Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின்படி வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது ; அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

dalahas-alagaperuma.jpg
 
 
இலங்­கைக்கு வெளியில் விடு­தலைப் புலி­களின் பல­மா­ன­தொரு அர­சியல் களம் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. இது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாகவுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் வடக்கில் இருந்து ஒரு­போதும் இரா­ணு­வத்தை வெளி­யேற்ற முடி­யாது என தெரி­விக்கும் அர­சாங்கம், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்கை எமது அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­ப­டமாட்டாது எனவும் குறிப்­பிட்­டது.அர­சாங்­கத்­தினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின போதே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
விடு­தலைப் புலி­க­ளு­ட­னான யுத்­தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து யுத்­தத்­திற்கு பின்­ன­ரான இரண்டு ஆண்டு காலப் பகு­தி­வரை வடக்கில் மூன்று இலட்­சத்­திற்கும் அதி­க­மான இரா­ணுவத்தினர் பாது­காப்­பிற்­காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
 
எனினும் இன்று இரா­ணு­வத்தில் ஐம்­பது வீதத்­திற்கும் மேலான இரா­ணு­வத்­தி­னரை வடக்கில் இருந்து வெளி­யேற்­றி­யுள்ளோம். தற்­போது ஒரு லட்­சத்து ஐம்­பது ஆயி­ர­ம்­ இரா­ணுத்­தினர் கூட அங்கு இல்லை. நாம் யுத்த காலத்தில் நடந்து கொண்­டதைப் போல் இன்று நடந்து கொள்­ள­வில்லை. அப்­போ­தைய சூழ்­நி­லையில் வடக்­கிற்கு அதிக பாது­காப்பு தேவைப்­பட்­டது. அதே போல் வடக்கை போர் சூழலில் இருந்து மீட்­டெ­டுத்து அபி­வி­ருத்தி செய்ய இரா­ணு­வத்தின் உத­வியே பிர­தா­ன­மா­னது. ஆனால் இன்று அவ்­வா­றா­ன­தொரு நிலைமை இல்­லா­ததன் கார­ணத்­தி­னால்தான் இரா­ணு­வத்தை வெளி­யேற்­றி­யுள்ளோம்.
 
கூட்­ட­மைப்பின் கோரிக்கை தவ­றா­னது
 
எனினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கில் இருந்து முழு­மை­யான இரா­ணு­வத்­தையும் வெளி­யேற்ற வேண்டும் எனவும் பொலிஸ் அதி­காரம் தமக்கு வேண்டும் எனவும் கூறு­கின்­றனர். வடக்கில் யுத்தம் ஆரம்­பிக்க ஏது­வான கார­ணி­யாக எது இருந்­ததோ அதையே கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக குறிப்­பிட்டு வரு­கின்­றது. இதனை ஒரு­போதும் எம்மால் அனு­ம­திக்­கவோ அல்­லது இவர்­களின் கோரிக்­கை­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது.
 
ரணில் - மைத்­திரி கூட்­ட­ணியின் சாத்­தியம்
 
ஆயினும் கூட்­ட­மைப்பின் தனி நாட்டுக் கோரிக்­கை­யினை பொது எதி­ர­ணியின் கூட்­ட­ணியில் பெற்­றுக்­கொள்­வதே சாத்­தி­ய­மாக உள்­ளது. இன்று பொது எதி­ரணி தயா­ரித்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மைத்­தி­ரி­பால சிறி­சேன சொல்­வதைப் போல் வடக்கில் இருந்து ஐம்­பது வீத­மான இரா­ணு­வத்­தினை வெளி­யேற்­று­வ­தாக சொல்­வது முழு­மை­யா­கவே வடக்கில் இருந்து இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்­று­வ­தற்கு சம­மா­னது. ஏனெனில் நாம் தற்­போது வடக்கில் இருந்து ஐம்­பது வீத­மான இரா­ணு­வத்­தினை வெளி­யேற்­றி­யுள்ளோம். எனவே தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான அர­சியல் சூழ்­நி­லை­யினை நாட்டில் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.
 
புலி­களின் வலு­வான அர­சியல்
 
இலங்­கைக்கு வெளியில் விடு­தலைப் புலி­களின் பல­மா­ன­தொரு அர­சியல் களம் இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் விடு­தலைப் புலி­களை மீளவும் உயிர்ப்­பிக்க கடி­ன­மான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. அவர்கள் இலங்­கையில் மீண்­டு­மொரு அசா­தா­ரண சூழலை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். இதற்கு சாத­க­மான அர­சியல் சூழலை பொது எதி­ரணி உரு­வாக்கிக் கொடுக்க முயற்­சிக்­கின்­ற­மை­யினை தடுக்­கவே நாம் முயற்­சிக்­கின்றோம்.
 
இராணுவத்தை வெளியேற்ற முடியாது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயற்பாட்டினையும் நாம் செய்து கொடுக்க மாட்டோம்.
வடக்கில் தேவையான அளவு இராணுவம் வெளியேற்றப்பட்டு வடக்கு மக்களின் காணிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இனிமேலும் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.