Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிச்சலும் புடுங்கல்களும் ...!!!!

Featured Replies

18k3d9umcnjiqjpg.jpg
------------------------------------

விமர்சனத்துக்கும் குறைபிடிக்கிறதுக்கும் இடையில ஒரு நூல் இடைவெளிதான் இருக்கு.
இதை தமிழர்களாகிய நாங்கள் சரியா விளங்கிக்கொள்ளாத வில்லங்கமான கால கட்டத்தில் வாழ்கிறோம்.

புலிகளின் காலகட்டத்தில் மற்ற இயக்கங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் பார்க்க தவறியது போலவே இப்போது பிற அரசியல், ஆயுத இயக்கங்கள் முன்வைக்கும் சில கருத்தியல் பார்வைகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கமறுக்கும் பிழையான காரியங்களை நாம் செய்வதாக உணர்கிறோம்.

 

ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது.அது தமிழர்நலன் சார்ந்ததா? இல்லை அவர்களின் சுயலாப அரசியல் பார்வையா? என்பதற்கு அப்பால் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்பதை மறந்துவிடுகிறோம்.

ஆளும் அரசோடு சேர்ந்து இயங்கும் ஆயுத,அரசியல் தமிழ் இயக்கங்களினை "துரோகிகள்" என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அடக்கி அவர்களின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் குறை கூறுவது வேறு.அவர்களின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேறு.

குறைகூறலுக்கும் விமர்சனத்துக்கும் இடையிலான "நூல் இடைவெளியை" புரிந்துகொள்ளும் நிலையில் யாரும் இல்லை என்பதே சமகால யாதார்த்தமாக உள்ளது.

இந்தப்பிரச்சினை இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாக தமிழ்சமூகத்திடம் உள்ள பெருங்குறையாக உள்ளது.

புலிகளின் காலத்தில் கருத்துச்சுதந்திரம் இல்லை என குறை கூறிய பல அமைப்புகள் இன்று அதே செயலை தாங்களும் செய்வது தவறு என்பதை உணரும் பக்குவத்தில் இல்லை என்பது கசப்பான உண்மை.

 

30 வருடங்களுக்கு முன்னர் ஆயுதப்போராட்டம் ஆரம்பமான போது பல தமிழ் இளையோர் போராட ஆயுதம் தூக்கினார்கள்.
அவர்களின் நோக்கம் ஒன்றாக இருந்தபோதும் கொள்கை அடிப்படையில் பல அமைப்புகள் உருவாகின.

இதில் மனவேதனையான சம்பவம் என்ன என்றால் , ஒரு காலகட்டத்தில் சில அமைப்புகள் தங்களின் நோக்கம்,இலட்சியம் இதை மறந்து கொள்கை அடிப்படையில் செயற்பட ஆரம்பித்தார்கள்.

 

"என்ர பாதையில நான் போறன், உன்ர பாதையில நீ போ முடிவில சந்திப்பம்" என்று சொல்லிப்பிரிந்துபோனவர்கள் அப்படி சொன்னபடி செய்திருந்தால் தமிழர்களுக்கான விடிவு பல ஆண்டுகளுக்கு முன்னமே கிடைத்திருக்கும்.ஆனால் நடந்ததோ வேறு.

 

கடந்த கால வரலாறுகளும் அனுபவங்களும் கசப்பானவை.அவற்றை இரைமீட்டி மணந்துபார்ப்பது அசிங்கம், தேவையற்றது.

 

"சகோதரப்படுகொலை", "களையெடுப்பு", "தண்டனை" இந்த மூன்றுக்குமான நூல் இடைவெளியினையும் புரிந்துகொள்வது என்பதும் மிகக்கடினம்.இவற்றினை வரையறுத்து விளங்கப்படுத்துவதும் கடினம்.சிலவற்றினை நியாயப்படுத்தவும் முடியாது.சிலவற்றினை பிழைபிடிப்பதும் ஏலாது.ஏனெனில் சந்தர்ப்ப சூழ்நிலைகள்,நேரம்,காலம் தான் தீர்மனித்தன பலவற்றினை.

 

நாற்சந்தியில் பிரிந்து நாலுபக்கமாய் ஓடி மீண்டும் ஒரு நாற்சந்தியில் வந்து நிற்கிறோம்.

கடந்தகால கசப்பான அனுபவங்களினை இரைமீட்டி காறித்துப்பு கக்கி அதை கையில் எடுத்து நாறி மணக்க அதைப்பற்றி பேசுவதற்குதான் இங்கே ஆயிரம் பேர் ஆயத்தமாக இருக்கிறார்கள். இது தேவையா???

 

அவனை இவை கடிக்க, இவனை அவன் கடிக்க..
அவர்களை இவர்கள் ஏச..
இவர்கள் அவர்களை ஏச....

