Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

ஐயோ ஐயோ ஆதீஈஈஈஈஈஈஈஈஈஈ.....

இதனால் தான் நான் முன்னமே சொன்னான் கருத்தெளுத விருப்பமில்லை என்று. உந்த மாதிரி விழக்கம் தான் எனக்கும் தரப்பட்டது நான் உதப்பற்றி வினவினபோது (ஒரு 12 அல்லது 13 வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் இணுவிலைச்சேர்ந்த பண்டிதர் ஒருவரினல் [ஏன் அதுக்கு என்றதெல்லாம் தலைப்புக்கு ஒவ்வாத விடயம்]).

மேலும் கடந்த வருடம் உப்படியான் நிகள்வொன்றிற்கு நான் செல்ல வேண்டி ஏற்படது அங்கு ஒரு வெள்ளையரிற்கும் புலத்தில் 26 வருடங்களிற்கு மேலாக வழும் எம்மவர் ஒருவரிற்குமிடையில் நடந்த மனதிற்கு வேதனை தரும் சம்பாசனையின் ஒருபகுதியை இங்கு தருகின்றேன்.

White man: So why is this function important in your culture?

Brown Monkey: this is the way for her parents to advertise that she is ready :?: :?: :?: :?:

என்னைப்பொறுத்த வரையிலும் இது ஒரு அருவருக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான ஒரு கருத்து.

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply

புலம்பெயர் பெண்கள் மிதித்தால் தாங்குகிற உடம்பா இது?

இத்தூனுண்;டு உடம்பு ஒரு வால் தாங்குமா?

இங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் பதியப்பட்டிருக்கு இதில அருவருக்கத்தக்க விடயம் எது?

பருவமடைதலா?

அதையொட்டிய கொண்டாட்டங்களா?

ஐயோ ஐயோ ஆதீஈஈஈஈஈஈஈஈஈஈ.....

இதனால் தான் நான் முன்னமே சொன்னான் கருத்தெளுத விருப்பமில்லை என்று. உந்த மாதிரி விழக்கம் தான் எனக்கும் தரப்பட்டது நான் உதப்பற்றி வினவினபோது (ஒரு 12 அல்லது 13 வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் இணுவிலைச்சேர்ந்த பண்டிதர் ஒருவரினல் [ஏன் அதுக்கு என்றதெல்லாம் தலைப்புக்கு ஒவ்வாத விடயம்]).

மேலும் கடந்த வருடம் உப்படியான் நிகள்வொன்றிற்கு நான் செல்ல வேண்டி ஏற்படது அங்கு ஒரு வெள்ளையரிற்கும் புலத்தில் 26 வருடங்களிற்கு மேலாக வழும் எம்மவர் ஒருவரிற்குமிடையில் நடந்த மனதிற்கு வேதனை தரும் சம்பாசனையின் ஒருபகுதியை இங்கு தருகின்றேன்.

White man: So why is this function important in your culture?

Brown Monkey: this is the way for her parents to advertise that she is ready :?: :?: :?: :?:

என்னைப்பொறுத்த வரையிலும் இது ஒரு அருவருக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான ஒரு கருத்து.

என்ன பிறின்ஸ் இஞ்சியைக் கடிச்சிட்டீரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

ஆதீஈஈஈஈஈஈஈ எனக்கு வாற கோபத்துக்கு என்ன செய்றதென்றே தெரியேல்லை....... வீட்டுக்கு போய் உண்மையா பொய்யா என்று விரிவா எழுதுறன்..... :evil: :twisted: :twisted: :twisted:

ஆதீஈஈஈஈஈஈஈ .....

ஏன் நீங்களும் இஞ்சியைக் கடிச்சீட்டீங்களா?

எல்லாரும் ஆதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்றே இழுக்கிறீங்கள்.

இப்படி ஒரு கூற்று இருக்கிறது உண்மையா? என்றுதானே கேட்டேன்.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் பெண்கள் மிதித்தால் தாங்குகிற உடம்பா இது?

இத்தூனுண்;டு உடம்பு ஒரு வால் தாங்குமா?

உதுக்குத்தானே தொடங்கமுதலே சொன்னனான் வேண்டாமென்று :twisted: :twisted: :twisted: . தலைக்கு மேல வெள்ளம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழாவை தாசியர் குலத்தில்த்தான் பண்டைய நாட்களில் கொண்டாடியுள்ளதாக கேள்வி.....

அதாவது ஒரு தாசியானவள் தான் முதுமை அடைந்து கொண்டிருக்கையில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் வரவு குன்றி வருமானத்தை இழந்து நலிகின்ற வேளையில் தனது வாடிக்கையாளர்களை வசீகரிக்க தனது மகள் பருவமெய்தி தாசியர் தொழிலுக்கு தயாரானதை அறிவிக்க ஊரில் வாழும் பிரமுகர்களுக்கும், தனவந்தர்களுக்கும் அழைப்புக் கொடுத்து விழாஎடுப்பதாகவும் ஒரு கூற்று இருக்கிறது உண்மையா?

