Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. தரப்பு கோபம் ஏன்? பாஜகவின் நெருக்கடிகள்.. பி.வி.ஆச்சார்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

Featured Replies

ஜெ. தரப்பு கோபம் ஏன்? பாஜகவின் நெருக்கடிகள்.. பி.வி.ஆச்சார்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

 

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தம் மீது ஜெயலலிதா தரப்பு ஏன் கோபமாக இருந்து மிரட்டியது என்பது குறித்தும் பாரதிய ஜனதா எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்தும் முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தமது சுயசரிதை புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஓராண்டு காலம் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் பி.வி. ஆச்சார்யா. இவர் தமது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

 

இப்புத்தகம் பெங்களூரில் நேற்று வெளியிடப்பட்டது. ஜெ. தரப்பு கோபம் ஏன்? பாஜகவின் நெருக்கடிகள்.. பி.வி.ஆச்சார்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் இந்தப் புத்தகத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 'அனுபவங்களையும்' பதிவு செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது. அதில் நான் சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 19.2.2005ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டேன். இந்த வழக்கில் நீதிக்காக நான் வாதாடுவதை இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். ஆனால், நான் அரசு தரப்பு வழக்கறிஞராக எனது பணியை செய்தபோது, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தேன்.

 

ஜெ. தரப்பு என்னை மிரட்டியது இதற்காகத்தான்... பி.வி.ஆச்சார்யா

 

 

குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்த ஜெயலலிதாவை நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தினேன். அவர் எழுத்து மூலமாக அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். குற்றவியல் நடைமுறை சட்டம் 313வது பிரிவின்படி குற்றவாளி நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நான் நீதிமன்றத்திடம் வலியுறுத்தினேன். ஜெயலலிதா தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி எழுத்து மூலமாக கொடுப்பதாகக் கூறினர். நான் ஏற்கவில்லை. பின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பதிலளிப்பதாக கூறினார்கள். அதையும் நான் ஏற்காமல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறினேன். எனது வேண்டுகோளை ஏற்று அப்போது தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்த மல்லிகார்ஜுனைய்யா, குற்றவாளிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 

அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு விஷயங்களை மாநில அரசு கவனிக்கும் என்று கூறி, அரசு வழக்கறிஞருக்கு உதவும் வகையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை ஏற்று ஜெயலலிதா இரண்டு நாள் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே மீண்டும் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

மீண்டும் இரண்டு நாள் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இதன் காரணமாக என் மீது கோபம் அதிகரித்தது, ஜெயலலிதா தரப்பினரிடமிருந்து எனக்கு பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் வந்தன. இதுதவிர அப்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசிடமிருந்தும் அதிக நெருக்கடிகள் வந்தது. அதை பார்க்கும்போது ஆட்சியாளர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இருப்பினும் தொடர்ந்து நான் வழக்கில் வாதாடி வந்தேன்.

 

நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்ய வைத்த பாஜக - பி.வி. ஆச்சார்யா

 

இந்நிலையில் 6.8.2011ம் அன்று கர்நாடக மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக 5வது முறையாக நியமிக்கப்பட்டேன். இச்சமயத்தில் என்னை பழிவாங்கும் விதத்தில் நான் மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரணை நடத்திய நீதிமன்றம், பொய்யாக வழக்கு தொடர்ந்திருப்பதை உறுதி செய்து, வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ50 ஆயிரம் அபராதமும் விதித்தது. இந்த சமயத்தில் அட்வகேட் ஜெனரல் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகிய இரு பொறுப்புகளில் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்யுமாறு மாநில ஆளுநர் வலியுறுத்தினார். இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பாஜக மேலிடம், மாநில அரசு மூலம் நான் வகிக்கும் இரு பதவிகளில், சொத்துக் குவிப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி தந்தது.

 

அதை ஏற்காத நான் 8-2-2012 அன்று அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தேன். இருப்பினும் மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து எனக்கு நெருக்கடிகள் வந்ததை தொடர்ந்து 13-8-2012 அன்று எனது ராஜினாமா கடித்தத்தை அரசுக்கு அனுப்பினேன். எனது ராஜினாமா முடிவினால் ஜெயலலிதா வழக்கில் பாஜக தலையீடு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இதனால் எனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

 

ஆனால், ராஜினாமாவை நான் திரும்பப்பெற விரும்பாததை தொடர்ந்து 17-1-2013 அன்று எனது ராஜினாமாவை அரசு ஏற்றது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நேர்மையாக வாதிட்டு வெற்றி பெற வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்தேன். குற்றவாளிகளும், அப்போது ஆட்சியில் இருந்தவர்களும் கொடுத்த தொல்லை காரணமாக என்னால் லட்சியத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. இவ்வாறு தனது புத்தகத்தில் ஆச்சாரியா குறிப்பிட்டுள்ளார்.