இப்படியே போகுது எங்கட நிலமை.

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நல்லது செய்து அதை எழுதினா, ஒரு குறூப் உடன "துரோகி" எண்டுறாங்கள்.

சரி பிழைசெய்யுறீங்கள் எண்டு விமர்சிச்சா அதுக்கும் ஒரு "குறூப்" கடுப்பாகுறாங்கள்.

ஈபிடிபி ஏதேனும் நல்லது செய்து அதை எழுதப்போனா உடன இன்னொரு குறூப் "துரோகி" எண்டுறாங்கள்.

அரசாங்கம் ஏதேனும் பிழை செய்து அதை சுட்டிக்காட வெளிக்கிட்டா இன்னோரு "குறூப்" கடுப்பாகுது.

 

இப்பிடி நல்லது கெட்டது எதை எழுதினாலும் கடுப்பாகிற "குறூப்புகள்" உள்ளவரை என்னசெய்வது என தெரியாமல் உள்ளது.

 

மேற்கத்திய நாடுகள் ஒருசிலவற்றில் விமர்சனங்களை விமர்சனங்களாலேயே எதிர்கொள்வார்கள்.ஒரு சாதாரண குடிமகன் ஒரு அரச தலைவரை வெளிப்படையாக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கமுடியும்.அது உரிமை.

 

ஆனால் எங்கட நிலமை வேறு.சாதாரண நகரசபை தலைவரின் செயற்பாடுகளை நீங்கள் விமர்சிக்கமுடியாது. ஏன் கனக்க ஒரு பள்ளிக்கூட அதிபரைப்பற்றி கூட உங்களால் கதைக்க முடியாது.அட அதை விடுங்கோ ஏன் ஒரு சாதாரண பாடசாலை ரீச்சரை கூட உங்களால் கேள்வி கேட்கமுடியாது.காரணம் அவருக்கு பின்னால ஒரு அரசியல், ஆயுத இயக்கம் இருக்கும்.கேள்வி கேட்டா "வீண் வில்லங்கம்" வரும்.

இது இப்ப இல்லை கனகாலமா இருக்கு.

 

புலிகள் இருந்த காலத்திலை உதுகள் இல்லையோ என கேள்வி வரலாம்.இருந்தது.
விமர்சனம் செய்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள் தான்.
அதை குறைகூறியவர்கள் மீண்டும் அதே செயலை செய்வதுதான் கேவலமாக உள்ளது.

 

ஏதோ ஒரு பாதையில் அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப தமிழின விடிவிற்காய் போராடுவோம்.ஏனெண்டால் தமிழனால ஒண்டா போராடவும் ஏலாது.ஒரே கொள்கையில நிக்கவும் ஏலாது.அதுதான் கடந்தகால வரலாறு.

அது எல்லாக்காலத்துக்கும் தமிழினத்துக்கு பொருந்தும்.

யூதர்களைப்போல தமிழர்களும் ஒன்றாக இணைஞ்சு போராடுவோம் என்பதெல்லாம் விசர்க்கதை. அது ஒருகாலத்திலும் நடவாத காரியம்.

 

முடிஞ்சா அவனவன் தனித்தனியா போராடுங்கோ...
இலட்சியம், நோக்கம் ஒண்டா இருக்கட்டும்.
கொள்கைகள் ,பாதைகள் வேறு வேறா இருந்தாலும் பறுவாயில்லை.

ஆனால் கடைசியா முடியிற இடம் ஒண்டா இருக்கட்டும்.

 

இல்லை உப்பிடியே தனித்தனியா குறுப் குறூப்பா பிரிஞ்சு தமிழினத்துக்காய் போரடிக்களைச்சு கடைசியில "இனி ஒண்டா சேந்து ஓடுவம்" எண்டு ஒரு நிலை வந்தா(?)ஒண்டா சேர்ந்து போராடுவம்.
அதுவரைக்கும் ஆளாளை மாறி மாறி கடிபடுறதை நிப்பாட்டுவம்.
ஏனெண்டால் நாங்கள் எல்லாரும் சகோதரங்கள்,மாமன்,மச்சான் உறவுகள்...

 

சரி நடந்தது நடந்துபோட்டு ,எல்லாம் முடிஞ்சுபோட்டுது இனியெண்டாலும் ஒண்டா இருந்து நிம்மதியான நிரந்தரமான விடிவிற்காக உழைப்பம் எண்ட மனநினலையை ஒவ்வொரு தமிழனும் தன் மனதுக்குக்குள்ள எடுக்கும் வரைக்கும் பிச்சலும் புடுங்கல்களும் தொடர்கதையே...!!!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.