Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்! - ஸ்மிரிதி இரானி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mritiirani-200-seithy-india.jpg

இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானியைச் சந்தித்து இந்தி மொழி மற்றும் இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடத் திட்டங்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

http://seithy.com/breifNews.php?newsID=120237&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணா காலத்தில், இந்தி திணிப்பு வந்த போது.....
அப்போ... இளமையாக இருந்த, கருணாநிதி, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, போராட்டம் நடத்தி.... இந்தி திணிப்பை நிறுத்தியவர்.

 

இப்போ அவரின், வாரிசுகள்... ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, உண்டியல்நிதி போன்றவர்களும்....
பேரப் பிள்ளைகளான... தயாநிதி, கலாநிதி மாறன் போன்றவர்களும்.....

தண்டவாளத்தில் தலை வைக்க, புறப்பட வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடி பட்டமெடுத்த பொண்ணுதானே ...கட்டாயம் அமுல்படுத்தும்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன... இழவோ...
தமிழ் நாட்டு சனம், எல்லாம் இந்தி திணிப்பால்...
தமிழ் விளங்காமல். "சன் ரிவி" ,"கலைஞ்சர் ரிவி" யையும் பார்க்காமல் விட்டால், என்ன கதி?
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியைச் கூழ கருமேகங்கள் திரள முயற்சிக்கின்றன. தமிழ் ஆர்வலர்கள் விழிப்படைய வேண்டும்.

இந்தி மொழியை அனைவரும் கற்கவும் மேம்படுத்தவும் நாடு முழுவதும் இந்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு - அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்.

 

இந்தி மொழியை வளர்க்க வேண்டுமெனில் அதை இந்தி பேசும் மாநிலங்களில் தான் வளர்க்க வேண்டுமே தவிர பிற மாநிலங்களில் அல்ல. இந்தி அல்லாத பிற மாநில மக்களிடம் இருந்து வரி பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் மீதே இந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம்?

 

இப்போது தோன்றிய இந்திக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கும் இந்தி வெறி பிடித்த அரசு பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செழுமை வாய்ந்த தமிழ் மொழிக்கு இந்தி மாநிலங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்குமா ?

 

இந்தி மக்கள் பிற மொழிகளை கற்க வேண்டும் என்று இந்தி அரசு ஏன் கட்டாயப்படுத்துவதில்லை ? இந்தி மக்கள் மட்டும் வாழ்கையில் முன்னேற வேண்டாமா ? எத்தனை ஆண்டுகள் தான் இந்தி மக்கள் இந்தியை மட்டுமே கற்று பின்தங்கியே இருப்பார்கள். பிற மாநில மக்கள் அவர்கள் தாய் மொழியையும் ஆங்கிலமும் கற்று முன்னேறி உள்ளனர். ஆனால் இந்தி மக்கள் மட்டும் முன்னேறவே இல்லை. இந்தி மொழியை கூட உருப்படியாக முன்னேற்றவில்லை. முதலில் இந்தி மக்களை முன்னேற வழிவகை செய்யட்டும் இந்தி அரசு. அதை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத இந்தி மொழியை பிற மாநிலங்களின் மீது திணிப்பது அநீதியானது.

 

இது இந்தி பிரிவினைவாதத்தை தான் உருவாக்கும். மேலும் விரைவில் இந்திக்கு என்று தனி நாடு வேண்டும், அந்த நாட்டில் பிற மொழி பேசுபவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்கள் இந்தி வெறியர்கள். இந்தி அரசும் அதற்கு துணைபோகும். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. இந்திப் பிரிவினைவாத்தை நாம் எதிர்ப்போம், இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவோம்.

 

இராச்குமார் பழனிசாமி

https://www.facebook.com/rajkumar.palaniswamy.5/posts/961207347227449

 

இது தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வின் மொழிக் கொள்கை மற்றும் எதிர்காலத் திட்டம் !

10422480_962863923728458_133043890792654

இந்த செய்தி அவர்களின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. http://organiser.org/Encyc/2013/4/6/427338.aspx

ஏன் பா.ஜ.க அரசு இந்தியை தீவிரமாக இந்திய மக்களிடம் திணிக்க நினைக்கிறது?

முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குவது.

இந்தியை இந்தியாவின் ஒற்றை தேசிய மொழியாக, இணைப்பு மொழியாக அறிவிப்பது.

இந்தியில் உருது மற்றும் பிற மொழிகள் இரண்டறக் கலந்துள்ளதால், பிற மொழிச் சொற்களுக்கு மாற்றாக சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவது.

பின்னர் இந்தியை முழுவதும் சமஸ்கிருத மயமாக்குவது.

முடிவில் சமஸ்கிருத மொழியே இந்தியாவின் ஒற்றை தேசிய மொழியாக, இணைப்பு மொழியாகச் செய்வது.

இந்தத் திட்டத்திற்கு பெரும் தடையாக இருப்பது தமிழகம் மட்டுமே. அதனால் தான் தமிழகத்தில் தீவிரமாக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தமிழர்களை மூளைச் சலவை செய்து அவர்களை வைத்தே இந்தியை வளர்கிறார்கள், திணிக்க முற்படுகிறார்கள்.

இராச்குமார் பழனிசாமி

https://www.facebook.com/photo.php?fbid=962863923728458&set=a.143979972283528.27906.100000145796525&type=1

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.