Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் எதிரணிக்கு வாக்கு கிடைக்காது என்பதால் கூட்டமைப்பு இன்னமும் முடிவினை அறிவிக்கவில்லை - டிலான் பெரேரா

Featured Replies

dilan-perera_1.jpg
 
எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நிச்­சயம் வெற்­றி­யீட்­டுவார். ஜனா­தி­பதி ஒரு­போதும் தோல்­வி­ய­டைய­மாட்டார். ஆனால் மக்­களின் தீர்ப்­புக்கு எமது ஜனா­தி­பதி எப்­போதும் தலை­சாய்ப்பார் என்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் நலன்­புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.
 
மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­து­விட்­டது. அந்த முடிவை அவர் கள் எடுத்­து­விட்­டனர். கூட்­ட­மைப்பின் தீர்­மானம் எப்­போது அறி­விக்கப்­பட்­டாலும் இந்த முடி­வுதான் வரும்.
 
ஆனால் தற்­போது கூட்­ட­மைப்பு தனது முடிவை அறி­வித்தால் தெற்கில் எதி­ர­ணிக்கு வாக்­குகள் கிடைக்­காது என்­பதால் கூறாமல் இருக்­கின்­றனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
கொழும்பில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
 
கதை மாறி­யது
 
எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முதலில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வ­தாகக் கூறிக்­கொண்டே ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முன்­வந்தார். ஆனால் வேட்பு மனுத் தாக்­கலின் பின்னர் இந்த விடயம் மாறி­விடும் என்று நான் கூறினேன். அதே­போன்று வேட்பு மனுத்­தாக்­கலின் பின்னர் தற்­போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்கம் என்ற கதை மறக்­கப்­பட்­டுள்­ளது.
 
சோபித தேரர் மௌனம்
 
இந்த விட­யத்தை பல வரு­டக்­க­ணக்­காக வலி­யு­றுத்­தி­வந்த மாது­லு­வா­வவே சோபித்த தேரர் தற்­போது மௌனம் காக்­கின்றார். காரணம் அன்று விஹா­ர­ம­கா­தேவி பூங்­காவில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­ட­வர்­களில் இரண்டு பேர் நீதி­மன்­றத்­தினால் குற்­ற­வா­ளி­யாக்­க­ப­பட்­ட­வர்கள். ஒருவர் உயர்­நீ­தி­மன்ற தீர்ப்­புக்கு உட்­பட்­டவர். மற்­றை­யவர் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தீர்ப்­புக்கு உட்­பட்­டவர். அந்த வழக்கை நானே தாக்கல் செய்­தி­ருந்தேன். டிலான் ராஜித்த வழக்கு என்­பது இன்று சட்ட பாடப்­புத்­த­கத்தில் இடம்­பெற்­றுள்ள ஒரு விட­ய­மாகும்.
 
சதி முயற்­சியின் முதல் நப­ராக மைத்­திரி
 
இன்று சர்­வ­தேச சதி முயற்­சி­யா­ளர்­களின் தேவையை முதற் கண்­ணாக எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுக்­கின்றார். தற்­போது அர­சாங்­கத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தை உடைத்­து­விட்­ட­தாகக் கூறும் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்­தையும் கவிழ்ப்­ப­தாக கூறு­கின்றார். அவர் இநத நாட்டின் ஸ்திரத்­தன்­மை­யையும் குழப்­பு­வ­தா­கவே கூறு­கின்றார். காரணம் இந்த நாடு தற்­போது மிகவும் ஸ்திர­மான நாடாக இருக்­கின்­றது. அதனை குழப்­பு­வ­தற்கே எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முயற்­சிக்­கின்றார். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக இருந்­த­போது இந்த நாடு ஸ்திர­மா­ன­தாக இருக்­க­வில்லை.அத­னால்தான் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முக்­கி­ய­மாக இருந்­தது.
 
13 ஐ ஆத­ரிப்­பதை பரி­சீ­லிக்­க­வேண்­டி­யேற்­படும்
 
நான் ஆரம்­பத்­தி­லி­ருந்தே அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்து வந்­தவன். எதிர்­கா­லத்­திலும் குரல் கொடுப்பேன். ஆனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­மாயின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு பாரிய ஆத­ரவை வழங்­கு­வது குறித்து பரி­சீ­லிக்­க­வேண்­டி­யேற்­படும். காரணம் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அவ்­வாறே வைத்­துக்­கொண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது அபா­ய­க­ர­மா­ன­தாகும்.
 
கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு
 
அத­னால்தான் முதலில் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சுமந்­திரன் கூறினார். ஆனால் தற்­போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக நீக்­கப்­ப­டா­த­த­தைப்­போன்ற எதிர்க்­கட்­சி­களின் கருத்­துக்­க­ளினால் தாங்கள் இன்னும் முடி­வெ­டுக்­க­வில்லை என்று கூட்­ட­மைப்பு கூறு­கின்­றது. ஆனால் இந்த விட­யத்தில் பொது எதி­ர­ணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் இர­க­சிய உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது.
 
சர்­வ­தேச சதி
 
ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டிப்­ப­தற்­காக அவ­ருக்கு எதி­ராக போட்­டி­யிடும் வேட்­பா­ள­ருக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்கும் நிலையே உள்­ளது. இதன்­மூலம் நாட்டில் ஸ்திர­மற்­றத்­தன்­மையை ஏற்­ப­டுத்தி நாட்டை குழப்பி அரா­ஜக நிலைக்கு கொண்­டு­செல்ல முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. இது சர்­வ­தேச சதி­யாகும். காரணம் நாட்டில் யுத்­தத்தை முடித்து சமா­தா­னத்­தையும் அபி­வி­ருத்­தி­யையும் உரு­வாக்­கு­வதே இவற்­றுக்­கான கார­ண­மாகும்.
 
கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்த சதி
 
இந்த நாட்டின் அர­சியல் கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்தி நாட்டை அரா­ஜக நிலைக்கு இட்டுச் செல்­வதே சர்­வ­தேச சதியின் நோக்­க­மாகும். ஜனா­தி­பதி தேர்­தலில் 19 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்­றனர். இதில் தெரிந்த கட்சி வெற­றிலை சின்னம் மட்­டு­மே­யாகும். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு என்ன நடந்­தது? வேட்பு மனுத் தாக்கல் செய்­யப்­பட்ட தினமே இந்த நாட்டில் அர­சியல் கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்தும் முயற்­சியில் சர்­வ­தேச சதி வெற்­றி­கண்­டுள்­ளது. இந்த நாட்டில் ஐக்­கிய தேசிய கட்சி மக்கள் விடு­தலை முன்­னணி என்­பன இருக்­க­வேண்டும்.
 
சதியின் முக்­கிய பாத்­தி­ரத்தில் சந்­தி­ரிகா
 
இந்­நி­லையில் இந்த அர­சியல் கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்தி நாட்டை அரா­ஜக நிலைக்கு கொண்டு செல்லும் சர்­வ­தேச சதியின் முக்­கிய பாத்­தி­ரத்தை எனது முன்னாள் தலைவி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஏற்­றுள்ளார். அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்­லாத அரா­ஜக நாட்டை உரு­வாக்­கு­வதே இஙகு பிர­தான நோக்­க­மா­க­வுள்­ளது. பாகிஸ்­தானில் பாட­சா­லைக்குள் புகுந்தோர் மாண­வர்­களை சுட்­டுக்­கொன்­றுள்­ளனர். அந்தக் காட்­சி­களை பார்க்­கும்­போது மனது பதை­ப­தைக்­கின்­றது. தொலைக்­காட்­சியில் இந்த காட்­சி­களை பார்த்த நான சாப்­பி­ட­வில்லை. அந்த நிலையை இந்த நாட்டில் ஏற்­ப­டுத்­தவே மீண்டும் முயற்­சிக்­கின்­றனர். இந்த நாடு ஒரு காலத்தில் இன்­றைய பாகிஸ்­தானின் நிலை­யி­லேயே இருந்­தது. பஸ்­களில் மாண­வர்கள் கொல்­லப்­பட்­டனர். அந்த நிலையை மீண்டும் ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது.
 
அடுத்த அர­சாங்கம் யாரு­டை­யது?
 