இவ்விடயம் பற்றி யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தவர்கள் விளக்கம் தருவார்களா?

புது புது கதையெல்லாம் சொல்றீங்க ஆதிவாசி சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் பதியப்பட்டிருக்கு இதில அருவருக்கத்தக்க விடயம் எது?

பருவமடைதலா?

அதையொட்டிய கொண்டாட்டங்களா

நீங்கள் கூறியவை எதுவுமில்லை. அனால் அதைப்பற்றி சில வக்கிர புத்திக்காரர் முன்வைக்கும் கருத்துக்கள் தான் அருவருக்கத்தக்கது. உதரணத்திற்கு எனது முன்னைய பதிவில் குறிப்பிட்ட வெள்ளை இனத்தவரிற்கே ஏனடா கேட்டம் என்று போச்சு எங்கட ஆள் சொன்ன பதிலைக்கேட்டு (இப்படியும் விவஸ்தை கெட்ட மனிதர் இந்த உலகத்தில இருக்கினம் என்று என்னிடம் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டார்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிறின்ஸ் இஞ்சியைக் கடிச்சிட்டீரோ?

அடடே கடிச்ச பழக்கம் யாரைத்தான் விட்டுது :P :P .

அது சரி நீர் எப்ப இஞ்சி திண்ட குரங்காகினீர்?

உதுக்குத்தானே தொடங்கமுதலே சொன்னனான் வேண்டாமென்று :twisted: :twisted: :twisted: . தலைக்கு மேல வெள்ளம்.....

தலைக்குமேல் வெள்ளம் போகாதுப்பா......

ஆதிக்கு தப்பவும் வழி தெரியும்.58066GLOK_w.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைக்குமேல் வெள்ளம் போகாதுப்பா......

ஆதிக்கு தப்பவும் வழி தெரியும்.58066GLOK_w.jpg

ஹூம்... மற்றவையளை மாட்டி தாட்டு விட்டிட்டு தான் தப்பிறது :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி வாசி, அண்ணன் பிரின்ஸ் உங்களுக்கு இந்த கருத்தை யார் சொன்னது? சொன்னவர்களை எனக்கு தயவு செய்து அறிமுக்கப்படுத்தி வையுங்கள். ஆதி இந்த தாசி பாசி என்று கொன்டு இருந்தால்... வாலை இழுத்து வைத்து வெட்டி விடுவேன்.

சரி விடயத்துக்கு வருவோம். பெண்களின் உடல் ஒரு குழப்பம் வாய்ந்தது. இற்ஸ் இன்கிறடிபிள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறு பிள்ளைப்பிராயத்தில் இருந்து பதின் பருவத்துக்கு வருவதென்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றது. பூப்பெய்துதல், அதாவது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பம். ஒரு பெண் முதல் முதலாக மாதவிடாய் அடைவது என்பது அந்த பெண்ணுக்கு இறைவனால் கொடுக்கப்படும் ஒரு தகுதி. அதாவது அன்று முதல் அந்தப்பெண் தாய்மை அடையக்கூடிய தகுதியை பெறுகின்றாள். தாய்மை அடையக்கூடிய தகுதியைப்பெறுவது என்பது இந்த உலகத்துக்கு மனிதத்துக்கு மிக இன்றியமையானது... ஏனெனில் தாய்மை அடியக்கூடிய தகுதி இல்லாது விட்டால், மனித இனம் இல்லாமல் போய் விடும். ஆதலால் தான் அந்த தகுதியை ஒரு பெண் பெற்றதும், அவளுக்கு அன்பளிப்புகள் கொடுத்து, அவளை பாராட்டி சீராட்டி விழாவாக கொண்டாடுகின்றோம்.

தாய்மை என்பது என்ன என்பதை திரு மணிவாசகன் அம்மா பற்றி எழுதிய கவிதையை வாசித்தால் புரியும். ஆக தாய்மை அடையாக்கூடிய ஒரு பெண், சமுதாயத்தில் கடமை மிக்கவளாகவும், முக்கியமான தேவைகளை புரிந்து கொள்ளவேண்டியவாளாகின்றாள். ஆதலால் அந்த விழாவின் போது சமுதாயத்தில் பொறுப்புள்ள (சரியான சொல் தெரியவில்லை) அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் பெண் ஆசீர்வதிக்கப்படுகின்றாள். (அவர்களது வாழ்க்கை முறையை பார்த்து வாழப்பழக வேண்டும் என்பத்ற்காக) ஏனெனில் தாய்மை அடைந்ததும் அவள் எப்படியான பொறுப்புணர்வான ஒரு தாயாக இருக்கின்றாள் என்பதிலேயெ எதிர்கால சமுதாயம் தங்கி இருக்கின்றது. ( நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே)

தாய்மைக்கு, ஒரு கன்னி பெண்ணிற்கு, ஏன் அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆதனால் ஒரு பெண் தாய்மை அடையக்கூடிய தகுதியை பெற்றுவிட்டாளா இல்லையா என்பதை சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆதலால் அனைத்து உறவினர்கள் நண்பர்களையும் அழைத்து, குடும்பத்தில் பெரியவரால் அனைவருக்கும் அறிமுகப்பத்தப்படுகின்றாள். ( சாமத்திய வீட்டில் மாமி தானே பெண்ணை மணவறைக்கு அழைத்து வருவார்???)