 

வாய்தா வாங்குவது எப்படி என்பதற்கு தனிப் புத்தகமே போடலாம் - பி.வி. ஆச்சார்யா

 

இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பி.வி. ஆச்சார்யா, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முந்தைய பாஜக ஆட்சியாளர்களிடமிருந்தும், குற்றவாளிகள் தரப்பில் இருந்தும் நெருக்கடி வந்தது ஒருபுறம். அதே நேரத்தில் வழக்கை வாய்தா வாங்கி ஒத்திவைத்துக்கொண்டே இருந்தனர். எப்படியெல்லாம் ஒரு வழக்கில் சட்டப்படி வாய்தா வாங்க முடியும் என்பதை இந்த வழக்கை பார்த்து அறிந்து கொள்ளலாம். வாய்தா வாங்கியதையே வைத்து 'ஒத்திவைப்பு சட்டம்" என்ற பெயரில் தனி புத்தகமாக வெளியிடலாம். அந்த அளவுக்கு இந்த வழக்கில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் அப்படி ஒரு புத்தகம் வெளியிட்டால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுவார்கள் என்றார்.

 

http://tamil.oneindia.com/news/tamilnadu/b-v-acharya-slams-bjp-perssure-jaya-sset-case-3-214930.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள்: முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா குற்றச்சாட்டு
 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடிய என்னை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும், வழக்கி லிருந்து விலகுமாறு பாஜக அழுத்தம் கொடுத்தது என்றும் பி.வி. ஆச்சார்யா தனது சுயசரிதை புத்தகத்தில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த பி.வி.ஆச்சார்யா (82), சுமார் 60 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வ‌ருகிறார். நேர்மையும், கண்டிப்பும் மிக்கவர் என வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படும் ஆச்சார்யா, 5 முறை கர்நாடக மாநில தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ள இவர், கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி னார்.

மூத்த வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா "All from memory" என்ற பெயரில் தன‌து சுயசரிதையை எழுதியுள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா புத்தகத்தை வெளியிட, மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் பெற்றுக்கொண்டார்.

 

வாய்தாவுக்கே தனி நூல் எழுதலாம்

 

இந்த சுயசரிதையில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து சுமார் 14 பக்கங்களும், 30-க்கும் மேற் பட்ட பின் இணைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் எழுதி இருக்கும் தகவல்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய வழக்கறிஞர் வாழ்க்கையில் சந்தித்த பரபரப்பான வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் எனக்கு வழங்கிய பணியை நேர்மையுடன் செய்தேன். வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு பலமுறை வாய்தா வாங்கியுள்ளது. வாய்தா வாங்கப் பட்ட விதத்தையும், இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்ட விதத்தையும் பற்றி தனி நூலே எழுதலாம். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி வாய்தா வாங்கினார்கள். அது பற்றிய நூலுக்கு 'வாய்தா சட்டம்' என பெயர் சூட்டலாம். ஆனால் அந்த நூலை படித்து எதிர்காலத்தில் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

 

ஜெயலலிதா ஆதரவாளர்களின் மிரட்டல்

 

அதேபோல இந்த வழக்கில் நான் நேர்மையாக செயல்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் என்னை தொலைபேசியில் பல முறை மிரட்டினர். சில முறை நேரிலும் மிரட்டினர். மேலும் இவ்வழக்கிலிருந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்தது. இதனால் அப்போதைய கர்நாடகா பாஜக அரசும் எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

இதுமட்டுமல்லாமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் என் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தார்கள். லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அதே நேரத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய் என நீதிமன்றம் சொல்லும் வரை அமைதி காத்தேன்.

எனது நேர்மைக்கு கிடைத்த பலனாக, என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. அதன் பிறகு வெவ்வேறு வழிகளில் எனக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறிய அழுத்தத்தின் காரணமாக ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து ராஜினாமா செய்தேன்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை மோசம்

 

சொத்துக் குவிப்பு வழக்கு நடந்துக்கொண்டிருந்தபோது ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார். அதனால் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். அவர்கள் அச்சத்தின் காரணமாகவே அவ்வாறு பல்டி அடித்தனர்.

அதேபோல வழக்கை நடத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அணுகுமுறையிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் முறையாக வழக்கை நடத்த தவறினார்கள். மொத்தத்தில் ஜெயலலிதாவின் வழக்கிலிருந்து பல அனுபவங்களை பெற்றுக்கொண்டேன். இவ்வாறு ஆச்சார்யா கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article6604706.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.