Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மோசடிகள் அம்பலப்படுத்தப்படும் - நவீன்

Featured Replies

Navin-thisanayakka_CI.jpg

சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் சீனவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரியளவிலான மோசடிகள் பற்றிய விபரங்களை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நம்ப முடியாத அளவிற்கு மோசடிகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் தலைவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114065/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

சர்வாதிகார ஆட்சியினை வீழ்த்த பொது எதிரணிக்கு சகல விதத்திலும் துணை நிற்பேன்

 

அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கும் மஹிந்த ராஜபக் ஷ அரச குடும்பத்தின் சர்வாதிகாரப் போக்குமே நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காரணம். எனது பைல்கள் ஜனாதிபதியிடம் இருந்தால் இருபத்திநான்கு மணித்தியாலத்தில் என் மீது நடவடிக்கை எடுக்கவும் என தெரிவித்த நவீன் திஸாநாயக்கா சர்வாதிகார ஆட்சியினை வீழ்த்த பொது எதிரணிக்கு சகல விதத்திலும் துணை நிற்பேன் என உறுதியளித்துள்ளார்.

naveen%20disanayeka.JPG

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி நேற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த நவீன் திஸாநாயக ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் இன்றைய தேவை நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதே. அன்று இதே நோக்கத்திற்காக நான் அரசாங்கத்தில் இணைந்தேன். ஏனெனில் அன்றைய சூழ்நிலையில் யுத்தத்தினை முடித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எமக்கு இருந்தது. அரசாங்கத்தில் இருந்து அதை மிகச் சரியாக செய்து முடித்தேன். எனினும் இன்று அதை விட மிக முக்கிய தேவை ஏற்பட்டுள்ளது.

நாம் அரசாங்கத்தில் இருந்தபோது ஜனாதிபதியுடனும் குறித்த சிலருடனும் தொடர்ச்சியாக முரண்பட்டுக் கொண்டிருந்தோம். என்னை நம்பி வாக்களித்த நுவரெலியா தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் என்னால் சேவையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதையும் தாண்டி அரச குடும்பத்தின் சர்வாதிகாரப்போக்கு இன்று அரசுக்குள் பலரை கட்டுப்படுத்தி வருகின்றது. எனவே சர்வாதிகாரப் போக்கில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும். சர்வாதிகாரமிக்க நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க பொது எதிரணியுடன் பயணிக்க தீர்மானித்துள்ளேன்.

எனக்கு இருப்பது பொதுக்கொள்கை, அது முழுநாட்டினையும் பாதுகாக்கவும் சரியான ஆட்சி முறைமையினை தீர்மானிக்கவுமே பயன்படும். அரசாங்கத்தின் ஊழல், கொள்ளை, அடக்குமுறை தலைமைத்துவத்தின் கீழ் எம்மைப் போன்றவர்களினால் சுதந்திரமாக செயற்பட முடியாது. எனவேதான் எமது தலைவர் ரணிலை மீண்டும் நாடியுள்ளேன். எனவே இன்றில் இருந்து நான் எனது மக்களை பாதுகாக்க பொது எதிரணியுடன் கைகோர்த்து மைதிரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சகல விதத்திலும் உதவுவேன்.

அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களின் பைல்களை ஜனாதிபதி கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுகின்றார். என் மீதும் புகார்கள் இருக்குமாயின் எனது பைல்களை 24 மணித்தியாலத்தில் உரிய இடத்தில் ஒப்படைத்து என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாததன் காரணத்தினாலேயே நான் தைரியமாக வெளியேறியுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று மிகவும் முக்கியமானதொரு நாள். எம்மை விட்டுப் பிரிந்த எமது உறவுகள் மீண்டும் எம்முடன் இணைந்துள்ளனர். காமினி திஸாநாயகா ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் முக்கிய உறுப்பினர். இன்று நான் ஓர் அரசியல்வாதியாக எனது பணிகளை ஆரம்பிக்க மூல காரணமாக இருந்து வரும் எனது அரசியல் வாழ்க்கையினை ஆரம்பித்து வைத்தவரும் அவரே. எனவே அவருக்கு நான் பல விதத்திலும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆகவே அவருக்கு செய்ய வேண்டிய உதவிகளை அவரின் இரு புதல்வர்களுக்கும் செய்வேன். ஐக்கிய தேசியக் கட்சியை நாடியுள்ள இவர்களை எமது உறவுகளாக பார்த்துக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டார்.
 

 

http://virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர் ஒருத்தர் அண்மையில் இலங்கை போயிருந்தார், அவ்வேளையில் அவரது சிங்கள நண்பர் ஒருத்தர் கூறியது, "நீங்கள் அடுத்தமுறை இலங்கை வருபோது ஒருவேளை இந்நாட்டில் ஜனாதிபதியாக ஒரு சீனப்பிரசையாகவும் இருக்கலாம்" என

  • தொடங்கியவர்

அரசிலிருந்து விலகாமலிருக்க 100 மில்லியன் ரூபா தந்தனர்: சீனாவின் கடனுதவியில் பாரிய கொள்ளை: நவீன் திசாநாயக்க.