மேலே உள்ள அனைத்தும் எனது சொந்த கருத்து.. ஆக பல பிழைகள் இருக்கலாம்.

இப்படியான ஒரு நிகழ்வை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.

இந்த பூப்பெய்துவதை கொண்டாடுவது நாம் மட்டும் தான் என்று யாரும் நினைக்க வேண்டாம். சில உதாரணங்கள் மற்றும் நான் கலந்து கொண்ட பூப்புனித நிகழ்வுகள் பற்றி எழுதுகின்றேன்.

ஜப்பான் நாட்டில், ஒரு பெண் முதன் முதலில் மாதவிடாயை எய்தும் போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர், அதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகின்றார்கள். உறவினர்களும் நண்பர்களும் வீட்டுக்கு இரகசியமாக காரணம் சொல்லாது அழைக்கப்படுகின்றார்கள். அங்கு, பெண்ணின் வீட்டார், அப்பிள் மற்றும் பியர்ஸ் களை ஒரு தட்டில் இட்டு அதை அலங்கரித்து எடுத்து வந்தால், அல்லது, பீன்ஸ் மற்றும் சிவப்பு அரிசி யை எடுத்து வந்தால், அங்கு வந்திருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொண்டாட்டத்துக்கான காரணம் தெரிய வரும். நானும் ஒரு முறை கலந்து கொண்ட போது அறிந்து கொண்டது இதை. இவ்வாறு ஜப்பானியர்கள் கொண்டாடுகின்றார்கள். எங்கள் ஊர் சாமத்தியவீடு போலத்தான் இருந்தது.

ஆஸ்திரெலியாவில், அபோறிஜின்ஸ் (Aborigines of Australia) என்பவர்கள் அவர்களது பெண்கள் மாதவிடாய் அடையும் போது, ஒரு பெண் ஒரு றீற்டற் ரு எ ர(ற்)டிசன் ஒ(F)ப் லவ் மஜிக். ( treated to a tradition of a "love magic") அத்தோடு பெண்ணின் பலங்கள் மற்றும் உடல் மாற்றங்கள் ஆகியவற்றினை சொல்லிக்கொடுப்பார்.

நைஜீரியாவில், சிலர் பெண்ணுக்கு முதலில் மாதவிடாய் வந்ததும் அவளது அன்டொமனில் (Abdomen) நான்கு வெட்டுகள் போடுகின்றார்கள். அவர் தாய்மையுடையவர் என்பதை அவருக்கு உணர்த்துவதற்காகவும் அவளை ஒரு தகுதி உடையவளாக உருவாக்குவதற்காகவும். அட நம்மூரில் மூக்குத்தி, காது குத்துவது போல என நினைக்கின்றேன்... சரியாக தெரியவில்லை.

இன்றும் வட அமெரிக்காவில் இதனை நான்கு நாட்களுக்கு கொண்டாடுகின்றார்கள். அதில் ஒரு நாள் அந்த பெண் அனைவருக்கும் புடிங் போல ஒன்றை தயாரித்து கொடுப்பார்.

மைக்குறோனேசியா, இங்கு, மாதவிடாய் வந்ததும், அந்த பெண்ணை, மென்ஸ்ருறல் வீடு என்ற இடத்துக்கு பெண்களால் அழைத்து செல்லப்பட்டு மந்திரங்கள் ஓதப்படுகின்றன். ஒவ்வொரு முறை மாத விடாய் வரும் போதும் அந்த பெண் அந்த வீட்டுக்கு செல்வது வழக்கம். ஒரு கோயில் போல.

இன்றும், பல மேலைத்தேசத்தவர்கள். அவர்கள் குடும்பப் பெண் வயத்துக்கு வந்ததும், வாழ்த்து அட்டைகள் கொடுப்பதும், ஒன்றாக உணவருந்த செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

புலத்துக்கு வந்து சில பலதை அரைகுறையாக அறிந்து விட்டு எமது தலையில் மண்ணை போட வேண்டாம்......

எல்லா கலாச்சார நிகழ்வுகளும், எந்த இனமாக இருந்தாலும், ஒரு சிறந்த நல்ல காரணத்துக்காக தான் நடத்தப்படுகின்றன கொண்டாடப்படுகின்றன என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி வாசி' date=' அண்ணன் பிரின்ஸ் உங்களுக்கு இந்த கருத்தை யார் சொன்னது?

சொன்னவர்களை எனக்கு தயவு செய்து அறிமுக்கப்படுத்தி வையுங்கள். ஆதி இந்த தாசி பாசி என்று கொன்டு இருந்தால்... வாலை இழுத்து வைத்து வெட்டி விடுவேன்.

அதுதானே முதலே சொல்லிப்போட்டனே. :shock: .. பண்டிதர் இன்னும் உயிரோட இருக்கிறாரோ இல்லையோ என்றும் தெரியாது :lol: .

