Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைகிறது தமிழக காங்கிரஸ்: தனிக்கட்சி: ஜி.கே. வாசன் சூசகம்; நவ. 3ல் அறிவிப்பு வெளியிடுகிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன்  தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 3 ஆம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று  திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே  பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஞானதேசிகன் ராஜினாமாவை வரவேற்ற ஜி.கே. வாசன், லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையை அவர் பிரதிபலித்திருப்பதாக கூறியிருந்தார். இதனால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனிடையே ஞானதேசிகனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை இன்று நியமித்து அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் ஜி.கே. வாசன்,

அப்போது காங்கிரஸ் மேலிடம் சரமாரியான குற்றச்சாட்டுக்களை கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் மீது டெல்லி காங்கிரஸ் மேலிடம் பாராமுகத்துடன் இருந்ததாக   கூறினார். மேலும் முக்கிய பிரச்னைகளில் தொண்டர்கள் மற்றும் மாநில உணர்வுகளை கட்சி மேலிடம் உணர்ந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைமை செயல்பாடு சில ஆண்டாக தொண்டர்களின் மனநிலைக்கு மாறாக இருந்தது என்று குற்றம்சாட்டிய வாசன், கட்சியின் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படத்தை வெளியிட யோசித்ததில் உள்நோக்கம் உள்ளது என்றும், அசாதாரணமான சூழலுக்கு பின் காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்தது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்த வாசன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஞானதேசிகன் சிறப்பாகவே செயல்பட்டார் என்றும், தமிழகம் முழுவதும் தலைவர்கள், தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்கிறேன் என்றும் கூறினார்.

த.மா.கா. உதயமாவது நிச்சயம்: நவ.3ல் அறிவிப்பு

இதனையடுத்து தனிக் கட்சியை ஆரம்பிக்கப்போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "வளமான பாரதம்...வலிமையான பாரதம் அமைக்க பாடுபடுவோம். எங்களது  அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 3 ஆம் தேதியன்று பத்திரிகையாளர்களை கூட்டி அறிவிப்பேன்" என்று பதிலளித்தார்.

பிளவுபடுகிறது தமிழக காங்கிரஸ்

இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சியின்   புதிய தலைவராக   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேலூர் ஞானசேகரன் கூறியுள்ளார். வாசன் ஆதரவாளரான அவர் இவ்வாறு கூறியிருப்பது த.மா.கா. உதயமாவது நிச்சயம் என்பதையே உணர்த்துவதாக உள்ளது. இதனால் தமிழக காங்கிரஸில் 1996 ஆம் ஆண்டில் ஏற்பட்டதுபோன்று மீண்டு பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை. ஜி.கே.வாசன், சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு என அவரது ஆதரவாளர்கள் என்பது மட்டுமின்றி சிறு சிறு கோஷ்டி தலைவர்களாகவும் பலர் செயல்படுகிறார்கள். 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், தமிழகத்திலும் காங்கிரசின் நிலை பரிதாபமாகவே இருந்து வருகிறது. இதனால் தனது மற்றும் தன்னை நம்பியுள்ள தனது ஆதரவாளர்களின் எதிர்கால நலனுக்காக, தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வாசன் வந்துள்ளதாக தெரிகிறது.

இதற்கான முன்னோட்டமாகவே ஞானதேசிகன் ராஜினாமா விவகாரம் பார்க்கப்படுகிறது. கட்சியின் உறுப்பினர் அட்டையில் ஜி.கே. மூப்பனார் படம் போடாதது குறித்து தம்மை காங்கிரஸ மேலிடம் தொடர்பு கொண்டு பேசும் என எதிர்பார்த்த ஜி.கே. வாசனுக்கு, அவ்வாறு நடக்காதது ஏமாற்றமாகவே அமைந்துவிட்டது. இதன்காரணமாவே இனியும் காங்கிரஸில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும்விதமாக, தனிக்கட்சி தொடங்குவது பற்றி ஜி.கே.வாசன் இன்று தனது அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நாளை கோவை செல்லும் வாசன், அவினாசியில் கோவை மண்டல ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். திங்கட்கிழமை மீண்டும் சென்னையில் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அன்றைய தினமே, இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததைப்போன்று, தனிக்கட்சிக்கான அறிவிப்பை வெளியிடலாம் எனத் தெரிகிறது.
  

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=34223

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.