Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஷ்மீர் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சண்டை: 8 ராணுவ வீரர்கள், 3 போலீஸார் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஸ்ரீநகர் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்:ஏ.எப்.பி.

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள், 3 போலீஸார் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் அதிகாலை முதல் அடுத்தடுத்து தொடர் தாக்குதலை நடத்தினர். மதியம் பாராமுல்லா பகுதி போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மூன்றாவது முறையாக மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் 3 போலீஸார் பலியாகினர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இது குறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்: "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஊரி சர்வதேச எல்லையில் உள்ள ராணுவ முகாமுக்குள் வெள்ளிக் கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் சிலர் நுழைந்தனர்.

குறைந்தது 6 பேர் அந்தக் குழுவில் இருக்கலாம் எனத் தெரிகிறது. மறைந்திருந்து பயங்கரவாதிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் தலைமைக் காவலர் உள்பட 3 போலீஸாரும், ராணுவ வீரர்கள் 8 பேரும் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்றார்.

மேலும், தாக்குதலால் ராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து நடத்த சண்டையால் தீயை அணைக்க அங்கு வாகனங்கள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது. நடந்து வரும் தொடர் தாக்குதலில் காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் உறுதி

காஷ்மீர் ராணுவ முகாம் தாக்குதல் குறித்து, "3 தீவிரவாதிகள் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ளவர்களும் கொல்லப்படுவார்கள்" என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து கூறுகையில், "பாகிஸ்தான் இது போன்ற சம்பவங்களை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

இதனை நிறுத்த அவர்களுக்கு சாத்தியம் இல்லாவிட்டால், இது குறித்து இந்தியாவிடம் பேசலாம்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எதற்காக பாகிஸ்தானில் பதுங்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் பதில் அளிக்க வேண்டியது அவசியம்" என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு ஸ்ரீநகரிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள உரி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கட்கிழமை தனது அடுத்தகட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடத்து வருகிறது. இந்த சூழலில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க கூடாது என்று அங்கு இயங்கும் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை அனைத்தையும் மீறி அங்கு நடந்த முடிந்திருக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 70 சதவீதம் வாக்குகள் பதிவானது. 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-8-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6664396.ece?homepage=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.