சரி விடயத்துக்கு வருவோம். பெண்களின் உடல் ஒரு குழப்பம் வாய்ந்தது. இற்ஸ் இன்கிறடிபிள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறு பிள்ளைப்பிராயத்தில் இருந்து பதின் பருவத்துக்கு வருவதென்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றது. பூப்பெய்துதல், அதாவது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பம். ஒரு பெண் முதல் முதலாக மாதவிடாய் அடைவது என்பது அந்த பெண்ணுக்கு இறைவனால் கொடுக்கப்படும் ஒரு தகுதி. அதாவது அன்று முதல் அந்தப்பெண் தாய்மை அடையக்கூடிய தகுதியை பெறுகின்றாள். தாய்மை அடையக்கூடிய தகுதியைப்பெறுவது என்பது இந்த உலகத்துக்கு மனிதத்துக்கு மிக இன்றியமையானது... ஏனெனில் தாய்மை அடியக்கூடிய தகுதி இல்லாது விட்டால், மனித இனம் இல்லாமல் போய் விடும். ஆதலால் தான் அந்த தகுதியை ஒரு பெண் பெற்றதும், அவளுக்கு அன்பளிப்புகள் கொடுத்து, அவளை பாராட்டி சீராட்டி விழாவாக கொண்டாடுகின்றோம்.

தாய்மை என்பது என்ன என்பதை திரு மணிவாசகன் அம்மா பற்றி எழுதிய கவிதையை வாசித்தால் புரியும். ஆக தாய்மை அடையாக்கூடிய ஒரு பெண், சமுதாயத்தில் கடமை மிக்கவளாகவும், முக்கியமான தேவைகளை புரிந்து கொள்ளவேண்டியவாளாகின்றாள். ஆதலால் அந்த விழாவின் போது சமுதாயத்தில் பொறுப்புள்ள (சரியான சொல் தெரியவில்லை) அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் பெண் ஆசீர்வதிக்கப்படுகின்றாள். (அவர்களது வாழ்க்கை முறையை பார்த்து வாழப்பழக வேண்டும் என்பத்ற்காக) ஏனெனில் தாய்மை அடைந்ததும் அவள் எப்படியான பொறுப்புணர்வான ஒரு தாயாக இருக்கின்றாள் என்பதிலேயெ எதிர்கால சமுதாயம் தங்கி இருக்கின்றது. ( நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே)

தாய்மைக்கு, ஒரு கன்னி பெண்ணிற்கு, ஏன் அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டியது மிக அவசியமாகும். ஆதனால் ஒரு பெண் தாய்மை அடையக்கூடிய தகுதியை பெற்றுவிட்டாளா இல்லையா என்பதை சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆதலால் அனைத்து உறவினர்கள் நண்பர்களையும் அழைத்து, குடும்பத்தில் பெரியவரால் அனைவருக்கும் அறிமுகப்பத்தப்படுகின்றாள். ( சாமத்திய வீட்டில் மாமி தானே பெண்ணை மணவறைக்கு அழைத்து வருவார்???)

மேலே உள்ள அனைத்தும் எனது சொந்த கருத்து.. ஆக பல பிழைகள் இருக்கலாம்.

இப்படியான ஒரு நிகழ்வை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.

இதத்தானப்பா நானும் சொல்லுறன். குறை சொல்லுறவயள் எப்பவும் சொல்லிக்கொண்டு தான் இருப்பினம். வேண்டாத பெண்டாட்டி என்று தொடங்கிற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருது :oops:

இந்த பூப்பெய்துவதை கொண்டாடுவது நாம் மட்டும் தான் என்று யாரும் நினைக்க வேண்டாம். சில உதாரணங்கள் மற்றும் நான் கலந்து கொண்ட பூப்புனித நிகழ்வுகள் பற்றி எழுதுகின்றேன்.

ஜப்பான் நாட்டில், ஒரு பெண் முதன் முதலில் மாதவிடாயை எய்தும் போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர், அதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகின்றார்கள். உறவினர்களும் நண்பர்களும் வீட்டுக்கு இரகசியமாக காரணம் சொல்லாது அழைக்கப்படுகின்றார்கள். அங்கு, பெண்ணின் வீட்டார், அப்பிள் மற்றும் பியர்ஸ் களை ஒரு தட்டில் இட்டு அதை அலங்கரித்து எடுத்து வந்தால், அல்லது, பீன்ஸ் மற்றும் சிவப்பு அரிசி யை எடுத்து வந்தால், அங்கு வந்திருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொண்டாட்டத்துக்கான காரணம் தெரிய வரும். நானும் ஒரு முறை கலந்து கொண்ட போது அறிந்து கொண்டது இதை. இவ்வாறு ஜப்பானியர்கள் கொண்டாடுகின்றார்கள். எங்கள் ஊர் சாமத்தியவீடு போலத்தான் இருந்தது.

