Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பான உபகரணங்களைக் கோரும் பாகிஸ்தானிய சுத்திகரிப்பு ஊழ

Featured Replies

பாதுகாப்பான உபகரணங்களைக் கோரும் பாகிஸ்தானிய சுத்திகரிப்பு ஊழியர்கள்

இஃபான் அஹமட்

பாகிஸ்தானின் வடிகால் சுத்திகரிப்பு கடமையின் போது பலர் மரணமடைவதால் அப்பணி அந்நாட்டில் மிக்க அபாயகரமான தொழிலாக மாறிவருகிறது.

லாஹூர் நகரின் கவல்மண்டி பகுதியில் நீர், சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் மே மாதம் 18 ஆம் திகதி வடிகாலுக்குள் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்கள். மூன்று பேரையும் வடிகாலுக்குள் இறங்குமாறு அவர்களது மேற்பார்வையாளர் கேட்டபோது அவர்களிடம் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கவில்லை.

முதலில் வடிகாலுக்குள் இறங்கிய 42 வயதான பேர்வேஸ் மாஸிஹ் நச்சுக் காற்றை சுவாசித்ததால் மயக்கமுற்று வீழ்ந்தார். 26 வயதான அடில் மஸீஹ், 30 வயதான குப்தார் மஸீஹ் ஆகிய இருவரும் பேர்வேஸை காப்பாற்றுவதற்காக வடிகாலுக்குள் இறங்கியபோது அவர்களும் அதே கதிக்கு உள்ளானார்கள்.

இந்த மூன்று பேருமே பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். சுகாதார தொழிலில் கிறிஸ்தவர்களே கூடுதலாகப் பணியாற்றுகிறார்கள்.

"இது போதும். இனிமேலும் இதுபோன்ற விபத்துகள் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்" என்று நீர், சுகாதார நிறுவனத்தின் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அஸாம் அரேன் தெரிவித்தார். இல்லாவிட்டால் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாகவும் அவர் கூறினார்.

லாஹூரில் ஆறு பாரிய சுத்திகரிப்பு நிலையங்களையும், 46 சிறு நிலையங்களையும் இந்த நிறுவனம் பராமரித்து வருகிறது.

சுத்திகரிப்பதற்கும், மணல் அடைப்புகளை அகற்றுவதற்கும் வடிகால்களுக்குள் இறங்குவோர் வாயு முகமூடிகள், வாயுவைக் கண்டறியும் கருவிகள், சுவாச உபகரணங்கள், டோர்ச் லைட்டுகள், கயிறுகள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நீர், சுகாதார நிறுவனத்தின் விதிகளான போதிலும் இவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாத மரணங்கள் அரிதாக இடம்பெறுபவை அல்ல

சில மாதங்களுக்கு முன்னரும் இதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றுமொரு ஊழியரான ராபீக் மஸீஹ், பக்பன்புர என்ற இடத்தில் இதே போன்ற விபத்தில் மரணமானார். அதனையடுத்து பாதுகாப்பு உபகரணங்களின்றி சுத்திகரிப்பு ஊழியர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என்று அதிகாரிகள் உறுதியளித்தார்கள். ஆனால், இந்த உறுதிமொழி விரைவில் மறக்கப்பட்டுவிட்டது

அழுகிப்போன அங்கு பொருட்களிலிருந்து வடிகால் வாயுக்கள் உருவாகின்றன என்று லாஹூரில் கடமையாற்றும் குடும்ப வைத்தியரான முனீப் ரசாக் கூறுகிறார். ஹைதரசன் சல்பைட், மெதேன், நைட்ரஸ் ஒக்சைட், அமோனியா ஆகியன நச்சு வாயுக்கள் என்று அவர் தெரிவித்தார்.

குறைந்த மட்டங்களிலான ஹைதரசன் சல்பைட் கண்களிலும் சுவாசக் குழாயிலும் எரிச்சலை கொடுப்பதுடன் உயர் மட்டங்களிலான ஹைதரசன் சல்பைட் சுயநினைவை இழக்கச் செய்வதுடன் மரணத்தையும் கொண்டுவரக் கூடியதாகும்.

இதேபோன்று, மெதேன் நச்சுப் பொருள் இரத்தத்திலுள்ள பிராணவாயுவில் கலந்து மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. லாஹூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நீர், சுகாதார நிறுவன ஊழியர்கள் சேமநல சங்கம் கோரியுள்ளது. சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமை குறித்து லாஹூர் நகராட்சி மன்றம் மீது இச்சங்கம் கண்டனமும் தெரிவித்துள்ளது.

