Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதாளத்தை நோக்கி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதாளத்தை நோக்கி…

 

போருக்குப்பின்னரான இலங்கையில் நல்லிணக்கத்தை அடைவதற்காக பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகின்றது. ஆனால் நல்லிணக்க நடவடிக்கைகளாக அரசு குறிப்பிடுபவையயல்லாம் இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்களின் மத்தியில் காணப்படும் அச்சங்களைப் போக்குகின்ற விடயங்களாகக் காணப்படவில்லை. மாறாக சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை யீனத்தை அதிகரிக்கின்றதும் ஸ்திரநிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதுமான செயற்பாடுகளே தற்போது அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

வடக்குக் கிழக்கிலே பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை பலவந்தமாக கையகப்படுத்துதல், பெளத்த மக்களே இல்லாத இடத்தில் விகாரைகளை நிர்மாணித்தல், பொருளாதார வளங்களை சூறையாடல் போன்ற விடயங்களை பலமுறை சுட்டிக்காட்டியும் இன்னமும் உரிய நடவ டிக்கை இது விடயத்தில் எடுக்கப்படவில்லை.

இது ஒரு புறமிருக்க மதத்தீவிரவாத அமைப்புக்களின் எழுச்சி அரசால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டு அல்லது மறைமுகமாக தட்டிக்கொடுக்கப்பட்டு தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

இந்த வகையில் இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரசாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பெளத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.

இராணுவ சர்வாதிகாரம் நிலவும் மியன்மாரில் ஜனநாயகத்தினைப் பாதுகாப்பதற்காக இடைவிடாது குரல் எழுப்பி செயற்பாடுகளை வழிநடத்தியமைக்காக சமாதானத் திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி இருந்தும் அப்பாவி ரொகின்யா முஸ்லிம்களை கொத்துக்கொத்தாக கொலைசெய்தும் சித்திரவதைக்குட்படுத்தியும் அட்டூழியங் களை அரங்கேற்றியதன் பின்னணியிலுள்ள மியன்மாரின் சர்ச்சைக்குரிய கடும்போக்கு பெளத்த அமைப்பான 969 என்ற அமைப்பின் ஸ்தாபக தலைவர் அ´ன் விராத்து தேரர் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய அசன் விராத்து தேரர், முஸ்லிம் களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல தொடர்ந்தும் இலங்கையின் பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்கவுள்ளதாகவும் மாநாட்டில் விராத்து தேரர் தெரிவித்திருந்தார்.

அளுத்கம கலவரத்தில் சிந்திய இரத்தத்தின் வடுக்கள் இன்னமும் மனங்களில் பேரச்சமாக குடிகொண்டுள்ள நிலையில் அஸின் விராது தேரரின் கூற்றுக்கள் இந் நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மத்தியில் குறிப்பாக முஸ்லிம்களிடையே பாரிய உளவியல் தாக்கத்திற்கு வித்திட வழிவகுக்கக்கூடியதுமட்டுமன்றி எதிர்காலத்தில் நினைத் தும் பார்க்காத பாரிய அசம்பாவிதங்கள் தோற்றுவிக்கப்படக் கூடிய ஏதுநிலைகளையும் புறக்கணிக்கமுடியாது.

அளுத்தகம கலவரத்தின் பின்னர் அமைக்கப்படுமென ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்ட விசேட குழு இன்னமும் அமைக்கப்படாத நிலையிலும் அங்கு அழித்தொழிக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட கட்டடங்கள், சொத்துக்கள் இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் நிலையிலும் அங்கு ஊடகவிய லாளர்கள் சென்று தகவல் திரட்டுவதற்கு தற்போது இராணு வத்தினரின் அனுமதி மறுக்கப்படும் நிலையிலும் சாட்சியங் கள் இல்லாமல் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படும் நிலையிலும் பொதுபலசேனாவின் தற்போதைய மாநாட்டை யும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை – எச்சரிக்கைகளை யும் எளிதாகக் கருதிவிடமுடியாது.

இந்த மாநாட்டில் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்துவருவதாகவும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை உறுதிப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங் கப்போவதாகவும் பொது பல சேனா அமைப்பின் தலைவர் கள் இங்கு தெரிவித்தனர்.

இங்கு பேசிய பொது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான திலந்த விதானகே, இலங்கையின் பெயரை சிங்கள அரசு என்று மாற்ற வேண்டும் என்றும் இலங்கை யிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம் களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொதுபல சேனாவின் கடும்போக்கின் அடையாளமாக பார்க்கப்படும் கலபொட அத்தே ஞானசார தேரர், அஸின் விராது தேரருக்கு விஸா அனுமதிகொடுக்கக்கூடாது எனக் கூறுவதற்கு முஸ்லிம் அமைப்புக்களுக்கு என்ன அருகதை உள்ளதெனக் கேள்வியயழுப்பியதுடன் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார்.

இலங்கையின் தேசியக் கொடியில் பல்லினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களை மாற்றி தனிச் சிங்கள அடையாளத்தை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான அரசியல் நடவடிக்கைளில் இறங்கப் போவதாகவும் தங்களின் திட்டங்களை பொதுபலசேனா அமைப்பு இங்கு வெளியிட்டது.

முஸ்லிம் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படாமல் அன்றேல் அலட்சியமாக கருதப்பட்டு பொது பலசேனா மாநாட்டில் மியன்மாரின் கடும்போக்கு அஸின் விராது தேரர் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டமையும் பொது பலசேனாவின் அதிரடி அறிவிப்புக்களும் எச்சரிக்கையும் அடுத்துவரும் காலப்பகுதிகள் தொடர்பான ஐயப்பாடுகளைத் தருகின்றன. அளுத்கம சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக எத்தனையோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அவை தட்டிக்கழிக்கப் பட்டதன் விளைவை முஸ்லிம் மக்கள் அனுபவிக்கநேர்ந்

தது. தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத்தவறின் பாதிக்கப்படப்போவது அனைத்து இனமக்களுமே என்பதை இந்த அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

http://sudaroli.com/?p=3694

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.