ஆஸ்திரெலியாவில், அபோறிஜின்ஸ் (Aborigines of Australia) என்பவர்கள் அவர்களது பெண்கள் மாதவிடாய் அடையும் போது, ஒரு பெண் ஒரு றீற்டற் ரு எ ர(ற்)டிசன் ஒ(F)ப் லவ் மஜிக். ( treated to a tradition of a "love magic") அத்தோடு பெண்ணின் பலங்கள் மற்றும் உடல் மாற்றங்கள் ஆகியவற்றினை சொல்லிக்கொடுப்பார்.

நைஜீரியாவில், சிலர் பெண்ணுக்கு முதலில் மாதவிடாய் வந்ததும் அவளது அன்டொமனில் (Abdomen) நான்கு வெட்டுகள் போடுகின்றார்கள். அவர் தாய்மையுடையவர் என்பதை அவருக்கு உணர்த்துவதற்காகவும் அவளை ஒரு தகுதி உடையவளாக உருவாக்குவதற்காகவும். அட நம்மூரில் மூக்குத்தி, காது குத்துவது போல என நினைக்கின்றேன்... சரியாக தெரியவில்லை.

இன்றும் வட அமெரிக்காவில் இதனை நான்கு நாட்களுக்கு கொண்டாடுகின்றார்கள். அதில் ஒரு நாள் அந்த பெண் அனைவருக்கும் புடிங் போல ஒன்றை தயாரித்து கொடுப்பார்.

மைக்குறோனேசியா, இங்கு, மாதவிடாய் வந்ததும், அந்த பெண்ணை, மென்ஸ்ருறல் வீடு என்ற இடத்துக்கு பெண்களால் அழைத்து செல்லப்பட்டு மந்திரங்கள் ஓதப்படுகின்றன். ஒவ்வொரு முறை மாத விடாய் வரும் போதும் அந்த பெண் அந்த வீட்டுக்கு செல்வது வழக்கம். ஒரு கோயில் போல.

இன்றும், பல மேலைத்தேசத்தவர்கள். அவர்கள் குடும்பப் பெண் வயத்துக்கு வந்ததும், வாழ்த்து அட்டைகள் கொடுப்பதும், ஒன்றாக உணவருந்த செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

புலத்துக்கு வந்து சில பலதை அரைகுறையாக அறிந்து விட்டு எமது தலையில் மண்ணை போட வேண்டாம்......

எல்லா கலாச்சார நிகழ்வுகளும், எந்த இனமாக இருந்தாலும், ஒரு சிறந்த நல்ல காரணத்துக்காக தான் நடத்தப்படுகின்றன கொண்டாடப்படுகின்றன என்பது எனது கருத்து

தம்பி சும்மாவின் இந்த விளக்கத்திற்குப் பிறகும் நீங்கள் தொடருறதென்றால் தொடருங்கோ. என்னண்டாலும் சும்மா சொல்லக்கூடாது தம்பி கலக்கீட்டான்.

சும்மா எங்கு நிற்கிறார் என்பது தெரிகிறது.

சில கூற்றுகள உண்மையா? என்று அறிய கேள்விகளைத் தொடுத்தால் ஆதியின் வாலை இலுத்துவைத்து நறுக்கிவிடுவேன் என்று கூறுவது நியாயமில்லை.

அது ஏன் சடங்குகளில் தாய்மாமன், மாமி முன்னிறுத்தப்படுகிறார்கள்?

முறை செய்வதாக சில சடங்குகள் நடைபெறுகின்றனவே அவை எவற்றைக் குறிக்கின்றன?

உங்கள் பதிலை கண்ட பிற்பாடு தொடர்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான காரணம் தெரியவில்லையே ஆதி........

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.... ஒரு வேளை சமூகத்தில் நான் பெரிதா நீ பெரிதா என்ற எண்ணத்தை ஏற்படுத்த விரும்பாததால்... தாய்மாமனை வைத்திருக்கலாம்... நீங்கள் உங்கள் மகளின் சாமத்தியவீட்டுக்கு பக்கத்து வீட்டு சுந்தரலிங்கம் அண்ணையையும் கமலா அக்காவையும் முன்னிறுத்த, முன் வீட்டு சத்தியமூர்த்தி அண்ணையும் வசந்தி அக்காவும் கோவிப்பினமில்லையா..... :P :P :P :P

மரியாதை பண்ணுவதற்கு, நன்றி செலுத்துவது காரணமாக இருக்கலாம்....எனக்கு சரியாக தெரியவில்லை.

பிரின்ஸ் அண்ணன்... நன்றிகள்.

சரி தெரியவில்லை என்றால் மேலே கேள்விகள் கேட்க இயலாது.....

சும்மா அது என்ன உங்கள் கருத்து பெண்களின் தலையிலேயே ஒரு சழுதாயத்தின் முழுப்பொறுப்பையும் ஒப்படைப்பதாக உள்ளது எங்களைப்போல ஆம்பிளைகள் சமுதாயத்தில அக்கறை இல்லாதனாங்களோ? அல்லது பெண்களைவிட நாங்கள் பலவீனமானவர்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோபிதா, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிகின்றேன்.

