Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரகாவியம் திரைப்பட இயக்குனருக்கு ஒரு மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா.. நான் மஹாவிஷ்ணு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை கலைஞன்.. உங்கள் புகழ் ஊரெங்கும் பேசப்பட, நான் தங்களை புகழ விரும்பவில்லை. அமரகாவியம் என்னுள் ஏற்படுத்திய நெருடல்களை உண்மை குறையாமல் பரிமாறிக்கொள்ள விழைகிறேன்..

* எத்தனை முறை ரீடேக் போனது, இல்லை எவ்வளவு முறை வசனங்கள் மாற்றப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் உங்களால் எழுதப்பட்ட வசனங்கள், நீங்கள் வசனங்களை திரையில் உபயோகப்படுத்திய விதம் அனைத்தும் இதுவரை நான் திரையில் கண்டிராதது ! அவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது, காணும்போதே கதாபாத்திரங்களின் மீது ஆழமான மரியாதையை ஏற்படுத்தியது..

* நடிகர் நடிகைகளை நடிக்க தேர்வு செய்வதில் “ஜீவா” ராஜதந்திரன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். காரணம், கதாநாயகன் சத்யா மற்றும் கதாநாயகி மியா ஜார்ஜ் திரையில் நடிக்கவில்லை, மாற்றுக்கருத்தின்றி வாழ்ந்திருக்கிறார்கள் ! தமிழ் சினிமாவிற்குள் புதிதாய் கால்பதிக்கும் இருவரிடமும் கதைக்கு உயிரூட்ட நீங்கள் வேலை வாங்கிய விதம் திரையில் தெரிந்தது ! சமுதாய அந்தஸ்தையும் அவர்களுக்கு பெற்றுகொடுத்து விட்டது. அதுமட்டுமில்லாது ஏனைய நடிகர் நடிகைகளும் தகுந்த முகபாவனைகளை கொண்டு நடித்து தள்ளியிருக்கிறார்கள்..!!!

* இன்றைய கால உலக சினிமாவில், மசாலா படங்களுக்கு அமோக வரவேற்பும், வியாபாரமும் துணை நிற்கிறது. குறிப்பாக காதல் கரு என்று திரையில் வந்தாலே, கட்டில் அறையில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள், இதழ் பதிக்கும் முத்தங்கள், ஜோடிகளின் எண்ண அலைகளான ஏனைய ஊடல்கள் இல்லாத படங்கள் இன்று இல்லை. இவை அனைத்தும் தேவைப்படுகிறது, இதை நான் தவறும் சொல்லவில்லை, ஆனால் இந்த பட்டியலில் எதுவும் இல்லாமல், அமரகாவியமானது ஆழமான உண்மையான காதலை மட்டும் பயன்படுத்தி, சூட்சமமான மக்கள் கருத்துகளிலும் வியாபார ரீதியாகவும் வசூலையும் அள்ளியிருக்கிறது !!!

* கடவுள் நம்பிக்கை இல்லாதவன், தெளிவாக சிந்திப்பவன், நேர்மறை எண்ணங்களை கொண்டவன் நான். அமரகாவியம் காதல் கதை நகர்ந்து செல்கையிலே, காதல் ஜோடி படும் அவதிகளை காணும்போது என்னால் கூட எந்த தரப்பினர் மீதும் தவறு காண முடியவில்லை. அவரவர் கருத்தில் உண்மை உள்ளது, எதிர்காலம் பற்றிய பயம் உள்ளது. இதை நீங்கள் திரையாடிய விதத்தில், உண்மை வாழ்க்கையில் நம் மக்கள் சந்திக்கும் இன்னல்களின் எதார்த்தம் தெரிந்தது. மிக சாமர்த்தியமாக கதையை நகர்த்தி உள்ளீர்கள். “பெயர் ஜீவா வாக இருப்பதனால் தான் என்னவோ, கதையிலும் ஜீவன் சந்தேகமின்றி செறிந்துள்ளது !” அளவில்லா மகிழ்ச்சி…”

* என் பெற்றோர் எனக்கு மிதிவண்டி வாங்கி தராததை எண்ணி நான் கடைசியாக அழுது ஒன்பது வருடங்கள் இருக்கும். அதன் பின் எண்ண முதிர்ச்சி வாழ்க்கைக்கு உதவியது. எதை எண்ணியும் கலங்காமல், இதுவும் கடந்து போகும் என எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவன், இன்று நல்ல சமுதாய அந்தஸ்தில் எவர் உதவியும் இல்லாது வளர்ந்து இன்று நான் நானாக இருக்கிறேன். இப்படிப்பட்ட மனம் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். இச்சூழ்நிலையில் திரைப்படங்களை காண்பதில் காதல் கொண்ட நான், பல திரைப்படங்களை பார்த்து ரசித்ததுண்டு, வியந்ததும் உண்டு. ஆனால் உங்கள் திரைக்காவியத்தில் வாய் வசனமில்லாமல் கதை முடியும் தருணம், ரத்த கரையில் மிதக்கும் கதாநாயகியின் கண்கள், கதாநாயகனிடம் குறைந்தது ஆயிரம் கேள்விகளை கேட்டிருக்கும் ! வாழ்நாள் ஏக்கம் நிறைவேறாது உயிர் பிரியும் அவளது கண்கள், அவனது பதில் தெரியா கண்ணீர் இரண்டும் இணையும் அத்தருணம், ஒன்பது வருடமாய் கலங்காத என் கர்வ நெஞ்சத்தை தகர்த்தெரிந்தது ! மனம் இலகியது, கண் கலங்கியது !! என் உண்மையான கண்ணீர்த்துளிகள் அவை… உங்களால் மட்டுமே இது சாத்தியமானது !!!

* சுருக்கமாக சொல்கிறேன்.. ஐஞ்சிறு காப்பியங்களான சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், யசோதர காவியம், நாக குமார காவியம் இதன் வரிசையில் அமரகாவியமும் இடம் பெற முழு தகுதி பெற்றது ! உங்களது அடுத்தடுத்த திரைப்படங்களையும் காண மிக ஆர்வமாய் உள்ளேன். தொடர்ந்து இயக்குங்கள். எனது வாழ்நாள் திரைப்பசியை அமரகாவியம் என்ற திரைப்படம் மூலம் தீர்த்து வைத்ததற்கு சிறம் தாழ்ந்த கோடான கோடி நன்றிகள் !!!

Thanks to maha

ஐஞ்சிறு காப்பியங்களான சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், யசோதர காவியம், நாக குமார காவியம் இதன் வரிசையில் அமரகாவியமும் இடம் பெற முழு தகுதி பெற்றது

 

 

மேலே சொன்ன வரிகள் கொஞ்சம் அதிகம் என்றாலும் உண்மையிலே கடைசி காட்சியில் அவள் கண்கள் கேட்கும் கேள்விகள்  மனதை ரணமாக்கி விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.