இந்­நி­லையில் தற்­போது எதி­ரணி குழம்­பிய குட்­டை­யா­கவே உள்­ளது. இவர்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் அடுத்த அர­சாங்கம் யாரு­டை­யது என்று யாருக்கும் தெரி­யாது. மைத்­தி­ரி­பா­ல­வுக்கு சந்­தி­ரி­கா­வுக்கு ரத்­தன தேர­ருக்கு ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு இது தொடர்பில் தெரி­ய­வில்லை. இதன்­மூலம் பாகிஸ்தான் நாட்டின் நிலையை போன்று இலங்­கையை கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றனர். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஸ்திர­மான தலைவர். அவரின் பெயர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வாக இருப்­பதே இஙகு பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. ஜனா­தி­பதி மீண்டும் போட்­டி­யி­டு­வ­தற்­காக 18 ஆம் திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. மாறாக ஜனா­தி­பதி மூன்­றா­வது தட­வைக்கு தெரி­வு­செய்­யப்­ப­டு­வதா இல்­லையா என்­ப­தனை மக்கள் தீர்­மா­னிப்­ப­தற்கே 18 ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­டது. ஆனால் அன்று ஜே. ஆர். ஜய­வர்த்­தன திருட்­டுத்­த­ன­மாக ஜனா­தி­பதி பத­வியில் வந்து அமர்ந்­து­கொண்டார்.
 
ரணில் ஏன் வர­வில்லை?
 
இந்தத் தேர்­தலில் வெற்­றி­பெற முடியும் என்றால் ரணில் விக்­ர­ம­சிங்க நிச்­சயம் போட்­டி­யிட்­டி­ருப்பார். ஆனால் வெல்ல முடி­யாது என்­பது உறு­தி­யாக தெரிந்­த­தாக மைத்­தி­ரி­பா­லவை கள­மி­றக்­கினர். அதற்­கான பிர­தான ஆயு­த­மாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும் என்ற விட­யத்தை குறிப்­பி­டு­கின்­றனர். தான் அலரி மாளி­கைக்கும் ஜனா­தி­பதி மாளி­கைக்கும் செல்­ல­மாட்டேன் என்று மைத்­தி­ரி­பால கூறு­கின்றார். தோல்­வி­ய­டைந்தார் போக முடி­யா­து­தானே ? தோல்­வி­ய­டைந்தால் பொலன்­ன­று­வைக்குத் தான் செல்­ல­வேண்டும்.
 
நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட இறுதி ஜனா­தி­பதி மஹிந்­தவே
 
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை எமது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் மட்­டுமே நீக்க முடியும். அல்­லது திருத்தம் செய்ய முடியும். எதிர்­வரும் ஜனா­தி­பதி வெற்­றி­பெறும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தான் இந்த நாட்டில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட இறுதி ஜனா­தி­ப­தி­யாக இருப்பார். அதனை திட்­ட­மிட்டு செய்­ய­வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கும்­போது 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு என்ன நடக்கும்? மாகாண சபை­க­ளுக்கு என்ன நடக்கும்? நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் அதி­கா­ரங்கள் எங்கு செல்லும்? மாகாண சபை­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு மக்­க­ளுக்கு எவ்­வா­றான அதி­கா­ரங்கள் செல்லும் என்­ப­ன­வற்றை பார்த்து தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இந்த விட­யத்­துக்குள் தேர்தல் முறை மாற்­றமும் இடம்­பெறும்.
 
பயப்­ப­ட­வில்லை
 
கேள்வி: மைத்­தி­ரி்­பால சிறி­சேன வெற­றி­பெ­றுவார் என்று பயப்­ப­டு­கின்­றீர்­களா?
 
பதில்: கன­விலும் நடக்­காது. மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது மைத்­தி­ரி­பால ரணி­லா­கவும் மைத்­தி­ரி­பால சந்­தி­ரி­கா­வா­கவும் மாறி­யுள்ளார்.
 
கேள்வி: சதி­திட்டம் உள்­ள­தாக எவ்­வாறு கூறு­கின்­றீர்கள்?
 
பதில்: அமெ­ரிக்­காவின் சி.ஐ.ஏ. அமைப்பு சதி திட்­ட­ங­களை தீட்­டும்­போது தனித்­த­னி­யா­கவே செய்யும். முதலில் ரணிலை அழைத்து போட்­டி­யிட வேண்டாம் என்றும் அவரால் வெற்­றி­பெற முடி­யாது என்றும் கூறினர். எனினும் அவரை பத­விக்கு ஒரு வழியில் கொண்­டு­வ­ரு­வ­தாக கூறினர். பின்னர் மைத்­தி­ரி­பா­லவை அழைத்து உங்­களை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தாக கூறினர். பிர­தமர் பதவி கிடைத்தால் போதும் எனறு இருந்­த­வ­ருக்கு ஜனா­தி­பதி பதவி கிடைக்கும் என்றால் ஆசை வந்­து­விட்­டது. இவர்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே சதி வலையில் விழுந்­து­விட்­டனர். ஆனால் ஏமாற்­ற­ம­டை­யப்­போ­கின்­றனர்.
 
