Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமைதிப் பேச்சுக்கு ஆபத்து?

Featured Replies

இலங்கை அமைதிப் பேச்சுக்கு ஆபத்து.

----------------------------------

இலங்கையில் ராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமைதிப் பேச்சில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று புலிகள் அமைப்பு நார்வே சிறப்புத் துìதருக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறது.

அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் பெரிய தாக்குதலை நடத்த ராணுவம் ஆயத்தமாகி வருவதாகவும் அதை உடனடியாகப் பார்வை யிடும்படி அந்த அமைப்பு அமைதிக் கண்காணிப் புக் குழுவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வேளையில் இவ்வேளையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கை யில் இந்த மாத அமைதிப் பேச்சு நடக்குமா என்பது சந்தேகமாகி இருக்கிறது.

இலங்கையின் அரசாங்கத்தையும் புலிகள் தரப்பையும் அமைதிப் மேசைக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் முயற்சி மேற்கொண்டு இருந்த நார்வே சிறப்புத் துìதர் பௌவர், இந்தியா வுக்குச் சென்று இலங்கை நிலவரத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஐந்து கிலோ மீட்டர் துìரத்திற்கு ராணுவம் முன் னேறிச் சென்றுள்ளதாகச் சனிக்கிழமை அதிகாரி களை மேற்கோள் காட்டி ராய்ட்டர் செய்திகள் தெரிவித்தன.

ராணுவத்தினர் தமது தாக்குதல்களைத் தொடர்ந்தால் யுத்த நிறுத்தத்தை தாங்கள் முழுமையாக வாபஸ்பெற நேரிடுமென புலிகள் எச்சரித்திருந்தனர். அதேசமயம் புலிகள் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவது தமது உரிமையென அரசாங்கம் கூறுகிறது.

இந்தச் சூழலில் இலங்கை ராணுவம் யாழ்ப் பாணத்தில் பெரிய அளவில் தாக்குதலை நடத்த ஆயத்தமாகிறது. தென்மராச்சி வடமராச்சிப் பகுதிகளில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப் படுகிறது என்று விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராணுவத்தின் இந்தச் செயலை கண்காணிப்புக் குழுவினர் நேரடியாகப் பார்வையிட வேண்டும் என்று தமிழீழ விடு தலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு அவசர கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் நேற்று தெரிவித்ததாக தமிழ்நெட் இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.

நன்£கொடை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது போர் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வடகிழக்கே 220 கிமீ தொலைவில் இருக்கும் வாழைச்சேனி என்ற ஊரில் மருத்துவமனை சவக்கிடங்கு ஒன்றில் விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் போராளிகளின் 12 உடல்களை அடையாளம் காண பொதுமக்களை அனுமதிக்கும் ராணுவத்தினர். துர்நாற்றம் காரணமாக வாயை மூடிக் கொண்டு இருக்கிறார் இந்த வீரர். மோதலில் 50 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக புலிகள் அமைப்பு தெரிவிக் கிறது. ஆனால் புலிகள் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவம் கூறுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.