Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலன் கேட்டு சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியரை, பலாத்காரம் செய்த பெங்களூரு நாடி ஜோதிடர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலன் கேட்டு சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியரை, பலாத்காரம் செய்த பெங்களூரு நாடி ஜோதிடர்!

 

பெங்களூரு: நாடி ஜோதிடம் பார்க்க போன ஐடி பெண் ஊழியரை பலாத்காரம் செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹொய்சாலா நகரில் அகஸ்தியர் நாடி ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வருபவர் தாமோதரன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.

22-astrologer-arrested-for-sexually-hara

இவரது கணிப்புகள் சரியாக உள்ளதாக கேள்விப்பட்டுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவரும், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள உலக புகழ் பெற்ற ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியருமான மம்தா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனவே தனது திருமண வரன் குறித்து விளக்கம் கேட்பதற்காக, தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஜோதிடரின் வீட்டுக்கு மம்தா சென்றார். மம்தாவின் அழகில் மயங்கிய தாமோதரன், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று உட்கார செய்துவிட்டு, உடன் வந்த நண்பரை வீட்டுக்கு வெளியே நிற்குமாறு சொல்லியுள்ளார். ஏன் வெளியே போக வேண்டும் என்று அந்த நண்பர் கேட்டதற்கு, ஒருவருக்கு பலன் சொல்லும்போது மற்றொருவர் உடன் இருப்பது தவறு என்று தாமோதரன் கூறியுள்ளார்.

 

நாடி ஜோதிடர்கள் பெரும்பாலும் இப்படித்தான் சொல்வார்கள் என்பதால் தாமோதரனின் பேச்சை நம்பி அந்த நண்பரும் வெளியே போயுள்ளார். இதனிடையே மம்தாவுக்கு பலன் சொல்ல ஆரம்பித்தார் தாமோதரன். பெரும்பாலும் சரியாகவே கணித்து சொல்லியதால் மம்தா மகிழ்ச்சியடைந்தார். முதல் ஒரு மணி நேரம் இப்படி இருந்த நிலையில், புனித தீர்த்தம் என்று கூறி ஒரு தீர்த்தத்தை குடிக்குமாறு மம்தாவிடம் சொல்லியுள்ளார் தாமோதரன். இதை அப்படியே செய்துள்ளார் மம்தா.

 

ஆனால் தீர்த்தத்திற்குள் மயக்க மருந்தோ அல்லது போதை மருந்தோ கலந்திருந்ததால் மம்தா மயக்க நிலைக்கு சாய்ந்தார். அப்போது அவரிடம் தாமோதரன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு வெளியே ஓடிவந்த மம்தா, ஆண் நண்பருடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று தாமோதரனை கைது செய்துள்ளனர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழரான தாமோதரன் வேண்டுமென்ற பழிவாங்கப் பட்டிறுருக்கிறார், மை லோர்ட்.  :o
 
சிலுமிசம், பலாத்காரம் இல்லை, யுவர் ஆனர். அவர் கேட்ட பணம் மிக அதிகமாக இருந்ததால், பணத்தினை தர மறுத்து தகராறு செய்து பொய் புகார் கூறி உள்ளார் எங்கள் தாமோதரன் மேலே, மை லோர்ட்   :icon_mrgreen:
 
இதனை வன்மையாக கண்டிக்கிறோம், யுவர் ஆனர்  :D

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.