Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருவதோடு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்க அனுமதி தரக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதித்து விசா வழங்க வேண்டும். ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலகட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்க, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ''இலங்கை தமிழர்களின் உரிமைகளை நாம் வென்றெடுத்து அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருப்போம். பக்கத்து நாட்டில் உள்ள நமது தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே கையாண்டு வரும் வழி வன்முறை வழி. அவரின் வழியில் அல்லாமல் அமைதியான வழியில் தொடர்ந்து அனைவரும் போராடினால், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றால் தான், ராஜபக்சேவின் செவிகளுக்கு நம் கோரிக்கைகள் சென்று சேரும்" என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31987

140903144539_teso_protests_624x351_bbc_n

மக்கள் கிளர்ந்தெழுந்தால்தான் கோரியது கிடைக்கும்": கருணாநிதி

அனைவரும் சேர்ந்து போராடினால், ஈழத்தில் வாழும் தமிழருக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் வெல்ல முடியும் என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் புதன் கிழமையன்று காலையில் நடந்த டெசோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா. பொது அவையில் பேச அனுமதிக்கக்கூடாது, ஐநா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் டெசோ அமைப்பின் சார்பில், புதன் கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஈழப் பிரச்சனையில் முந்தைய மத்திய அரசையும் தி.மு.கவையும் தொடர்ந்து குறை சொல்லிவந்தவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோதி குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்” என்று கேள்வியெழுப்பினார். கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமில்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதையும் திருமாவளவன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதற்குப் பிறகு பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஒரு போராட்டத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்தால்தான் கோரியது கிடைக்கும். இந்தியாவுக்கு அருகில் அடிமைப்பட்டுக் கிடக்கிற அந்த இனம் சிலிர்த்து எழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்களர்களின் காதுகளில் விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களின் காதுகளில் விழுந்தால், அவர்கள் ஒற்றுமை நம்மை வழிநடத்தும்” என்று குறிப்பிட்டார்.

“பக்கத்துத் தீவில் உள்ள தமிழனை வாழவைக்க முடியாமல் இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன என்ற சூளுரையை ஏற்க வேண்டும். அனைவரும் சேர்ந்து போராடினால் ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தருவதற்கான போராட்டத்தில் வெல்ல முடியும்” என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர், ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்படத்தை கொளுத்தினர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140903_teso.shtml

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல ஆண்டவா :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.