Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா ஜாமீன் மனு 14ஆம் தேதி விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 14ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 14வது நாளாக சிறையில் உள்ளார்.

சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமார், திவாகர், செல்வக்குமார், அன்புக்கரசு, ஜெயராமன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்த சிறைக்கு சென்றனர். இவர்களில் நவநீதகிருஷ்ணன், அசோகன், பரணிகுமார், செந்தில் உள்பட 5 பேர் மட்டுமே ஜெயலலிதாவை சந்தித்து சுமார் 3½ மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

மேலும், பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவரங்கள், கர்நாடக நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக விளக்கி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் இருந்தனர். ஜெயலலிதா தங்கியுள்ள அறையில் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சந்தித்த தகவலை கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. உறுதிப்படுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவை சந்தித்த நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் டெல்லிக்கு விரைந்தனர். அங்கு நேற்று மாலை சுமார் 5.40 மணியளவில் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஜெயலலிதாவின் உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டார் எனவும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், சசிலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் இன்று (10ஆம் தேதி) காலை உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்களும் வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. 4 பேரின் ஜாமீன் மனுக்களும் தனித்தனியாக விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

வரும் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்குள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெறும் முயற்சியில் என அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் தீவிரம் காட்டி வருகின்ற

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33350

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.