லாஹூரில் வடிகால்களை சுத்திகரிப்பதற்கென ஜப்பானின் ஜிக்கா நிறுவனம் வழங்கிய 789.82 மில்லியன் பாகிஸ்தான் ரூபா (13.16 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நவீன அகழ்வு இயந்திரங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. ஆனால், உறைந்த கழிவுப் படிவங்களை கைகளினாலேயே அகற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த இயந்திர சாதனங்களில் நான்கு நீர்பீச்சிகள், நான்கு கழிவுப் படிவ உறிஞ்சிகள், இரண்டு நீர்த்தாங்கி வாகனங்கள், 24 ட்ரக் வண்டிகள், மூன்று மண்தோண்டிகள், நான்கு பிக் -அப் ட்ரக்குகள், நான்கு மின் பிறப்பாக்கிகள் போன்றவை அடங்குகின்றன.

நீர், சுகாதார நிறுவன சுத்திகரிப்பு ஊழியர்கள், ஊழியர் தொகையை அதிகரிப்பது, குறிப்பிட்ட வேலைநேரம் ஆகியன உட்பட தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றாவிட்டால் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அச்சுறுத்தியிருந்தார்கள். ஆனால், அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் வேலைநிறுத்தத்தை பின்போட்டுள்ளார்கள்.

லாஹூரில் கடமையின் போது உயிரிழந்த மூவரும் வழமையான வேலை நேரத்தின் பின்னர் அவர்களது வீடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு வடிகாலை சுத்தப்படுத்துமாறு பணிக்கப்பட்டார்கள். எனவே, வழமையான வேலைக்குப் பின்னர் அவர்கள் களைப்புற்றிருந்த வேளையில் மீண்டும் வேலை செய்ய அழைக்கப்பட்டமையும் மரணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லாஹூரில் அமைந்துள்ள சுமார் 3,500 கிலோமீற்றர் நீளமான வடிகால்களில் 1,500 நிரந்தர அடிப்படையிலான தொழிலாளர்களும் 4,000 தற்காலிக அடிப்படையிலான தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

நிரந்தர அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மொத்தம் 5,500 பாகிஸ்தான் ரூபா (91.67 அமெரிக்க டொலர்) மட்டுமே வேதனமாக வழங்கப்படுகிறது. சட்டப்படி ஒரு கிலோமீற்றர் நீளமான வடிகாலில் இரண்டு தொழிலாளர்களை சுத்திகரிப்பு கடமையில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், நீர், சுகாதார நிறுவனம் இதனை அனுசரிப்பதில்லை.

எதிர்காலத்தில் இத்தகைய மரணங்களை தடுப்பதற்கு நீர், சுகாதார நிறுவனம் மேலும் கூடுதலான தொழிலாளர்களை சேவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சகல பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அரேன் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த தொழிலாளர் ஒவ்வொருவரினதும் குடும்பங்களுக்கு 200,000 பாகிஸ்தான் ரூபாவை (3,333 அமெரிக்க டொலர்) வழங்குவதாக மாநகர முதல்வரின் அலுவலகம் உறுதியளித்துள்ளதுடன் ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபா (16,666 அமெரிக்க டொலர்) பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக கொள்வனவு செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது என்றும் லாஹூர் நகர நகராட்சி மன்றத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வடிகால் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்த ஆபத்து உதவிப் படி ஒன்றையும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு வேலையும் வழங்குவதாகவும் மாநகர முதல்வர் உறுதியளித்துள்ளார். தொழிலாளர்களின் மரணங்கள் குறித்து நீர், சுகாதார நிறுவனம் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.

தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை விருத்திசெய்வது தொடர்பாக நீண்டகால சிபாரிசுகளை தெரிவிப்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாகாண வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் சியெத் அலி ராஜா பணித்துள்ளார்.

உறுதிமொழிகள் வழங்கப்பட்டாலும் அவை செயல்படுத்தப்படும் வரை தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் என்று அரேன் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களில் தங்கள் தொழிற்சங்கம் 79 உறுப்பினர்களை இதேபோன்ற விபத்துகளில் இழந்துள்ளது என்று தெரிவித்த அரேன் இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

-ஐ.பி.எஸ்.-

http://www.thinakkural.com/news/2006/9/29/...s_page11809.htm

  • தொடங்கியவர்

கப்பல் கப்பலாக ஆயுதம் குடுக்கிறதை விட்டுட்டு இதை கவனியுங்கோ முசாரப்பு

உங்கட வரலாற்று குப்பைகளை சுயசரிதையாக எழுதப்போய் இப்ப சர்வதேச அரசியல் கோமளியாய் வளர்ந்து வருகிறீங்க

அதுக்கு யாழ்களம் சார்பாக வழ்த்துக்கள்

என்ன நண்பர்களே கொஞ்சம் உரிமை எடுத்து வாழ்த்திவிடேன் கோபிக்க மாட்டீர்கள்தானே

:lol::lol: :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.