அதற்கு முன்னர் ஒரு சிறிய அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். 2002 ம் ஆண்டு நீண்ட காலத்தின் பின்பு யாழ்ப்பாணத்துகு தரைவழியாக சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவம். இலங்கையில் எல்லைகளைக் கடந்து, ஈழத்தின் வரிக்கட்டுப்பாடு சோதனைச்சாவடி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் மட்டுமே. அதை விட நாம் சென்ற வாகனத்தை பதிவதற்காக ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அந்தப்படிவம் ஜப்பானிய பயண அனுபவங்களை நினைவு படுத்தின. படிவம் முற்றிலும் தமிழில் இருந்தது. நான் ஒரு கணம் திகைத்து விட்டேன். காரணம் அந்த படிவத்தில் அடிச்சட்டக இலக்கம் என்க்கேட்கப்பட்டிருந்தது. நான் அறிந்திராத சொல்லாக இருந்தாலும் ஊகிக்க கூடியதாக இருந்தது. அப்போது ஜப்பானியரின் மொழிக்கொள்கையைப்போல ஈழத்திலும் இருப்பதாக தோன்றியது. ஜப்பானியர்கள் அவர்களது அந்த கொள்கையால் அடைந்த நன்மைகள் பல. எந்த ஒரு வேற்று நாட்டு மொழி ஆதிக்கமும் இல்லாமல் உலக சந்தையில் கோலோச்சினார்கள்... காரணம் அவர்கள் திறமையோடு அவர்கள் வேற்று கலாச்சாரங்களுக்கும் மொழிப்பரவல்களுக்கும் இடங்கொடுக்காமையுமேயாகும்.

நாம் ஜப்பானியர்களுக்கோ சீனர்களுக்கோ சிறிதும் சழைத்தவர்கள் அல்ல. சில ஜப்பானிய மற்றும் சீன நண்பர்களே இதனைத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நம்மில் பலர், வேற்று கலாச்சார மோகத்திலும், வேற்று மொழிகளின் பேர் கொண்ட ஆர்வங்களிலும் நேரத்தையும் திறமைகளையும் காட்ட முன் நிற்பதால் எம்மால் சாதனைகள் பல செய்து நமக்கென ஒரு இடம் பிடிக்க முடியவில்லை. ( ஈழத்தில் இருப்பவர்கள் சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது)

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

ஆக நாம் என்ன தான் கலாச்ச்சாரதினை மாற்றினாலும் எங்கு சென்று வாழ்ந்தாலும் நமது வம்சாவழி மாறப்போவது இல்லை.

ஒரு மனிதனை, அவனது கலாச்சார பழக்க வழக்கங்கள், மொழி, வம்சாவழி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு, தமிழர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர், சீனர் என அழைக்கின்றோம். எமது கலாச்சார பழக்கவழக்கங்களை நாம் தொடராது விட்டால், இன்று புலத்தில் உருவாகிய எமது சந்ததியின் நிலை இன்னும் ஒரு சில வருடங்களில் இது தான். ஒரு வம்சாவழி, இன்னொரு அல்லது கலந்து பட்ட ஒரு கலாச்சாரம், வேற்று மொழிப்பாவனை. இது தான் அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும். ஆக இன்னும் சில காலத்தில் நமது சந்ததியினை எப்படி அழைப்பது? கலாச்சாரத்தை தொடராத நமது சந்ததியினை பார்ப்பவர்களை இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ண வைக்கும். அது புதியதொரு இனத்தினை உருவாக்கும் ( பல நாடுகளின் எல்லைகளில், பல புதிய இனங்க்கள் தோன்றி இருக்கின்றன். பெயர்கள் வாயில் கூட நுழைய கஸ்டமாக இருக்கின்றன) . ஆக நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்ப்படுங்கள்.

என்னுடைய அகராதியில காதல் என்பதுக்கு சும்மா ஒரு விளக்கம் குடுத்து இருக்கின்றன். அதை அப்படியே இங்கு தருகின்றேன். தப்பாக இருந்தால் அடிக்க வராதீர்கள்.

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு மனைவி கணவனிடமும், ஒரு கணவன் மனைவியிடமும் சந்தர்ப்ப சூழ் நிலைக்களுக்கு ஏற்ற மாதிரி உறவு முறையினை வளர்க்க வேண்டும் .(சந்தர்ப்பவாதிகளாக அல்ல) அதாவது ஒரு அன்னையாக அல்லது தந்தையாக, நண்பனாக அல்லது நண்பியாக, காதலனாக அல்லது காதலியாக, ஒரு நல்ல ஆசானாக இருக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஒரு தப்பு செய்தால், அன்னையாக அல்லது தந்தையாக அல்லது நண்பனாக அல்லது நண்பியாக எண்ணி, அந்த தப்பு எதிர்காலத்தில நடக்கா வண்ணம் அறிவுரை கூறி அல்லது அன்புக்கட்டளை இட்டு வாழ வேண்டும். இப்படி வாழும் கணவன் மனைவிக்கு இடையில் அல்லது காதலன் காதலிக்கு இடையில் இருப்பது தான் காதல்.... இதில நல்ல காதல் கெட்ட காதல், உண்மைக்காதல் பொய்க்காதல் எல்லாம் இல்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் மறக்க விட்டாலும் நாம் அவர்களின் வம்சாவளியை மறக்க மாட்டோமே........ இந்தியன், பாக்கி, கொறியன் என்று தானே அழைப்போம்.....

