Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை கிரானைட் கொள்ளையில் சிக்கப்போவது யார்? சகாயம் குழு விசாரணை இன்று துவக்கம்

Featured Replies

Tamil_News_large_1129055.jpg
 
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இன்று துவக்குகிறார்.
 
தமிழகம் முழுவதும் நடந்த, கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. முதற்கட்டமாக, மதுரை கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க, அவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில அதிகாரிகளை, விசாரணைக் குழுவில் இடம்பெற அனுமதிக்கும்படி, சகாயம் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.எனினும், அதுகுறித்து கவலைப்படாமல், சகாயம் விசாரணையை துவக்க முடிவு செய்துள்ளார். நேற்று சென்னையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். இன்று மதுரை செல்கிறார்.
 
இதுகுறித்து, சகாயம் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கூறியதாவது:மதுரையில், கிரானைட் குவாரி முறைகேடால், வேளாண் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறை, கால்நடைத் துறைக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை, இம்முறை விசாரிக்க சகாயம் முடிவு செய்துள்ளார்.இதுகுறித்த விவரங்களை தரும்படி, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சில குளங்களை, கால்வாய்களை மூடியுள்ளனர். இதனால், நீராதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.வனத்தை அழித்து உள்ளனர். இயற்கையை மாசுபடுத்தி உள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட முடியாது. இதுகுறித்தும், விசாரணை நடத்த, சகாயம் திட்டமிட்டு உள்ளார்.
*3ம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை.
*4ம் தேதி, பொதுமக்களுடன் சந்திப்பு.
*சமூக சேவகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், இளைஞர்கள், கிரானைட் கொள்ளை குறித்த ஆவணங்களுடன், சகாயத்தை சந்தித்து, புகார் தெரிவிக்க ஆர்வமாக உள்ளனர். அவர்களை சந்தித்து, புகார் மனுக்களை பெறுகிறார்.
*5ம் தேதி, அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை.
*அதன்பின், கள ஆய்வு.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
 
ஆவணங்களுடன் அதிகாரிகள் தயார்:
 
மதுரையில் சகாயத்திற்கு உதவ, உதவி இயக்குனர்கள் முருகானந்தம், சுதர்சனன், புவியியலாளர்கள் பெருமாள் ராஜா, ரமேஷ், துணை கமிஷனர் ஸ்ரீதர், ஓய்வுபெற்ற தாசில்தார்கள் அருணாசலம், மீனாட்சிசுந்தரம், விவேகானந்தன் உட்பட, 15 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.உதவி இயக்குனர்கள், புவியியலாளர்களும், சென்னையில் இருந்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற தாசில்தார்கள், இக்குழுவில் இடம்பெற்று உள்ளனர்.
 
அலுவலகம், அதிகாரிகள் தயார்:
 
சகாயம் விசாரணை நடத்த, பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வணிக வளாகத்தில், அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு, 5 லேப் - டாப், 2 ஜெராக்ஸ் இயந்திரம், ஒரு பேக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர்கள், 'எல்காட்' நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. வாடகை வாகனங்கள், தயார் நிலையில் உள்ளன.கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவின்படி, கனிமவள உதவி இயக்குனர் ஆறுமுகநயினார், துணை தாசில்தார் இளமுருகன் ஆகியோர், நேற்று, அவற்றை ஆய்வு செய்தனர். விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள, வெளியூர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், ஊழியர்கள், இன்று காலை அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.