 

DSC_1126.jpg

 

அரசாங்கத்தில் இருந்து விலகாமல் இருக்க 100 மில்லியன் ரூபா தந்தனர் எனத் தெரிவித்த நவீன் திஸாநாயக்க, இப் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் அவரினால் நியமிக்கப்படும் விசாரணைக் குழுவிடம் தெரியப்படுத்துவேன் எனவும் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து பெறப்படும் கடனுதவிகளில் பாரிய கொள்ளைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

100 மில்லியன் வழங்கப்பட்டது

நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. என்னைத் தேடி வந்த மூன்று பேர், மேற்படி பணத்தொகையுடன் என்னை அணுகினர். ஆனால் சட்டத்துக்கு முரணான இந்தப் பணத்தை நான் ஏற்க மறுத்து விட்டேன். மேலும் இந்தப் பணம் அரசாங்கம் சார்பிலேயே வழங்கப்பட்டது. பணம் வழங்கியவர்களின் பெயர்களை குறிப்பாக இப்போது கூறமுடியா விட்டாலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் அவரால் நிமிக்கப்படும் விசாரணைக் குழுவிடம் பணம் வழங்க முற்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்துவேன். மேலும் பணம் வாங்கியவர்களின் பெயர்களும் எமக்குத் தெரியும். அதனை நாம் வெளிக்கொணர்வோம்.

கொள்ளையடிக்கப்படும் சீனாவின் கடனுதவி

சீனாவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளில் பாரிய கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 96 கிலோ மீற்றர் கொண்ட தெற்கு அதிவேக வீதியை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து 490 மில்லியன் டொலர் கடனாகப் பெறப்பட்டது. ஆனால் ஒரு கிலோ மீற்றர் வீதியமைப்பதற்கு குறைந்தது 2 மில்லியன் டொலர்களே செலவாகும். ஆனால் ஒரு கிலோ மீற்றருக்கு 16.49 மில்லியன் டொலர்கள் செலவானதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாரிய கொள்ளையாகும். இந்தப் பணம் யாரால் சூறையாடப்படுகின்றது. உலக நாடுகளிடம் வாங்கும் கடன்களையெல்லாம் எமது எதிர்கால சந்ததியினரே செலுத்த வேண்டும். ஆனால் இவர்கள் கடனாக வாங்கும் பணத்தினை கொள்ளையடிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தை மறந்து விட்டனர்

தேர்தல் பிரச்சாரங்களை மறந்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்பவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அமைச்சர்களுக்கு பணத்தினை வழங்கி கட்சி மாறுவதை தடுக்க முற்படுகின்றனர். நாட்டு மக்களுக்காக செயற்படும் அமைச்சர்களை இவ்வாறு பணத்தைக் காட்டி தடுத்து நிறுத்த முடியாது.  

ஐ.தே.க.வின் வாக்குகள் மீண்டும் சேர்ந்துள்ளன

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கடந்த காலங்களில் பலர் பிரிந்து சென்றனர். தற்போது பலர் வந்து ஒன்றிணைந்துள்ளனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் ஓரிடத்துக்கு சேர்ந்துள்ளன.

விலகியமைக்கு காரணம்

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்தேன். ஆனால் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. மேலும் எனக்கு வழங்கிய அமைச்சுப் பதவியை வைத்து மக்களுக்கு சேவைசெய்ய முடியாதநிலை காணப்பட்டது. இதனை பல தடவைகள் சுட்டிகாட்டிய போதும் அதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தீர்மானத்தை எடுத்தேன்.

தேசப்பற்றுள்ள மைத்திரி

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேசத்தின் மீது மிகுந்து பற்றுக்கொண்டவர். ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியில் 10 வருடங்களுக்கு மேல் பொதுச் செயலாளராக செயற்பட்ட இவர், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என நினைக்கவில்லை. இவர் எடுத்த தீர்மானம் வரவேற்கக் கூடியதாகும். இவர் அரசாங்கத்துடன் இருக்கும் போதே பல பிழைகளை சுட்டிக்காட்டுவார். மேலும் தனது 47 வருட அரசியல் பயணத்தில் எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. எனவே இவருக்கு எதிராக எந்தக் குற்றச் செயல்களையும் சுட்டிகாட்ட முடியாது. 

என்னுடைய ஆதரவு உங்களுக்கு

மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராகக் களமிறங்கிய உடனேயே நான் தொலைபேசி மூலம் 'என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கே" என அறிவித்தேன். இவர் பொது வேட்பாளராகக் களமிறங்கியமை எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. 

சர்வதேச சூழ்ச்சி

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட எதிரணியினர் சர்வதேச சூழ்ச்சிக்கு அமைய தமது அரசியல் பயணத்தை கொண்டு செல்கின்றனர் என அரசாங்கத் தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். தேர்தல் விளம்பரத்திற்காக இவ்வாறு கூறி வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்க அரப்பணிப்புடன் செயற்பட்டவரே மைத்திரிபால சிறிசேன. ஆனால் இன்று அவருக்கு எதிராக இவ்வாறான கதைகள் கூறுவது வருந்தத்தக்கது. 

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத சமயங்களில் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மைத்திரிபால சிறிசேனவே செயற்பட்டார். அவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்படுபவர் என்றால் அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். எனவே இவ்வாறான ஒருவர் நாட்டுக்கு எதிராக தேசத்துரோகியாக செயற்படமாட்டார். நாம் ஒருபோதும் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்பவர்களுடன் இணைய மாட்டோம். எனவே சர்வதேசங்களின் தாளங்களுக்கு மைத்திரிபால சிறிசேன ஆட மாட்டார். 

ரணிலுக்கும் எனக்கும் முரண்பாடுகள் இருந்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தன. தற்போது தீர்வு காணப்பட்டுள்ளன. மக்களின் நலன்கருதி நாம் ஒன்றிணைந்து இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். 

பல அர்ப்பணிப்புகளை செய்தவர் ரணில்

கடந்த கால தேர்தல்களில் பல அர்ப்பணிப்புகளைச் செய்தவரே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. 2005, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக பல தியாகங்களை செய்துள்ளார்.

 

http://virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-100-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.