறோம். 2 நிமிடத்தில் தயாரிக்கும் உணவு ஆரோக்கியமானது என்பது எத்தனை பெரிய வியாபாரப்  பொய் ? .

இப்போது எந்தக்  குழந்தை விளையாட வெளியே போகிறேன் என்றாலும் சரி அல்லது சேட்டை செய்தாலும் சரி ஏதாவது அனிமேஷன் தொடர்களைக்  கைபேசியிலேயோ அல்லது டிவிலேயோ போட்டு அவர்களை அமைதியாக்கி விடுகிறோம். அனிமேஷன் என்னவெல்லாம் அவர்களுக்குத்  தருகிறது, எதையெல்லாம் அவர்களிடம் புகுத்துகிறது என்பதைத்  தொடர்ந்து பார்க்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் அது அவ்வாறா இருக்கிறது ?

https://roar.media/tamil/features/children-in-tv-shows/

 

  • தொடங்கியவர்

குழந்தமையைக் கொல்லு குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்

மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், காமெடிகள், நெடுந்தொடர்கள், செய்திகள், மத நிகழ்ச்சிகள், என்று நம் விருப்பம் போல் ஒவ்வொன்றிற்கும் தனி சேனலே உள்ளது. சேனல்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே செல்லலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த தொலைக்காட்சியில் தான் இன்று பெரும் வணிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பெரும் வணிகத்தை மையமாகக் கொண்டே அதன் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களுடைய டி.ஆர்.பி ரேட்டிங் உயரவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சமுதாயம் தான்.

junior super star

            தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினுடைய தாக்கம் யாரையெல்லாம் பாதிக்கின்றது என்று பார்த்தால், வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையுமே என்று கூறலாம். பார்வையாளர்களைச் சிந்திக்கவிடாமல் அதற்கு அடிமையாக்கி உட்காரவைக்கின்றது இந்த தொலைக்காட்சி. குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை மணிக்கணக்கில் பார்ப்பதையும், இளம் வயதினர் விளையாட்டு, திரைப்படம், பாடல்கள், காமெடிகள் பார்ப்பதையும், இல்லத்தரசிகள் நெடுந்தொடர்களைப் பார்ப்பதையும், முதியவர்கள் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதை நம் சுற்றத்தினர் மூலம் தினமும் கண்கூடாகப் பார்க்கலாம். வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் இருப்பதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தால் கூட நல்லது என்று எண்ணுகின்ற அளவிற்கு வந்துவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் என்றால் அதில் பங்கேற்பவர்களின் நிலைமையும் பிரச்சனைகள் நிறைந்ததுதான்.

            இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றது. இவற்றில் குழந்தைகள் போட்டியாளர்களாக பங்குபெறும் நிகழ்ச்சிகளே அதிகம். குறிப்பாக குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் போட்டியாளர்களான குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் உடல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் மற்றும் சமூகம் சார்ந்தும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு தன்னுடைய வயதுக்கு மீறிய ஆபாச சிந்தனையைத் தொலைக்காட்சிகள் நடத்தும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றது. நடனம் சம்பந்தமான போட்டிகளில், பாடல்களில் வரும் ஆபாச வரிகளின் உள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகள் அதற்கு ஏற்றார்போல் வாய் அசைத்து ஆபாசமக உடலை வளைத்து ஆடுகின்றனர். தாங்கள் எதற்காக அப்படி உடல் அசைவை வெளிப்படுத்துகின்றோம், அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன, போன்ற எதுவுமே தெரியாமல் குழந்தைகள் இவற்றைச் செய்கின்றன. இச்செயல்கள் பார்ப்போரை குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல் பெரியவர்கள் போல் பார்க்கச்செய்துவிடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் ஆபாசமாக பார்ப்பது என்று கூறலாம்.

            நடிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வயதுவந்த ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் வேடங்கள் அணிந்துகொண்டு அந்த வேடத்திற்கு ஏற்றர்போல் நடிக்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து நடிக்கின்றனர். பின்னர் நடிப்பு குறித்து நடுவர்கள் சொல்லும் கருத்துக்களுக்குப் பெரியவர்கள் போல பதில் அளிக்கின்றனர். இதில் குழந்தைகள் குழந்தைத்தனம் இல்லாமல் மாறிவிடுகின்றனர். இது அவர்களின் இயல்பு அல்லாமல் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட நடத்தையாக உள்ளது. குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற நடத்தையுடனும், மனோபாவத்துடனும் வளரவேண்டும். அதுவே சீறான வளர்ச்சி, படிப்படியான மனநிலை முன்னேற்றமே சாலச்சிறந்தது.

            இவற்றில் மிகவும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் நான்கைந்து குழந்தைகளைத் தேர்வுசெய்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்கின்றார்கள். மேலும் பார்வையாளர்களின் வரிசையில் அவர்களின் பெற்றோர்களை அமரச்செய்கின்றார்கள். அக்குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தைகள் அனைவரின் மத்தியிலும் வீட்டில் நடைபெறுவதைஎல்லாம் பொதுவெளி என்று பாராமல் அனைத்தையும் தங்களின் மழழைக் குரலில் கூறுகின்றனர். தங்களின் அப்பா, அம்மா, எவ்வாறு வீட்டில் சண்டை போட்டுக்கொள்கின்றனர், என்ன மதிரியான வார்த்தைகளில் திட்டிக்கொள்கின்றனர், எவ்வாறு சந்தோசமான நேரங்களில் கொஞ்சிக்கொள்கின்றனர் என்று அவர்களின் அந்தரங்க விசயங்களையெல்லாம் தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் ஆமோதிப்பதைப்போல் அனைத்துப்பெற்றோர்களும் சந்தோசத்தில் திளைத்து தங்களின் குழந்தைகளின் அறிவுக்கூர்மையைப் பார்த்து மெய்சிலிர்த்து வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பதாக எண்ணி பெருமைப்படுகின்றனர்.

            பெரும்பாலும் எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களும் தங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் எல்லாவற்றையும் செயற்கைத்தனமாக செய்கின்றனர். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும், சோகங்களும், அழுகைகளும், கோபங்களும், சூழ்ச்சிகளும், சுயநலன்களும் இப்படி எதிர்மறை எண்ணங்களையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பித்து மக்களின் அனுதாபங்களைப் பெறுகின்றனர். தங்களின் விளம்பர வருமானத்திற்காக குழந்தைகள் இயற்கையாக அவர்கள் கொண்டுள்ள இயல்பான குணநலங்கள் காவுகொடுக்கப்படுகின்றன.

            ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குழந்தைகள் நெருக்கடி கொடுக்கப்படுகின்றனர். தாங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற எண்ணமே அவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கின்றது.பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்று பிரபலமடைய வேண்டுமென்று அவர்களை உற்சாகமூட்டுகிறேன் என்ற பெயரில் மறைமுக மனஅழுத்தம் கொடுக்கின்றனர். வெற்றி பெற்றால் பிரபலமாகலாம், நிறைய பணப்பரிசு கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் திணிக்கின்றனர். இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளர் முறையே. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அவர்கள் தங்களின் குழந்தைகளின் உடல் மற்றும் மன வல்லமை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏமாற்றம் நிகழாது. குழந்தைகளும் இதை விளையாட்டுப் போட்டியாக எண்ணாமல் வாழ்வா சாவா என்ற போட்டிபோல் எண்ணி, தோல்வியுற்றால் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனநிலை இல்லாதவர்கள் ஆகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விசயமல்ல இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடுமையான தீர்ப்புகளைக் குழந்தைகளின் மனம் சமாளிப்பது எளிதானதல்ல. பெரியவர்களுக்கு அறிவுமுதிர்ச்சி இருக்கும் அதனால் விமர்சனங்களையும், தோல்விகளையும் கையாளத்தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல அவர்கள் அந்த அளவிற்கு அறிவுமுதிர்ச்சியை எட்டவில்லை. அவர்கள் விமர்சனங்களை மிகக்கடுமையாக எடுத்துக்கொள்கின்றனர். தங்களின் நடிப்புக்கு எதிரான கருத்துக்களை நடுவர்கள் கூறினால், அதனால் தாங்கள் மதிப்பிழந்துவிட்டதாக நினைக்கின்றனர். நிகழ்ச்சியில் நடுவர் சொல்லும் முடிவால் குழந்தைகள் அழுவதன் மூலம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தோல்வி எண்ணங்கள் அவர்களைத் தாங்களாகவே கஷ்டப்படுத்திக்கொள்ளச் செய்கின்றது. இது போன்ற போட்டி சூழ்நிலையால் இக்குழந்தைகள் வளரும்போதே எதிரி மனப்பாண்மையுடன் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்றனர். இது  குழந்தைகளிடையேயான நட்புறமைப் பாதிக்கின்றது. உலகமே நம்மைப் பார்க்கும் என்ற பயத்திலேயே குழந்தைகள் இவ்வாறு நடக்கின்றனர்.

