Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செழிப்புடன் வளர்ந்துள்ள 'சிங்களத் தேசியம்"

Featured Replies

கடந்த சில வருடங்களில், தமிழ் தேசிய உணர்வும், தமிழ் இன விடுதலைத் தாகமும் எவ்வளவு து}ரம் தமிழர்களிடம் வளர்ந்துள்ளதோ அதே அளவு வேகத்தில், அல்லது அதைவிட அதிகமாகவே, சிங்கள தேசிய உணர்வும் சிங்கள இனத்துவேச உணர்வும் சிங்கள மக்களிடையே பலமடங்கு வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவதானிக்க மறந்து விடக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இனம், சிங்கள நாடு, சிங்கள மொழி, சிங்கள அதாவது பௌத்த மதம் போன்றவற்றிற்கு பேராபத்து வந்துள்ளதாக தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகள் எழுதியும் பேசியும் காட்டியும் திணித்தும் அழுத்தியும் வந்ததனால் மட்டுமல்ல, தமிழினத்தில் தானாக வளர்ந்து வந்துள்ள தமிழின விடுதலை வேகமும் அவர்களை எதிர்த்திசையில் செல்வதற்கும் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்துள்ளன.

இதன் முன்னெடுப்புக்களை, முன்பெல்லாம் இரகசியமாக முன்னெடுத்துவந்த சிங்கள அரசுகளின் நிலைப்பாடு உருமாறி, தற்போதெல்லாம் வெளிப்படையாகவே சிங்கள தேசியத்தைப் பரப்புவதில் அரசு பங்கெடுத்து வருகிறது. அரசசார்பு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள், வெளிநாட்டு து}துவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அத்தனை மட்டத்திலும் சிங்கள தேசியம் மிக நேர்த்தியாக வார்த்தெடுக்கப்படுகிறது. இதன் உச்சக்கட்டத்தில், சிறிலங்கா அரசின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்ற உயர்மட்டத் தலைவர்கள் வரையில், சிங்கள தேசியத்திற்குப் பங்களிப்பது இன்றியமையாத ஒரு தேவை என்பதாக வெளிக்காட்டப்பட்டும் வருகிறது.

உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச அரங்கிலும், சிங்கள தேசியத்திற்கான பரப்புரை தற்போது மிக உக்கிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. சிறிலங்கா ஜனாதிபதி, அணிசேரா நாடுகள் கூட்டத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட, சிங்கள தேசியத்தைப் பாதுகாப்பதற்கான பரப்புரைகளை தெளிவாக முன்னெடுத்ததுடன், அதற்கு ஆதரவு கோரும் வாதங்களையும் ஏனைய நாடுகளிடம் முன்வைத்துள்ளமை இதைத் தெளிவாகக் காட்டிநிற்கிறது.

சிங்கள ஊடகங்கள் தங்கள் இனத்திற்குச் செய்யும் தேசியப் பணி

இதற்குத் தூபமிட்டு வளர்ப்பதில் சிறிலங்காவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை தேசிய ஊடகங்களும் மிக உன்னிப்பாகப் பணியாற்றி வருகின்றன. தெற்கில் வெளியாகும் அத்தனை சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், ஒட்டுமொத்தமாக சிங்கள இனவெறி ஊடகங்கள் என்ற எகத்தாளப் போக்கையும் கடந்து, சிங்கள தேசிய உணர்வை உள்ளுர எழுச்சிகொள்ள வைக்கும் மகத்தான பணியை உக்கிரமாகவே முன்னெடுத்து வருகின்றன.

தெற்கில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளைக் கூட, தங்கள் தேசியத்திற்கு எதுவகையிலும் பாதகம் ஏற்படாத வகையில் செயற்படுவதை உறுதிசெய்வதும், அரசின் முக்கிய ஊடகப் பணியாக விரிந்து கிடக்கிறது. மேலதிகமாக, தெற்கில் இயங்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகள் உட்பட, ஏனைய வெகுஜன ஊடகங்கள் அனைத்தையும், சிங்கள தேசியத்தை நோக்கியதாக பயணிக்க வைப்பதில் பல மில்லியன் செலவில் பரப்புரையும் கண்காணிப்பும் நிதியுதவியும் வழங்கி பசளையிட்டு வருகின்றன.

இவை தவிர, மக்கள் மயமாகியுள்ள ஏனைய மறைமுக வெகுஜன ஊடகங்களாக விளங்கும் சினிமா, இணையத்தளங்கள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள், சமய மற்றும் அரசியல் கூட்டங்கள் என்று அனைத்திலும், சிங்கள தேசியத்தை தீவிரமாக விதைப்பதில் சிங்கள அரசு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகிறது என்பதை, யாரும் அலட்சியம் செய்துவிடக் கூடாது.

