Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2ஆம் இணைப்பு:- கோத்தாபய - நாமல் மோதல் கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலை மூடப்பட்டது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பு - மகன் முறுகல் நிலை நீடிக்கின்றது-

Namal%20Gota_CI.jpg

 முறுகல் நிலை நீடிக்கின்றது

குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார்.

போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள்  வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார்.

காலி மாநகர சபை மேயருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலினால் குப்பைகள் அகறறப்படவில்லை என்று பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார்.

அதேவேளை அரசியல் அழுத்தங்கள் காரணமாக குப்பைகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காலி மேயர் மெத்தசிறி டி சில்வா கூறியுள்ளார். காலி போதனா வைத்தியசாலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ளதாகவும் இதனால் காலி மாநகர சபை அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலி மாநகர சபை மேயர் மெத்தசிறி டி சில்வா, ஜனாதிபதின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் நெருங்கிய சகபாடி என்றும் இதனால் பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்வின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதா அமைச்சில் இன்று இடம்பெறவிருந்த கூட்டம் நடைபெறவல்லை என்றும் காலி மாநகர சபை மேயர் மெத்தசிறி டி சில்வா நாமல் ராஜபக்சவின் அழுத்தம் காரணமாக பாதுகாப்புச் செயலாளரை சந்திக்கவில்லை என்றும் இதனால் முறுகல் நிலை அதிகரித்துள்ளதாகவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

காலி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அரசாங்க வைத்தியசாலை என்பதுடன் மருத்துவ பீட மாணவர்கள் கற்கும் போதனா வைத்தியசாலையாகவும் கரகாப்பிட்டிய வைத்தியசாலை திகழ்கின்றது.

வைத்தியசாலை மூடப்பட்டதனால் நோயாளர்கள் பெரும் அவதிப்படுவதாகவும் அம்பாந்தோட்டை மாத்தறை வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 

சித்தப்புவுக்கும் பெறா மகனுக்கும் இடையில் முறுகலா? கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் அபாயம்?

23-08-2014 - 13:10

பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவின் நொருங்கிய சகபாடி மேயராக பதவி வகுக்கும் காலி மாநகர சபைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலி கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும்; குப்பை கூழங்களை அகற்ற காலி மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குப்பைகளை அகற்றுவது வைத்தியசாலையின் வேலை அல்ல என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் வைத்தியசாலை முன்பாகவுள்ள குப்பை கூழங்களை அகற்றுவது மாநகர சபையின் வேலை அல்ல என்றும் அந்த வைத்தியசாலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுவதாகவும் காலி மாநகர சபை மேயர் மெத்சிறி டி சில்வா கூறினார்.

குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒரு பில்லியன் ரூபாவை மாநகர சபை செலுத்துவதாகவும் அதனால் அரசாங்க நிறுவனங்களின் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை அந்த தனியார் நிறுவனம் செய்வது இல்லை எனவும் பொதுமக்களின் குப்பைகளை மாத்திரமே அந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் மேயர் தெரிவித்தார்.

ஆனால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பொதுமக்கள் வீசுகின்ற குப்பை கூழங்களை வைத்தியசாலை அகற்ற முடியாது என்றும் அது காலி மாநகர சபையின் வேலை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் மாநகர சபைதான் அந்தக் குப்பைகளை அகற்றியது எனவும் கடந்த ஒரு மாதமாக அந்த குப்பைகள் அகற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

குப்பைகள் பெருகி துர்நாற்றம் வீசுவதாகவும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கூறிய பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலையின் நோயாளர் பிரிவை மூடவுள்ளவுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையானால் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடச்  செல்லும் பொதுமக்கள் வீசுகின்ற குப்பைகளே அகற்றப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்களின் வாக்குகளில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் கூறிய பணிப்பாளர் வைத்தியசாலையின் கழிவுகள் எரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தான் தொடர்பு கொள்ளப் போவதில்லை என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளாருக்கு அறிவித்து குப்பை கூழங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மேயர் மெத்தசிறி டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110862/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.