Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸ் தலைமை வகிக்கும் நாள் வரலாம்: ப.சிதம்பரம்

Featured Replies

chidambaram_4_2148108h.jpg
ப.சிதம்பரம் | கோப்புப் படம்

நேரு குடும்பத்தைச் சேராதவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் நாள் வரலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அதிகம் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்; கறுப்புப் பண விவகாரத்தில் பாஜக அரசு மீது அவர் கடுமையாக சாடியுள்ளார்.

 

தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஜெய்ப்பூர் மாநாட்டில், ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்த முடிவு சரியானதுதான்.

தலைமையைப் பொறுத்தவரை, எனது தலைமுறையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காங்கிரஸ் தலைவர் என்றால் அது சோனியா காந்திதான். இளம் தலைமுறையினரிடம் ராகுல் காந்தி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். மற்ற தலைவர்கள் வளரக்கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல.

 

காங்கிரஸ் தலைமையிடம் செயல் வழிமுறை இருக்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு உரிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். அதன் மூலம் உண்மையான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும்.

சோனியாவும் ராகுல் காந்தியும் அதிக எண்ணிக்கையிலான பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும். ஊடகங்களை அவ்வப்போது சந்திக்க வேண்டும்.

 

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக முடியுமா என்று கேட்கிறீர்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒருநாள் அதுவும் நடக்கும். ஆனால், அது எப்போது நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. காலவரையறை கூற முடியாது. எதன் மீதும் விருப்பம் கொள்வதற்கு எனக்கு அதிக வயதாகிவிட்டது.

 

காங்கிரஸ் கட்சியினரிடம் ஒழுங்கும் கட்டுப்பாடும் குறைவுதான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதனை மேம்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது" என்றார் ப.சிதம்பரம்.

 

கறுப்புப் பண விவகாரம்

அந்தப் பேட்டியில் கறுப்புப் பணம் விவகாரம் குறித்த கேள்விக்கு, "வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடையும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சிலர் தனிப்பட்ட முறையில் பரிவர்த்தனை செய்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சட்டத்தை மீறியுள்ளனர். ஆகவே, தனி மனிதர்கள்தான் அதிர்ச்சியடைய வேண்டும். கட்சி எதற்காக அதிர்ச்சியடைய வேண்டும்.

எந்த முன்னாள் அமைச்சரின் பெயராவது அதில் இடம்பெற்றிருந்தால் அவர்கள்தான் அதிர்ச்சியடைய வேண்டும். அந்தப்பட்டியில் காங்கிரஸ் கட்சியை ஏன் அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும்?

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கு அவருக்கு கட்சி அங்கீகாரம் அளிக்கவில்லை. கறுப்புப் பண பட்டியலை வெளியிட முடியாது எனக் கூறி பாஜகதான் பல்டி அடித்துள்ளது" என்றார் ப.சிதம்பரம்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6530827.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

prisoner-smiley-emoticon.gifchidambaram_4_2148108h.jpg

 

அது, நானாகவும்,
சிலவேளை... எனது, மகனாகவும் இருக்கலாம்.

 

பதவியில்... இருக்கும், போது... செய்த பாவத்துக்கு,
மறியலுக்கு போக வேண்டிய, நேரம் வந்திட்டுது.
கிளம்புங்க..... சார், ஜெயிலுக்கு. prisoner-smiley-emoticon.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை கோவில் மணியகாரர் கூட்டம் மாதிரி.....காங்கிரசுக்கு நேருகுடும்பம்.......ஆராலையும் அசைக்கேலாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.