Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல், சட்டவிரோதம் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் மகிந்தவின் ஆன்மாவில் ஆழ பதிந்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களின் பணத்திலிருந்து கோடிகோடியாக வருடாவருடம், சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு வழங்கி தன்னை பற்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ள களங்கத்தை துடைக்கும. முயற்சியில் ஈடுபடுகின்றார், அதன் மூலமாக தான் யுத்த குற்றங்களுக்கா விசாரணை செய்யப்படுகிறேன் என்பதை மக்கள் மறக்கச்செய்கின்றார்.

எனினும் ஊழல்,  சட்டவிரோதம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் அவரிலிருந்து அகலுவதில்லை,அது அவரின் ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது,அவரது ஒவ்வொரு அசைவிலும் புலப்படுகின்றது.

தனது பதவிக்காலம் ப+ர்த்தியாவதற்க்கு இன்னமும் இரண்டுவருடங்கள் இருக்கையில் தேர்தலை நடாத்தும்அவரது முடிவும் அவ்வாறனதே, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தனது ஆதரவை காப்பாற்றும் இறுதிமுயற்சியாக அவர் இதனை செய்துள்ளார்

ஆனால் இந்த தேர்தல் சட்டவிரோதமானது என பலசுயாதீன வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன,அரசமைப்பிற்கு இது முரணானது என்பது அவர்களின் வாதம்.

2005 இல் ஆட்சிக்கு வந்த காலம் முதல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் படுகுழிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டுசெயற்பட்டுகொண்டிருக்கும் மனிதர் ஒருவர் இது குறித்து சிறிதும் கவலையகொள்ளப்போவதில்லை, இவை அவருக்கு சிறிதளவும் முக்கியத்துவம் இல்லாத விடயங்கள்.

கடந்த வருடம் இலங்கையின் பிரதமநீதியரசரை பதவிநீக்கம் செய்து தனது ஆதரவாளர் ஒருவரை நியமித்த ராஜபக்சவிற்கு,இந்த நியமனத்திற்கு பெருமளவு பிரதிபலன் இருக்கும் என்பது தெரிந்திருந்தது.

அவர் எதிர்பார்த்தது நடந்தது.தான் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதில் ஏதாவது சட்டச்சிக்கல்கள் உள்ளனவா என அவர் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம்கோரியவேளை இல்லை என்ற பதிலே அங்கிருந்து வந்தது. உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை இரகசியமான முறையில் நடத்தி மகிந்தவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தது. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு இரகசியமான முறையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றுள்ளது இதுவே முதற்தடவை.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலே சட்டவிரோதமானது என்பதற்கு அப்பால், தேர்தல் நடைபெறுகின்ற சூழலும்,தமிழ் மக்கள் முன் உள்ள வாக்காளர் தெரிவும், நேர்மையான எண்ணம்கொண்ட அரசியல்அவாதானிகள் அனைவருக்கும் கவலையளிக்க கூடிய விடயங்களாக உள்ளன.

ஜனவரி 8 ம்திகதி இலங்கை வாக்களிக்க செல்லும்போது நாட்டின்பெரும் பகுதி முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும், வெளியுலகிற்கு மூடப்பட்டிருக்கும், கடந்த ஒரு மாதகாலத்திற்கு மேலாக வடபகுதி வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக காணப்படுகின்றது. கடந்த 5வருட காலத்திற்கும்மேலாக வடக்குகிழக்கில் காணப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு தமிழ்மக்களின் நாளாந்த வாழ்க்கையை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கின்றது. அரசாங்கம் சட்டவிரோதமானது என கருதும் மாவீரர் தின நிகழ்வகளை தடுப்பதற்காக கடந்த வாரம்,பெருமளவு படையினர் வீதிகளில் குவிக்கப்பட்மை மீண்டும் இதனை புலப்படுத்தியது.