சோறு என்றும் ஒரு புதிய இனம் உருவாகின்றதாமே கோபிதா லண்டனில்... உண்மையா? :P :P :P :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி தெரியவில்லை என்றால் மேலே கேள்விகள் கேட்க இயலாது.....

சும்மா அது என்ன உங்கள் கருத்து பெண்களின் தலையிலேயே ஒரு சழுதாயத்தின் முழுப்பொறுப்பையும் ஒப்படைப்பதாக உள்ளது எங்களைப்போல ஆம்பிளைகள் சமுதாயத்தில அக்கறை இல்லாதனாங்களோ? அல்லது பெண்களைவிட நாங்கள் பலவீனமானவர்களோ?

ஆதிவாசி, ஒரே ஒரு கேள்வியில் பதில் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

எந்த ஒரு பிள்ளையாவது, ஆணாகட்டும் பெண்ணாகட்டும், தனது சொந்த விடயங்களை அதாவது பிரச்சனைக்குரிய சொந்த விடயங்களை தந்தையுடன் கலந்துரையாடி முடிவு காண்பதை கண்டிருக்கின்றீர்களா? அம்மாவுடன் தானே பேசுகின்றோம்.......

பெண்ணானவள் தாய்மை அடையும் பொழுது அதற்குரிய பக்குவத்தை அடைகின்றாள் என்றே சொல்ல முடியும்.

நானும் கொஞ்சம் சொல்லுவம்.. சனம் அடிக்க வந்தாலும்! :P

தமிழ் சமுதாயத்திலே ஒரு பெண்ணாணவள் மதிப்புக்குரியவளாக, பெறுமதியானவளாக நோக்கப்பட்டாள். ஒரு சமுதாயத்தின் கெளரவம் ஒரு பெண்ணைச் சார்ந்ததாகவே தமிழ்ச் சமுதாயத்தால் கருதப்பட்டது. அதனால்தான் பண்டைய தமிழ்க் காப்பியங்கள்கூட கண்ணகி போன்ற பெண்களைப்பற்றிப் பேசின.

ஒரு பொன்னோ வைரமோ பெறுமதியாக இருப்பதால் அதற்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அதற்காக அவை சிறை வைக்கப்படுகின்றன என கூறலாமோ?!

ஒரு விஞ்ஞானியோ, ஜனாதிபதியோ அந்த நாட்டுக்கு முக்கியமானவராகக் கருதி அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவரால் அவர் நினைத்தாலும் அந்தப் பாதுகாப்பை விலத்தி சுதந்திரமாக தனியாக நடமாட முடியாது. அதற்காக அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார் எனக் கூற முடியுமா?!

அதேபோலத்தான் தமிழ்ச் சமுதாயமானது அந்தந்தப் பருவங்களில் அதற்கேற்ற பாதுகாப்புகளை நிர்ணயித்துள்ளது. ஆனால்.. அது சிலரது பார்வையில் சிறையாகவும் அடக்குமுறையாகவும் தெரிவதற்கு சமுதாயம் பொறுப்பாளியாக முடியாது.

பூப்புனித நீராட்டு விழாவானது ஒரு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் போன்றது. பல்கலைக் கழகத்தில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு ஒரு விழா அமைத்து, கறுப்பு கோட் தொப்பி எல்லாம் மாட்டி ஏன் பட்டமளிக்க வேண்டும். சாதாரணமாக கொடுத்தால் அது பட்டமில்லையா?

ஏனெனில் பட்டத்தின் பெறுமதி அந்த மாணவனுக்கும் அவனைச் சார்ந்த சமூகத்துக்கும் புரிய வேண்டும்.

இதே தான் இந்த பூப்புனித நீராட்டு விழாவிலும்.. இப்படியான சடங்ககளின் மூலம்.. சிறுமியாக, விளையாட்டுப் பிள்ளையாக வாழ்ந்த பெண் தனது பொறுப்புகளையும் தனது மரியாதையையும் தனது கெளரவத்தையும்.. அதேவேளை அவளைப்பற்றி அவளைச் சார்ந்தவர்களும் உணர.. ஒரு காத்திரமான பங்களிப்பை இத்தகைய சடங்கு செய்கிறது.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் இவை காசெறியும் போட்டிகளாக எல்லைகளைத் தாண்டி நிகழ்வது வேதனையான விடயமென்றாலும்... சடங்குகள் கேலியான அல்லது கொடுமையான நிகழ்வுகளல்ல.. ஒரு மனிதன் தன்னை உணர்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வாய்ப்புகளில் ஒரு முறை என்பதே சரி. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய வீடு என்பது அவசியம் தான். ஆனால் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஆண்களுக்கும் செய்ய வேண்டும்( எத்தனை பேர் ஒத்துக் கொள்வினமோ தெரியாது :wink: ).