ஹெல உறு­ய­மவும் பிளவு
 
கேள்வி: இந்த சதி­வ­லையில் ஜாதிக ஹெல உறு­ம­யவும் விழுந்­து­விட்­டதா?
 
பதில்: ஜாதிக ஹெல உறு­ம­யவின் சம்­பிக்க ரண­வக்­கவும் உதய கம்­மன்­பி­லவும் பிரி­வார்கள் என்று யார் நினைத்­தது? ஹெல உறு­மய பிரிந்­து­விட்­டதே?
 
கேள்வி: ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்குள் பிளவு இல்­லையா?
 
பதில்: சிறிய பிளவு ஏற­பட்­டது. ஆனால் அவ்­வாறெ மறைந்­து­போ­னது. திஸ்ஸ அத்­த­நா­யக்க வந்­ததும் சம­மா­கி­விட்­டது.
 
கேள்வி: திஸ்ஸ அத்­த­நா­யக்க எதற்­காக வந்தார்?
 
பதில்: திஸ்ஸ அத்­த­நா­யக்­கவை எனக்கு பல்­க­லைக்­க­ழக காலத்­தி­லி­ருந்தே தெரியும். மாணவர் அமைப்­பி­லி­ருந்து ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்து வளர்ச்­சி­ய­டைந்­தவர். அவர் காசுக்­காக வர­மாட்டார். ஐக­கிய தேசிய கட்­சிக்­கூட அந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைக்­க­வில்லை.
 
கூட்­ட­மைப்பு மைத்­தி­ரிக்கே ஆத­ரவு
 
கேள்வி: பொது எதி­ரணி - கூட்­ட­மைப்பு உடன்­ப­டிக்கை உள்­ளதா?
 
பதில்: அவர்­களின் பேச்­சுக்­களை பார்க்­கும்­போது இந்த நியா­ய­மான சந்­தேகம் எங்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றது. முதலில் ஆத­ரவு வழங்­குவோம் என்று சுமந்­திரன் கூறினார். அது பத்­தி­ரி­கை­களில் வந்­தது. தற்­போது இன்னும் தீர்­மானம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் சந்திரிகா சம்மந்தன் சந்திப்பு சம்மந்தன் வேறு சில தரப்புக்களுடன் சந்திப்பு மற்றும் கூட்டமைப்பின் கருத்துக்களை பார்க்கும்போது இது புலனாகின்றது.
 
ஆனால் இந்த இடத்தில் இருந்து ஒரு விடயத்தை கூறுகின்றேன். அதாவது பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த முடிவை அவர்கள் எடுத்துவிட்டனர். கூட்டமைப்பின் தீர்மானம் எப்போது அறிவிக்கப்பட்டாலும் இந்த முடிவுதான் வரும். ஆனால் தற்போது கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்தால் தெற்கில் எதிரணிக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் கூறாமல் இருக்கின்றனர். இதனை மறைத்து வைத்துள்ளனர்.
நவம்பரில் பதவி பிரமாணம்
 
கேள்வி: ஜனாதிபதி வெற்றிபெற்றால் எப்போது பதவி பிரமாணம் செய்வார்?
 
பதில்: ஜனாதிபதி வெற்றிபெற்றதும் இவ்வருடம் நவம்பர் மாதம் பதவியேற்பார். அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். ஆனால் ஆனால் 2019 ஆம் ஆண்டு வேண்டுமானால் தேர்தலுக்குப்போகலாம்.
 
கேள்வி: ஜனாதிபதி தோல்வியடைந்தால் உடனே போவாரா?
 
பதில்: ஜனாதிபதி தோல்வியடையமாட்டார். இது நிச்சயம். ஆனால் ஜனாதிபதி மக்கள் தீர்ப்புக்கு தலைசாய்ப்பவர்.
 

எவ்வளவு கோடி தந்தார்கள் உமக்கு . புனை கதை எழுத நன்றாக வருகின்றது . நீர் ஒரு படம் இயக்க எல்லா தகுதியும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.