அவர்கள் பல்கலைக்கழங்களை மூடினர்,அரசியல்கட்சி அலுவலகங்களை சுற்றிவளைத்தனர், வீடுகளை சோதன செய்தனர்.

நீதியான சுதந்தரமான தேர்தலுக்கான சூழல் என எவரும் இதனை தெரிவிக்க முடியாது, ஆனால் இலங்கையில் நேர்மையான, ஒழுங்கான விடயங்கள் இல்லை என்றே தோன்றுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு முக்கிய வேட்பாளர்களை கருத்திலெடுக்கும்போது இது புலப்படும்

தற்போதைய ஜனாதிபதிக்கான போட்டி அவரது கட்சிக்குள்ளிலிருந்தே உருவாகியுள்ளது,சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர் பொதுவேட்பாளரானார்,

ஆகவே தமிழ் மக்கள் தற்போது யுத்தகுற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ஒருவரா அல்லது அவரை கடந்த 5வருடங்களாக மகிந்தவை, யுத்த குற்றங்களை நியாயப்படுத்தி வரும் ஓருவரா என தெரிவுசெய்ய வேண்டிய நிலையிலுள்ளனர்.

இது தமிழ்மக்களுக்கான தெரிவல்ல,எப்படி பார்த்தாலும் அவர்கள் தாங்கள் அழிக்கப்படுவதற்கு தாங்களே வாக்களிக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கான அப்பாவிதமிழ்மக்களை பாதுகாப்புவலயத்திற்குள் வருமாறு அழைத்தபின்னர் அவர்களை ஈவிரக்கமற்றவிதத்தில் படுகொலை செய்த யுத்தகட்டமைப்பின் தீவிர ஆதரவாளரே ராஜபக்சவை மாற்றுவதற்காக போட்டியிடுகின்றார்,இது நடைபெற்று முடிந்து 5 வருடங்களான பின்னரும் அந்த வேட்பாளர்,யுத்தகுற்றங்களை மறைப்பதற்கு ஆதரவாக குரல்கொடுத்துவருகின்றார்.

கொலை, பாலியல்வல்லுறவு, சித்திரவதை மற்றும் காணமற்போகச்செய்யப்படுதலை தமிழர்பகுதிகளில் நாளாந்த விடயமாக்கியுள்ள இராணுவ ஆக்கிரமிப்பை இந்த பொதுவேட்பாளர் தொடர்ந்து நியாயபடுத்திவருகின்றார்.

நான் ஜனாதிபதியானால் தமிழ்மக்களின் வாழ்வை சிதைத்துவரும் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றுவேன் என வாக்குறுதியளிக்கும்  வேட்பாளருக்கு மாத்திரமே தமிழ்மக்கள் வாக்களிக்க முடியும்.

2005 இல் தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணித்தது,ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது,இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள், குழந்தைகளின் உயிர்களை நாங்கள் விலையாக கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கையின் ஈவிரக்கமற்ற சிங்கள தலைவர்களின் வரிசையில் மிகவும் ஈவிரக்கமற்ற ஒருவர் பதவிக்கு வருவதற்கு உதவியதால் இந்த பகிஷ்கரிப்பு முடிவு தவறானது என்ற கருத்து நிலவுகின்றது,

ஆனால் யதார்த்தத்தில் தமிழ்மக்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் அவ்வேளை இல்லை என்பதே உண்மை, தற்போதும் இந்த நிலை மாற்றமடையவில்லை,

தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளை வென்றறெடுப்பதை அவர்களதுபோராட்டங்களே தீர்மானிக்கபோகின்றன-தமிழ் மக்களின் இருப்பையே சிதை;து அழித்துவிட கங்கணம்கட்டிக்கொண்டு நிற்கும் இருவேட்பாளர்கள்-மற்றும் அவர்களது ஆதரவு சக்திகள் மத்தியில்  இடம்பெறும் தேர்தல் மோதல் இதனை தீர்மானித்துவிடாது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114183/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.