Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசுக்கும் எதிரான சேறுபூசும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கிறன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசுக்கும் எதிரான சேறுபூசும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கிறன

 

 
 
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சிறப்பான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  தெரிவித்தார். 
tissa-witharana_1.jpg
 
ஆனால், இதனை கவனத்தில் கொள்ளாது அரச சார்பற்ற நிறுவனங்கள் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
 
இது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்;
 
அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சேறு பூசும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஓர் ஆக்கம் தான் ஐ.நா. மனித உரிமை பேரவைக் குழுக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களாகும்.
 
மேற்குலக நாடுகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அரசுக்கு எதிராக சேறு பூசுவதே இக் குழுக்களின் திட்டமாகும்.
 
நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பல்வறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது. அதேவேளை, இனங்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் அரச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
விசேடமாக இவ்வேலைத் திட்டங்களை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி விசேட அமைச்சரவை உப குழுவொன்றையும் நியமித்துள்ளார்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
 
வடக்கில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
 
எனவே, அரச சார்பற்ற நிறுவனங்கள் சர்வதேச மன்னிப்புச் சபை முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லையென்றும் சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.