Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன ஆயுத கடத்தல்காரர்கள் கொழும்பின் ஊடாக கேரள நக்சலைட்களுக்கு ஆயுதங்களை வழங்குகின்றனர்

Featured Replies

 

maoist1_CI.jpg

 

கொழும்பில் தளங்களை அமைத்துள்ள சீனா கடத்தல்காரர்கள். கேரளாவில் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கும் நக்சலைட்களுக்கு ஆயுதங்களை வழங்கிவருவதாக இந்திய இணையமொன்று குறிப்பிட்டுள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

நக்சைலைட்கள் மீண்டும் கேரளாவில் தலைதூக்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், வைனாட்டின் வெலமுண்டா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சமரின் பின்னரே இது தெரியவந்தது.

 

சிலகாலமாக அமைதியாக காணப்பட்ட கேரளா நக்சலைட்கள் தாங்கள் மீண்டும் வந்துள்ளதை அறிவிப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கேரளா இவர்களது நடவடிக்கைகளை வெற்றியகரமாக எதிர்ககொண்டிருந்தது, எனினும் தற்போது அவர்கள் திரும்பி வந்துள்ளதுடன்,கேரளாவின் வடபகுதியில் உள்ள வனங்களில்  செயற்பட்டுவருகின்றனர்.

 

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் நக்சலைட்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் கேரளாவிற்குள் நுழையலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கை மிகச்சரியானதாக அமைந்துள்ளது. நக்சலைட்கள் பெரும் எண்ணிக்கையில் அவர்களது தளபதிகளுடன் கேரளாவிற்குள் ஊருடுவியுள்ளனர்.

ஏற்கனவே கேரளா இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு;ள்ள நிலையில், தற்போது இவர்களும் மீண்டும் தலைதூக்கியுள்ளதால் கேரள பொலிஸார் கடும் சவாலை எதிர்கொள்ள போகின்றனர்.

பாரிய ஆயுத விநியோகம்

கேரளாவில் செயற்பட தொடங்கியுள்ள நக்சலைட்களிடம் மிக நவீன ஆயுதங்கள் உள்ளதாக மாநிலபுலனாய்வு பிரிவினரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டிலுள்ள பொலிஸ்சோதனை நடைபெறாத பலபகுதிகள் ஊடாவே அவர்களுக்கு தங்குதடையின்றி ஆயுத விநியோகம் நடைபெறுகின்றது.

 

 

 

தமிழ்நாட்டு பொலிஸின் கியு பிரிவு தனது கடற்கரையோரங்களில் கடத்தல்கள் இடம்பெறுவதை உறுதிசெய்துள்ளதுடன், கோடிக்கரை துறைமுகப்பகுதி ஊடாவே இது இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. பெருமளவு ஆயுதங்கள் இங்கிருந்து வந்துசேர்கின்றன, பின்னர் அவற்றை கேரளகாடுகளில் நக்சலைட்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் பெற்றுக்கொள்கின்றனர்.

 

சீனா தொடர்பு

கொழும்பில் தளங்களை அமைத்துள்ள சீனா கடத்தல்காரர்களே இந்த ஆயுத கடத்தல்களில் ஈடுபடுவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளையும் சேர்ந்த இரு அரசியல் குடும்பங்களுடன் இந்த கடத்தல்காரர்கள் தொடர்புபட்டுள்ளதால் அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

கடத்தல்காரர்கள் தங்கள் ஆயுதங்களை கடத்துவதற்கு கோடிக்கரை எப்பபோதும் வாய்ப்பான பகுதியாக காணப்படுகின்றது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே இந்த நிலை காணப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்கள் போதைபொருளை கடத்தி பதிலுக்கு பீடியை பெற்றுக்கொள்வது வழமை.

 

இன்று இது ஓபியம், பீடியை கடந்து ஆயுதங்களாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் பொலிஸ் நிலையங்களை தாக்கி அங்கிருந்து ஆயுதங்களை எடுத்துச் செல்வதை நக்சல்கள் வழமையாக வைத்திருந்தனர். தற்போது அவர்களுடைய ஆயுதங்கள் நவீனமானவையாகவும், பொலிஸார் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற் கொள்ளகூடியவையாகவும் மாறியுள்ளன.

 

 

இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்கள் முழுமையாகவும், தீவிரமாகவும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கும், அதிகாரிகள், அவர்கள் நக்சலைட்களுக்கு மாத்திரம் ஆயுதங்களை விநியோகிக்கவில்லை, வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்வதாக தெரிவிக்கின்றனர்.

 

அரசியல் ஆதரவு

பல வருடங்களுக்கு முன்னர் கேரள அரசாங்கம் நக்சலைட்களை ஒழிப்பதை பெருமையாக கருதியது,எனினும் தற்போது இந்த விடயத்தில் அலட்சியம் காணப்படுகின்றது. பலர் இது வேண்டுமென்றெ இடம்பெறுகின்றது என்கின்றனர்.

நக்சலைட்கள் விவகாரம் என்பது கேரளாவில் அரசியல் கருவியாக மாறியுள்ளது.சமீப காலங்களில் நக்சலைட்கள் தங்களை சிபிஎம் உடன் இனம்காண முயன்றுள்ளனர்.இது குறித்து ஆராய்ந்து வரும் புலனாய்வு அதிகாரிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் விவகாரம் போன்று இதனையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றனர் என குறிப்பிடுகின்றனர்.

 

அரசியல் ஆதரவு என்பது நக்சலைட்களுக்கு மாத்திரம் உதவவில்லை, கேரளா சகலவகையான நாசகார நடவடிக்கைகளின் தளமாகவும் மாறுவதற்கு உதவியுள்ளது.

இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து கேரள அரசாங்கம் தனது வடபகுதி வனங்களில் பாரிய தேடுதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. தன்டர் போல்ட் எனப்படும் விசேட படையணி அந்த நடவடிக்கைகளை உள்நாட்டு பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்கின்றது.

 

நக்சலைட்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் அவர்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றார்கள் என்ற அளவிலேயே உள்ளது. அவர்கள் பாரிய தாக்குதல் எதனையும் மேற் கொள்ளவிரும்பவில்லை. இது ஒரு ஆரம்பமாக இருக்கலாம் கட்டுப்படுத்தாவிட்டால் மிக மோசமானதாக மாறலாம்.

முல்லபுரம், கண்ணுர், அத்தபடி மற்றும்,கோழிக்கொடு, பகுதிகளிலேயே அவர்களது நடமாட்டம் காணப்படுகின்றது. இந்த பகுதிகளிலேயே இஸ்லாமிய திவிரவாதிகளின் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

 

நக்சல்கள் ஐந்து பேர்கொண்ட குழுக்களாக இயங்குகின்றனர். கிராமத்தவாகளை சந்தித்து, அவர்களின் மனங்களை மாற்றுவதற்கு முயல்கின்றனர், பின்னர் அவர்கள் அந்த கிராமத்தவர்களை தமது உளவாளிகளாக மாற்றுகின்றனர்,

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114380/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.