Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்போன் மூலம் துப்பு துலங்கியது சென்னை ஏ.டி.எம். காவலாளி படுகொலை உடலை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸ்களில் வைத்து விருத்தாசலம் அருகே வீசிச்சென்ற கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201412150213147590_ChennaiATMsWatcherMas
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே, சென்னையைச் சேர்ந்த வங்கி காவலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாகங்கள் 3 சூட்கேஸ் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு கிடந்தது.

சூட்கேஸ் பெட்டிகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பாசிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் வெள்ளை பாறை என்றழைக்கப்படும் ஒரு ஓடை உள்ளது. இங¢கு நேற்று மதியம் வழக்கம் போல் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாறையின் மீது செல்போன் ஒன்று கிடந்ததை பார்த்தனர்.

அந்த செல்போனை அவர்கள் ஆவலுடன் எடுக்க சென்ற போது, அங்கு 3 சூட்கேஸ் பெட்டிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றின் அருகில் சென்று பார்த்த அவர்களுக்கு அந்த சூட்கேசுகளில் ஏதேனும் வெடிகுண்டுகள் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. எனவே அவர்கள் இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்தனர்

அதன்பேரில், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தமிழ்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், விருத்தாசலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் அங்கு கிடந்த சூட்கேசுகளின் அருகில் சென்ற போது துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பெட்டியில் வெடிபொருட்கள் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

துண்டு, துண்டாக உடல்

பின்னர், அந்த 3 பெட்டிகளையும் ஒவ்வொன்றாக திறந்து பார்த்த போலீசார் பேர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் ஒரு பெட்டியில் ஒரு ஆணின் உடல் தலை, கை, கால்கள் இன்றி முண்டமாக இருந்தது. அடுத்த பெட்டியில் அந்த நபரின் கை, கால்கள் மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. 3-வது பெட்டியில் தலை மட்டும் தனியாக இருந்தது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரை யாரோ துண்டு துண்டாக கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்து 3 தனித்தனி சூட்கேசுகளில் அடைத்து இந்த ஓடை அருகே வீசி விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தடயங்கள் சேகரிப்பு

அந்த நபர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் கொல்லப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் போலீசாருக்கு உடனடியாக தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். அதோடு மோப்பநாய் புருனோவும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அந்த நாய் சிறிது தூரம் ஓடியது, ஆனால் யாரையும்கவ்விப் பிடிக்கவில்லை.

செல்போன் மூலம் விசாரணை

இதற்கிடையே, சூட்கேஸ் பெட்டிகள் கிடந்த இடத்தில் ‘மல்லிகா ரெசிடன்சிஸ்’ என்ற பெயருடைய தங்கும்விடுதியின் தலையணை உறை ஒன்றும், ஷூவுக்கான 2 சாக்ஸ்கள், செல்போன் ஆகியவை மழையில் நனைந்த நிலையில் கிடந்தன. கொலை செய்யப்பட்டவர், விலை உயர்ந்த சட்டை, பேண்ட் ஆகியவை அணிந்திருந்த நிலையில் காணப்பட்டார்.

கையில் கிடைத்த ஆதாரங்களை கொண்டு விருத்தாசலம் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அங்கு கிடைத்த செல்போனை ‘ஆன்’ செய்து, அதில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த எண்களை பரிசோதித்தனர். அதில் ‘டாடி’ என குறிப்பிட்டு ஒரு எண் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது கொலை செய்யப்பட்டவரின் தந்தையின் போன் நம்பராக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

சென்னையைச் சேர்ந்தவர்

அந்த நம்பரில் போலீசார் தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசியவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் இருந்து பேசுவதாகவும், தனது பெயர் எத்திராஜூலு என்றும் தெரிவித்தார். போலீசார் தெரிவித்த அடையாளங்களை வைத்து, கொலை செய்யப்பட்டது தனது மகன் வெங்கட்ராவ் என்பதை அவர் உறுதி செய்தார்.

சென்னை புளியந்தோப்பு வெங்கடசாமி தெருவில் தான் வசிப்பதாகவும், தனது மகன் வெங்கட்ராவ் (வயது 30) சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ‘செக்யூரிட்டி’ நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்றும், வங்கி ஒன்றின் ஏ.டி.எம். காவல் பணிக்கு சென்று வந்தார் என்றும், கடந்த 10-ந்தேதி அன்று இரவு அரசுவேலை கிடைக்கப்போகிறது என்றும், அதற்கு ரூ.1 லட்சம் தேவை என்று வாங்கி சென்றதாகவும், அதன்பிறகு தனது மகன் வீடு திரும்பவில்லை என்றும், இதுதொடர்பாக தனது மனைவி செல்லமாள் புளியந்தோப்பு போலீசில் புகார் செய்து இருப்பதாகவும், அதன்பேரில் போலீசார் தனது மகன் வெங்கட்ராவை தேடிவந்ததாகவும் அப்போது எத்திராஜூலு தெரிவித்தார்.

இதை அடுத்து விருத்தாசலம் போலீசார் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து புளியந்தோப்பு போலீசார் விருத்தாசலம் விரைந்தனர்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கூலிப்படை

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வெங்கட்ராவ், வெட்டப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கும் போது கூலிப்படையினர்தான் அவரை வேறு எங்கோ கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசுகளில் வைத்து இங்கு வீசி விட்டு சென்றுள்ளனர் என போலீசார் கருதுகிறார்கள். அதோடு, வெங்கட்ராவ் பயன்படுத்தி வந்த செல்போன் கடந்த 10-ந்தேதி இரவு முதல் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

வேலை பிரச்சினையில் வெங்கட்ராவ் கடத்தி செல்லப்பட்டு, தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெங்கட்ராவ் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பணம் கொலையாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜெய்சுப்பிரமணியன் ஆகியோர் ஒருபக்கம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரும் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.