Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் தமிழர் இயக்க முதன்மையாளர் சீமான், தந்தி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக - மனோ கணேசன்

Featured Replies

இது ஒருசிலரை நோக்கி முன் வைக்கப்பட்ட கருத்தாயினும் இதன் உள்ளடக்கம் கருதி இங்கு இணைக்கிறேன்.

------------------------------------------------------------

நாம் தமிழர் இயக்க முதன்மையாளர் சீமான், தந்தி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஆரோக்கியமான வாதபிரதிவாதங்களை நடத்திய நண்பர்கள் <Ramachandren Sanath; Shan Prabhakaran; Saravanaraj Nadaraja; Amirthanayagam Nixon; பழ. நாகேந்திரன்; Chinniah Ratnavadivel; Joseph George Stephan; Thiyagarajah Ravi; Sivalingam Sivakumaran> ஆகியோர் கவனத்துக்கு;

நமது இந்த கருத்து பரிமாறல்களுக்கு வழியேற்படுத்திய நண்பர் சீமானுக்கு நன்றிதான் கூற வேண்டும். சீமான் என் தனிப்பட்ட நண்பர். நேரடி அரசியலுக்கு அவர் வருவதற்கு முன்னர் இருந்தே அவருக்கும், எனக்கும் நட்பு உண்டு. நானறிந்தவரையில், அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே இலங்கை மலையக மக்களை அவமானப்படுத்தியுள்ளார் என நான் நினைக்கவில்லை. ஆகவேதான் இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற போராட்டங்களில் மலையக தமிழர் அளித்துள்ள பங்களிப்புகள் பற்றியும், வடகிழக்கிற்கு வெளியே மலையகத்தில் நடைபெற்றுள்ள மண்ணுரிமை போராட்டங்கள் பற்றியும், அவற்றில் சிவனு லட்சுமணன் முதற்கொண்டு உயிரிழந்த மலையக மைந்தர்கள் பற்றியும் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அதைதான் நான் இங்கே கூறினேன்.

யோசித்து பார்த்தால், இந்த மலையக மண்ணுரிமை போராட்டங்கள் பற்றி நம் நாட்டு வடகிழக்கு தமிழர்களுக்கு, குறிப்பாக அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு தூரம் தெரியும்? அது பற்றி அறிந்துகொள்ள அவர்கள் எந்தளவு முயற்சி செய்கிறார்கள்? ஈரோஸ் இயக்க கால கட்டத்தில் அதற்கான ஆர்வமும், அக்கறையும், ஆகவே முயற்சியும் இருந்தன. இப்போதும் அந்த ஆர்வமும், அக்கறையும் வடக்கிலும், கிழக்கிலும், புலம் பெயர்ந்தும் வாழும் இலட்சக்கணக்கான சாதாரண தமிழ் உடன்பிறப்புகளிடம் கண்டிப்பாக உண்டு. என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள நண்பர்கள் மூலமாக இதை நான் நேரடியாக அறிவேன். ஆனால் குறிப்பிட்ட ஒருசிலரை தவிர, ஈழத்தமிழ் அரசியல்வாதிகளிடம் இதுபற்றிய அக்கறை பெரிதும் இல்லை. அதாவது வடக்கு கிழக்குபற்றி தென்னிலங்கை தமிழ் அரசியலரால் காட்டப்படும் அக்கறையுடன் ஒப்பிடும் போது இல்லை. இதையும் நான் நேரடியாக அறிவேன்.

மீரியபெத்தை அனர்த்தம் என்பது ஒரு நிகழ்வு மட்டுமே. அதில் ஆர்வம் காட்டிய தமிழ் அரசியல்வாதிகளை நானே நேரடியாக அங்கு அழைத்து சென்றேன். இதன்மூலம் இந்த அனர்தத்தின் மீது தேசிய பார்வை விழ வேண்டுமென நான் திட்டமிட்டுதான் செய்தேன். அதையும்கூட "உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, அங்கு வந்த வடகிழக்கு அரசியலர்களை கொச்சை படுத்திய மலையக அரசியல்வாதிகளையும் பாருங்கள். இந்த அரசியல்வாதிகள் எங்கும் ஒரே குட்டைகள்தான்.

இதனால்தான் நான் என்னை அரசியல்வாதியாக அல்லாமல் மனிதவுரிமை போராளியாக எப்போதும் கணிக்கின்றேன். என்னைப்பற்றிய கணிப்பு எவருக்கு எப்படி இருந்தாலும், என்னைப்பற்றி எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது அல்லவா? இந்த நொடிவரை நான் அப்படிதான் இயங்கி கொண்டுள்ளேன்.

இன்றைய மலையக தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் பற்றி சீமான் கோபம் கொள்வதில் நியாயம் உண்டு. அந்த கோபத்தை நானும் பறிமாறிக்கொள்கிறேன். உள்ளூரில், இவர்கள் நடத்தும் "அரசியல்" ஒருபுறம் இருக்க, தமிழகத்துக்கு "மலையகம்" பற்றி எவ்வளவு தூரம் இவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்? இந்த கேள்வியை என்னை நோக்கியே நான் கேட்டுக்கொள்ள முடியும். அதற்கான நேர்மை என்னிடம் உண்டு. அதற்கான ஆர்வம் என்னிடம் உண்டு.ஆனால், ஒருநாளில் 18 மணிநேரம் உழைத்தாலும் நேரமில்லை. உண்மையில் அடுத்த முறை தமிழகம் செல்லும் போது இது பற்றி நான் சீமானுடன் உரையாடுவேன். ஆனால், மலையகம் தொடர்பில் உரிய பரப்புரையை தமிழகத்தில் செய்ய தவறியமைக்கு, என்னைவிட "மலையகத்தில்" ஏற்புடைமை அதிகம் கொண்டு, நீண்ட காலம் மலையகத்தில் கோலோச்சும் அரசியலர் பதில் கூற வேண்டும்.

இன்னொன்றையும் இங்கே சொல்லிட வேண்டும். அனர்த்தம் என்பது மனிதாபிமானம் கொண்ட எல்லோரையும் தட்டியெழுப்புகிறது. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த மூன்றாம் நாளே எனது வேண்டுகோளின் பேரில், கொழும்பு புறக்கோட்டை மலையக தமிழ் வர்த்தக இளைஞர்கள் மிக பெருந்தொகை பொருள் சேர்த்து தர, நானே நேரடியாக என் தலைமையில் பாரஊர்திகளை வழிநடத்தி முல்லைத்தீவு வரை சென்று, சூசை உட்பட்ட புலி தலைவர்களிடம் கையளித்தேன். மிகவும் அச்சறுத்தல் மிகுந்த வேளையிலும் இனவுணர்வால் உந்தப்பட்டு நாம் அதை செய்தோம். அதன்பிறகு அதைதொடர்ந்து அத்தகைய நிவாரண பாரஊர்திகள் கொழும்பில் இருந்தும், மலையகத்தில் இருந்தும் பெருந்தொகையில் வடகிழக்கை நோக்கி பறந்தன. இது வரலாறு. ஆகவே இன்றைய மீரியபெத்தை சம்பவம் வரலாற்றில் முதல் சம்பவம் அல்ல.

https://m.facebook.com/story.php?story_fbid=10201916029181518&id=1807807648&ref=bookmark

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மனோ கணேசன்.. தெளிவான பார்வை உங்களுடையது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.