Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது

Featured Replies

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது DEC 22, 2014 | 10:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

parliament-300x200.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இன்று  நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும், அமீர் அலி ஆகியோர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பலம், 148 உறுப்பினர்களாக குறைந்தள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு குறைந்தது 150 ஆசனங்கள் தேவையாகும்.

தற்போது, ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குத் தேவையான ஆசனங்களை விடவும், இரண்டு ஆசனங்கள் குறைவாக உள்ளன.

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எதிரணிக்குத் தாவியுள்ளனர்.

அதேவேளை, எதிரணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அமீர் அலிக்கு வழங்கி,  ரிசாத் பதியுதீனை தம்பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள ஆளும்கூட்டணி முயற்சித்தது.

எனினும், அந்த நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டு, ஆளும் கூட்டணியில் இருந்து, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி பக்கம் தாவியுள்ளது.

http://www.puthinappalakai.net/2014/12/22/news/2065

இத்துடன் ஈழத்தமிழருக்கு எதிரானவர்கள் அனைவரும் மைத்திரியுடன் இணைந்து கொண்டனர்

 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது அரசு!

[Tuesday 2014-12-23 08:00]
sri%20lanka-parliament-200-news.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்றுடன் இழந்தது. நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகிய 15 உறுப்பினர்களும் எதிரணியில் இணைந்து கொண்டதால், எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.

  

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டதை அடுத்து, கட்சித் தாவல்களும் குத்துக்கரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.பி.யான அமீர் அலி ஆகிய இருவரும் எதிரணியுடன் நேற்று இணைந்து கொண்டனர்.

இதேவேளை, எதிரணியிலிருந்து இருவர் ஆளும் தரப்புக்கும் இதுவரை மாறியுள்ளனர். 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் தனக்கு கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்தபோதும் அக்கனவு நேற்றுடன் கலைந்துவிட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=123206&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.