Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல மில்லியன் யூரோ சொத்துக்களை KPயிடம் இருந்து மடக்கும் அரசாங்க கனவு கலைந்து போனது என்கிறார் மங்கள:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-

mangala-samaraweea_CI.jpg

ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சொத்துக்கள் முடக்கமும் நீக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்தது, பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சொத்துக்கள் கே.பியிடமேயுள்ளன, பிரபாகரன் திரும்பி வந்து உரிமை கோரப்போவதில்லை என்பதும் அரசிற்க்கு தெரியும்,

கே.பி ஊடாக அந்த சொத்துக்களை தாங்கள் அனுபவிக்கலாம் என எதிர்பார்த்தே அரசு தடைநீக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது எனஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர  குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன், விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடகளில் பெருமளவு சொத்துக்கள் உள்ளது.   இந்த சொத்துக்கள் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்பட்டதால் இதனை கட்டுப்படுத்தவேண்டிய தேவை காணப்பட்டது.

முக தீவிரமான முயற்சிகளின் பின்னரே 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்தது, சொத்துக்களை முடக்கியது. பலத்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் காப்பாற்ற தவறியுள்ளது.

ஆரசாங்கத்திடம் ஒழுங்கான வெளிவிவகார கொள்கை இல்லாததே அதற்கு காரணம்,

கே.பி, கருணா போன்றவர்களுக்கு ஆடம்பரவ  வாழ்க்கை வழங்கப்பட்டுள்ள அதேவேளை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டடின் பெயரில் அப்பாவி தமிழ்மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதன் மூலம் உலகிற்க்கு இலங்கை அரசாங்கம் தெரிவிக்கும் செய்தி என்ன? இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் அரசசார்பற்ற அமைப்புகளை நடத்துவதற்க்கு அரசாங்கம் அனுமதியளித்துவிட்டு , உலக நாடுகள் தடைவிதிக்கவேண்டும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

விடுதலைப்புலிகளின் மீதான தடை தொடர்ந்து ஜரோப்பாவில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் வெளிவிவகார அமைச்சு எடுக்கவில்லை , இதற்கான காரணமுள்ளது, தடைகள் நீக்கப்பட்டால், சொத்துக்கள் முடக்கமும் நீக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்தது, பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சொத்துக்கள் கே.பியிடமேயுள்ளன, பிரபாகரன் திரும்பி வந்து உரிமை கோரப்போவதில்லை என்பதும் அரசிற்க்கு தெரியும்,

கே.பி ஊடாக அந்த சொத்துக்களை தாங்கள் அனுபவிக்கலாம் என எதிர்பார்த்தே அரசு தடைநீக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112653/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின கொஞ்சப் பேர் பங்கு பிரிப்புன்னு அடிபடுறாங்கள்.. அங்கின கொஞ்சப் பேர் எப்படா தடைநீங்கும்.. சொத்தைப் புடுங்குவம் என்று நிக்கிறாங்க.

 

எல்லாமே தமிழ் மக்களின் சொத்துக்கள் தாம். அவை எப்படியோ தமிழ் மக்களைப் போய் சேர்ந்தால் சரி. சிங்களவன் கைக்குப் போகக் கூடாது..!!! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.