            பெயர்கள் தான் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆனால், அவற்றில் எல்லாமே மிகைப்படுத்தப்படும் நடிப்புகள். குழந்தைகளுக்கு கேமரா முன் எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. நடுவர் சொல்லும் தீர்ப்புக்கும், தொகுப்பாளர்களிடம் எவ்வாறு பேசுவது, என்று இவை எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படும் வசனங்கள்தான்.

            உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப அதன் சிந்தனையும் செயலும் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மூலம் போட்டி உலகத்தில் தள்ளும்போது பிற்காலத்தில் அவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகநேரிடுகின்றது. மேலும், இக்குழந்தைகளின் சீரான கல்வியில் தடையேற்படுகின்றது. தொடர்ந்த வெற்றிக்கு அவர்கள் தங்களை உடல் ரீதியாக வருத்தி, பெரிதும் மெனக்கெடவேண்டியுள்ளது. இம்மெனக்கெடல் அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனையையும் செயலையும் வளர்க்கின்றது அல்லது பெற்றோர்களினால் வலுக்கட்டாயமாகத் தினிக்கப்படுகின்றது. ரியாலிட்டி ஷோக்களுக்கு ஒரு முடிவில்லாத பயிற்சி தேவைப்படுகின்றது. உடல் ரீதியான பயிற்சியும் நீண்ட நேரம் ஒத்திகையும் இன்றியமையாத ஒன்று. இதனால் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரும் போகும் ஆனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

            இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் தன் சகவயதுள்ள குழந்தைகளுடன் பழக வாய்ப்பில்லாமலும், இவர்களின் வயதுக்கு மீறிய செயல்களினால் சககுழந்தைகளுடன் இயல்பாகப் பழகமுடியாததாலும் தனிமைப்படுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் இக்குழந்தைகளைத் தனித்துவிடப்பட்ட ஒரு உலகத்தில் வாழ்வதுபோன்று மாற்றிவிடுகின்றது. பெரும்பாலும் வெளிஉலகத் தொடர்புகளையே துண்டித்துவிடும் அளவுக்குச் இட்டுச்செல்கின்றது.

            இறுதியாக, ரியாலிட்டி ஷோக்கள் குழந்தைகளின் மீது கெடுதலான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் குழந்தைகளுக்கு ஏமாற்றதைக் கொடுக்கின்றது. இந்த அழுத்தங்கள், ஏமாற்றங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் குழந்தைகளிடம் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும், புற அழுத்தங்களையும்  எதிர்கொள்ளும் அளவுக்கு குழந்தைகளின் வயது இருப்பதில்லை. குழந்தைகள் இந்த வயதில் விளையாட, ஒரு விசயத்தைக் கற்றுகொள்ள, சந்தோசத்தை அனுபவிக்க மற்றும் சமுதாயத்தில் சிறந்தவர்களாக வளர பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். 

- சி.வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், சமூகப்பணித்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-630003

 

http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/33788-2017-09-05-04-32-11

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.