இன்று பாலியல்கல்வி என்று ஏன் படிப்பிக்கப்படுகின்றது. அந்த வயதில், இவ்வாறான செயற்பாட்டை எதிர் நோக்க வேண்டும். அல்லது துர்நடத்தையுள்ளவர்கள் எவ்வாறு நடப்பார்கள் என்பதை சிறுவயதிலேயே அவதானத்தோடு இருக்க வேண்டும் என்பதாகக் காரணம் சொல்லப்படுகின்றது.

இப்போது நடக்கின்ற பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொருவரினதும் வசதிக்காகச் செய்யப்படுகின்றது. அல்லது மற்றவர்களுக்கு தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் செய்யப்படுகின்றது. வீடியோ கமராக்காரர்கள் தான், இப்போது நல்ல நேரம் குறிப்பவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே பெற்றோர்கள் செய்கின்ற தப்பை, சம்பிர்ருதாயத்தின் மீது பழியைப் போடுவது தகுமா?

யாராவது இப்படிச் செலவளித்துச் செய்யச் சொல்லி விதி வகுத்தார்களா என்ன? சாத்திய வீடு மட்டும் செய்தால் போதாது, குழந்தைகளுக்கு அது பற்றிய தெளிவையும் செய்ய வேண்டும். அதை எத்தனை பேர்கள் செய்கின்றார்கள்?

சிறுமிகளை உணர்வூட்டலுக்காகத் தான் பூப்புனிதநீராட்டு விழா என்று ஒரு சடங்கு வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஆண்கள் அடங்காப்பிடாரிகள் என்று மறுக்கப்பட்டிருக்கலாம். என்ன இருந்தாலும் அன்று, கருக்கலைப்பு என்பது சாத்தியமற்றதாக இருந்ததால், பெண்களின் தப்புக்களே சமூகத்தில் உணரப்படும் என்ற கண்ணோட்டத்தில் பெண்களை மட்டுமே, கண்டிப்பாக வளர்க்கப்படுகின்றார்கள். அது தலைமுறையாகவும் தொடருகின்றது.

இப்போது அந்த நிலை மாறி தப்பு செய்தாலும் பிடிபடாமல் இருக்கலாம். அல்லது அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற சிந்தனையோடு பல தமிழர் இருப்பதால், புலத்தில், ஏன் கனடாவில் திருமணம் ஆகி கொஞ்ச நாளில் வேறு ஒருத்தரோடு குடும்பம் நடத்துகின்ற ஆண்கள், பெண்களைத் தமிழரில் பார்க்க முடிகின்றது.

வீட்டுக்கு வந்த கணவனின் நண்பரோடு குடித்தனம் நடத்துகின்ற அவல நிலை கூட பத்திரிகைகளில் படிக்க முடிகின்றது. இது தான் அடக்குமுறை அற்ற வாழ்வாகப் பலர் தெரிவு செய்கின்றார்கள் என்பது நிதர்சனம்!

தூயவன் நீங்கள் சொல்வது சரி..

தமிழ் மொழியை சீர் படுத்துவது போல..

தமிழ் பெயர்கள் வைப்பதை ஊக்கப்படுத்துவது போல..

தமிழ் சடங்குகளையும் குழப்பம் இல்லாது.. போலியாக்காது..

சரியாக விளங்கிக் கொண்டு தண்ணீரை விடுத்து பாலை உள்வாங்கிக்

கொள்ளும் அன்னம் போல வாழப்பழகிக் கொள்ள வேண்ம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணா, மிகச்சரியாக சொன்னீர்கள். இந்த கருத்துகள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிபவர்களை சென்றடைய வேண்டும் என்பது எனது விடுப்பம்.

நானும் கொஞ்சம் சொல்லுவம்.. சனம் அடிக்க வந்தாலும்! :P

தஅவளைச் சார்ந்தவர்களும் உணர.. ஒரு காத்திரமான பங்களிப்பை இத்தகைய சடங்கு செய்கிறது.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் இவை காசெறியும் போட்டிகளாக எல்லைகளைத் தாண்டி நிகழ்வது வேதனையான விடயமென்றாலும்... சடங்ககள் கேலியான அல்லது கொடுமையான நிகழ்வுகளல்ல.. ஒரு மனிதன் தன்னை உணர்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வாய்ப்புகளில் ஒரு முறை என்பதே சரி. :lol:

தங்க காசு நாணயங்கள் எல்லாம் குடுக்கிறாங்களப்பா... எனக்கும் எதாவது வைபவங்கள் நடக்க இருந்தால் சொல்லுங்கள்.. நானும் போய் அவமானப்படுகின்றேன்.... :lol::lol:

பெண் பொக்கிசம், பெண் பாதுகாக்கப்படவேண்டியவள் என்று சொல்கிறீர்கள் அப்படிப்பார்த்தால் பெண் என்ன சடமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.