உதாரணமாக, தெற்கில் தினமும் வெளிவரும் பத்திரிகைகளைப் படித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட 90 வீதமான விடயங்களில் சிங்கள தேசியம் அப்பட்டமாக, பச்சையாக, பசுமையாக திணிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருவதை அவதானிக்கலாம். பாடசாலை நு}ல்களிலும், வரலாற்று நு}ல்களிலும் கூட, சிங்கள தேசியம் ஊடுருவல் எடுத்திருப்பதை, இதன்மூலம், மழலைப் பருவத்திலிருந்தே சிங்கள இனவாதம் குருதியில் ஏற்றப்பட்டு வருவதையும் மிக வெளிப்படையாகவே அவதானிக்கலாம். இன்னும் ஒருபடி மேலே போனால், சிங்கள இனத்தின் வரலாற்று நு}லான மகாவம்சம் கூட, பலதடவை திருத்தி எழுதப்பட்டு, சிங்கள தேசியத்தின்பாற்பட்டதாக உருமாற்றம் பெற்றிருப்பதை, வரலாற்று அறிஞர்களும் ஆய்வாளர்களும் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள் என்றால், சிங்கள தேசியம் எந்தெந்த மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சில சிங்கள அல்லது ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தாலே, இவை எப்படியான இனவாத உணர்வுகளைத் து}ண்டுவனவாக அமைந்திருக்கும் என்பதை நீங்கள் இலகுவாக அனுமானித்து விடலாம். பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழினத்தை நலிவடைய வைக்க முயல்கிறார்கள் என்பதில் இரண்டாவது பேச்சிற்கு இடமில்லை என்பது மட்டும் வெள்ளிடைமலை.

இதன் இன்னுமொரு கட்டமாக, தமிழ் தேசியத்தைப் பற்றி கருத்து வெளியிடத்தக்க ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்குவதும் அழிப்பதும் மிரட்டுவதும் கடத்துவதும், ஏன் கொலை செய்வதுமென, சிங்கள தேசியத்திற்கெதிரானவர்களின் குரலும் மௌனித்துவிட வேண்டும் என்பதிலும், சிங்கள தேசியவாதிகள் அதீத அக்கறை கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள்.

தமிழர் தேசியம் எப்படி?

இது கவலையளிக்கும் யதார்த்தம் தான். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி என்று மேடையில் பேசும் தமிழர்கள் பலர், போதையேறியதும் தத்துவம் பேசும்போது இப்படிச் சொல்பவர்கள் சிலர். ஆனால், நிஜத்தில் பார்த்தால், தேசியத்தைத் தொலைத்துவிட்ட அல்லது மறந்துவிட்ட தமிழர்கள் தான் ஏராளம். சிங்கள தேசியத்தின் வளர்ப்பில் குறியாக இருக்கும் எதிரி, தமிழ் தேசியத்தை அழிப்பதிலும் அதே அளவு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறான். இதற்கு மாறாக, எதிரிகளின் கயிற்றை விழுங்கி, தமிழ் தேசியத்தை விற்றுவிடும் தமிழ் இனவாளர்களைத்தான் தமிழர் பக்கம் பார்க்க முடிகிறது.

தமிழ் மண் பற்றையும், தமிழின உணர்வையும் தாங்கிப் பிடிப்பதற்காகவே பிறந்ததாகக் கூறிக்கொண்டிருந்த பல்வேறு தமிழர்களும், தங்கள் உணர்வில் தங்கியிருந்த தமிழ் தேசியத்தைக் காற்றில் பறக்கவிட்டு, தங்களை அற்ப சொற்ப சலுகைகளுக்காக விற்றுவிட்ட துயரத்தைத்தான் இப்போது நாம் பார்க்க முடிகிறது. அந்தக் காலத்தில், காக்கைவன்னியன்களும் நயவஞ்சகர்களும் தமிழ் தேசியத்தைக் காட்டிக்கொடுத்ததுபோன்று, இந்தக் காலத்திலும் கதிர்காமர்களும், சங்கரிகளும், தேவாக்களும், முரளிகளும் இன்னும் பல்வேறு இரகசிய முதலைகளும், தமிழ்த் தேசியத்திற்கு ஆப்பு வைக்கும் கைங்கரியங்களை முனைப்புடன் முன்னெடுத்து வந்தார்கள், வருகிறார்கள்.

தற்போது நாம் எங்கே நிற்கிறோம்?

இவர்களை இனம்கண்டு அழித்தொழித்த முதற்கட்டம் இப்போது அவசியமற்றதாகி விட்டது. அதன்பின் உருவான இரண்டாம் கட்டத்தில், பலரும் தாங்களாகவே நிலைமையைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியத்தின் அவசியத்தை உணர்ந்து வலியுறுத்துவதுடன் இணைந்து செயற்படவும் ஆரம்பித்தார்கள். இதன் அறுவடையாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட மலையகக் கட்சிகளும் மேல்மாகாணக் கட்சிகளும் இணைந்து செயற்பட இணக்கம் கண்டன. தமிழ் முஸ்லிம் காங்கிரஸ் கூட, இத்தகைய இணக்கப்பாட்டைக் கண்டு, இணைந்து செயற்பட்டாலும், பின்னர் உருவான பதவி மோகம் காரணமாக, கருத்து மோதல்களை வளரவிட்டார். இருந்தாலும், அவ்வப்போது மீண்டும் தேசியத் தலைமையுடன் ஒருமித்து செயற்படுவதற்கான சமிக்ஞைகளைக் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.

தமிழினம் நசுக்கப்படும் பட்சத்தில், சிங்கள தேசியத்தின் அடுத்த குறி முஸ்லிம் சிறுபான்மைதான். அதற்குப்பின் மலையக மக்களும் இலக்காக மாறிவிடுவார்கள். எப்படியும் பௌத்த சிங்கள நாடொன்றை உருவாக்குவதே, சிங்கள தேசியத்தின் இறுதி நிலைப்பாடு என்பதை, முஸ்லிம் சிறுபான்மையினமும் மலையக தலைமைகளும் புரிந்துகொள்ளும்போது, தமிழ் தேசியத்தின் தேவையும் புரிதலும் சற்று இலகுவானதாகி விடலாம்.

...

.....

http://www.tamilnaatham.com/articles/2006/...oor20060926.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.