Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு

Australia - Pala Kathaikgal 2014 - Tamil Short story competition Announcement

Thaai Tamil School Inc

ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி

வணக்கம்,

கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம்.

ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் இப்போட்டி நடத்தபடுகிறது.

இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.

இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்

பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்

போட்டியின் விதிமுறைகள்:

1. போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.

2. கதை தமிழில் இருக்கவேண்டும். கதைக்களம் மற்றும் சூழல் ஆஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

3. கதைக்களன் குடும்பம், அனுபவம், மர்மம், நகைச்சுவை, அமானுஷ்யம், சுற்றுச்சூழல் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

4. கதையின் அளவு 500 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

5. ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.

6. போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.

7. வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும் போட்டி நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்

8. ஒவ்வொரு பிரிவிலும் போட்டிக்கு வரும் கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 10 முதல் 20 கதைகள் வரை ஆஸ்திரேலிய தோ்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும். அவை தமிழகத் தேர்வுக்குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது.

9. போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.

10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.

கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் மார்கழி மாதம் 16 தேதி (31.12.2014).

இப்போட்டியின் முடிவுகள் தைமாதம் முதல் தேதி, பொங்கல் (15.01.2015) அன்று அறிவிக்கப்படும்.

பரிசுகள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் இலக்கிய விழாவின் போதுகொடுக்கப்படும்.

பரிசும், அதை தேர்வு செய்யும் நடுவரும் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் போட்டிக்கு வரும் கதைகளில் முத்திரைக் கதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதியாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே எழுத்தார்வமுள்ள அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைகளை PDF கோப்பு வடிவில் தாய்த்தமிழ் பள்ளியின் மின்னஞ்சல் முகவரியான thaaitamilschool@gmail.com க்கு அனுப்பவும். கதைகளை அச்சுப்பிரதியாக (Hard copy) அனுப்ப விரும்புவோர் பள்ளியின் தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.

தாய்த்தமிழ்ப் பள்ளியின் முகவரி.

Thaai Tamil School Inc

PO Box 6212

Fairfield Gardens, QLD 4103

மேலும் விபரங்களுக்கு

பார்த்தீபன் (partheeban.e@gmail.com) - 0432276977

முகுந்தராஜ் (mugunth@gmail.com) - 0423730122

சத்தியா (satya.ryan@gmail.com) - 0412452490

அன்புடன்

பார்த்தீபன்

(தாய்த்தமிழ்ப் பள்ளியின் சார்பாக)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.