Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் : மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்!

Featured Replies

மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்!
சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறித்து கூறும், சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் புகழேந்தி: 'நான் இந்த எண்ணெயை தவிர, வேற எதையும் தொடறதே இல்லை'னு பெருமையாக கூறிக் கொள்வர். இது, முழுக்க தவறான நம்பிக்கை.ஒரே வகையான எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதிலிருக்கும் கெடுதல் தன்மை, உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். எண்ணெய்களில் உள்ள நற்குணங்கள் மட்டுமே உடம்பில் சேர வேண்டும் எனில், எல்லா வகை எண்ணெய்களையும் மாற்றி மாற்றி கொஞ்சமா பயன்படுத்த வேண்டும்.மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை.
 
எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் தீங்கானது தான். அதனால், சமையலுக்கான எண்ணெய் வகையை, அடிக்கடி மாற்றுவது நல்லது.கொழுப்பில் தாவர கொழுப்பு, மாமிச கொழுப்பு என, இரண்டு வகை உள்ளது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவரங்கள் மூலம் எடுக்கக்கூடிய எண்ணெய்களில் இருக்கும் கொழுப்பு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது.உதாரணமாக, தேங்காய் எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகம் என்று பலரும் ஒதுக்கி வைக்கின்றனர்.
 
ஆனால், கேரளாவில் பெரும்பான்மையான மக்கள், தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதயநோயால் பாதிக்கப்படுபவர்கள், மற்ற மாநிலத்தை விட கேரளாவில் அதிகமாக இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.நன்மைகள் பலவும் அடங்கியிருக்கிற தேங்காய் எண்ணெயை, உணவில் சேர்க்கக் கூடாது என்பது, எந்த அளவுக்கு தவறான கருத்து என்பதை, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இன்னொரு பக்கம் இறைச்சி, இறால் போன்ற மாமிச உணவுகளாலும் உடலில் கொழுப்பு சேர்கிறது.
 
இதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணெயில் மட்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதால், எந்தப் பயனும் இல்லை. ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை.இப்போது, உடல் உழைப்பை ஓரங்கட்டிவிட்டு, உடற்பயிற்சி செய்வதற்கு சிரமப்பட்டு தனியாக நேரம் ஒதுக்குகின்றனர். இந்த நேரத்தை, தினசரி வாழ்க்கைக்கான வேலைகளுக்கு ஒதுக்கினாலே போதும்.'கொழுப்பு சத்தே உடம்புக்கான கேடு' என்று சொல்வது தவறு. நல்ல கொழுப்பு உடம்புக்கு நன்மை தரும். அதேபோல, ரீபைண்டு ஆயிலில் சத்துகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சமையலுக்கு.... பாவிக்கும், எண்ணையை மாற்றி,மாற்றி பாவிக்க வேண்டும் என்பது, நல்ல புதிய தகவல்.
இன்னுமொன்று.... ஒரு முறை பொரித்து, பாவித்த எண்ணையை.....

அடுத்த நாள் வைத்து, சூடாக்கி பொரிப்பது.... உயிருக்கே, ஆபத்தாக முடியும்.
 

எனக்குத் தெரிந்த ஒருவர், எண்ணையை சேமிக்க வெளிக்கிட்டு....

மருத்துவமனையில்.. மூன்று மாதம் இருந்தவர்.

 

அத்துடன்.... பாவித்த எண்ணையை,  ஆறியவுடன்.... காற்றுப் புகாத,

பொலித்தீன் பையில் போட்டு... குப்பை வாழிக்குள் போட்டு விடுங்கள்.
அந்த எண்ணையை, உங்கள்  குசினி, பாத்திரம் கழுவும் இடத்தில் ஊத்தினால்....

என்றோ.... ஒரு நாள், அதன் குழாய்களில் கொழுப்பு படிந்து, அடைத்து விடும்.
அந்த அடைப்பை....எடுக்க, நீங்கள் நூற்றுக்கணக்கில்... செலவழிக்க வேண்டி வரலாம்.   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பொரிச்ச எண்ணெயை அநியாயமாக்க கூடாதென்று அதில் திரும்ப,திரும்ப பொரிச்சிருக்கிறன்.இப்ப அப்படி எல்லாம் செய்கிறேல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.