Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மனப்பாங்கு - An Indian Attitude

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நேற்று, traffic cops டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதும் விதி மீறலுக்காக சாலைகளில் மடக்கப்படும் வாகனங்களில் ஒளிப் படங்கள் காண்பிக்கப் படும். ஆவலுடன் பார்ப்பேன்.
 
இம் முறை newzeland ன் நிகழ்வுகளை காண்பித்தனர்.
 
தேன் நிலவுக்கு நியூசிலாந்து போன ஒரு இந்திய ஜோடி, கணவர் காரினை ஓட்டுகின்றார். 60 KM வீதியில் 141 KM வேகத்தில் ஓடி பொலிசாரினால் நிறுத்தப் படுகின்றார். அது ஒரு வாடகை கார்.
 
உனது செய்கைக்காக, 510 டொலர் அபதாரமும், 100 நாட்களுக்கு உனது 'சர்வதேச ஓட்டுனர் பத்திரம்' suspend பண்ணப் படுகின்றது என்கிறார் போலீஸ்காரர்.
 
ஐயா, நாம் தேனிலவு வந்துளோம், இந்த licence suspend எனது மனைவியின் licence மீது கொடுக்க முடியாதா என்று கேட்டாரே ஒரு கேள்வி. வீடியோ பதிவு நடை பெறுகிறது என்று தெரிந்தும் கேட்டார் இவ்வாறு.
 
அசந்து போன போலீஸ் காரர், அதெப்படி, தவறு செய்தது நீ, தவறு செய்யாத அந்த பெண் மேல் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
 
கடுப்பான போலீஸ் காரர், காட்டிக் கொள்ளாமல், சரி இப்போது என்ன செய்யப் போகின்றாய், நீ இந்த வண்டியினை இனி மேல் ஓட முடியாது. உனக்கோ உன் மனைவியின் ஓட்டும் திறனில் நம்பிக்கை இல்லை. ஆனால் அது ஒன்று தான் உனக்கு உள்ள ஒரே வழி. உனது மனைவி ஓட, வேண்டுமானால் நான் சில மைல் தூரம் பின்னால் வந்து பார்கிறேன். அவர் பாதுகாப்பாக ஓடுகிறார் ஆயின் தொடர்ந்து செல்ல முடியும்.
 
அதன் படி மனைவி ஓட, போலிஸ் கார் பின் தொடர, 'அட அந்தப் பெண், கணவனிலும் பார்க்க நேர்த்தியாக ஓடுகிறார்' என சொன்னார் போலிஸ்காரர். 
 
அண்மையில் ஒரு படம் 'இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா', பார்த்தேன்.
 
அதில் ஒருவர் தண்ணி போட்டு விட்டு கார் ஓடி, ஒரு கர்பிணிப் பெண்ணை மோதி விடுகின்றார். ஆஸ்பத்திரியில், மோதியவரும், உதவிக்கு வந்தவரும் நிற்க, போலீஸ் காரர் சொல்கிறார். நீங்கள் யாருமே அந்த வண்டியின் இலக்கம் எடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அதை எடுத்திருந்தால் தானே நாமும் நடவடிக்கை எடுக்க முடியும், மேலும் ஒருவர் பாதிப்படையாமல்.
 
அவர் போனபின், மோதியவர், உதவிக்கு வந்தவருக்கு, போலிசுக்கு தன்னை காட்டிக் கொடுக்காமல் இருந்தமைக்காக நன்றி சொல்கிறார்.
 
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் ஒரேயடியாக ஊறி அது சாதாரணமாகிவிட்டது..! :D

நம்மாக்களும் ஊழலில் லேசுப்பட்டவர்கள் இல்லை.. ஓட்டுநர் உரிமை இல்லாத ஒருவர் இன்னொருவரின் காரை எடுத்துச்சென்று எங்கோ மோதிவிட்டார். உடனே காரின் உரிமையாளருக்கு அறிவிக்க, அவர் அந்த இடத்துக்குச் சென்றுவிட்டார். காவல்துறை வரவும் நான்தான் இடித்தேன் என இவர் கதையை மாற்றி, காப்புறுதிப் பணமும் எடுத்து எல்லாம் சுபம். :o:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் ஒரேயடியாக ஊறி அது சாதாரணமாகிவிட்டது..! :D

நம்மாக்களும் ஊழலில் லேசுப்பட்டவர்கள் இல்லை.. ஓட்டுநர் உரிமை இல்லாத ஒருவர் இன்னொருவரின் காரை எடுத்துச்சென்று எங்கோ மோதிவிட்டார். உடனே காரின் உரிமையாளருக்கு அறிவிக்க, அவர் அந்த இடத்துக்குச் சென்றுவிட்டார். காவல்துறை வரவும் நான்தான் இடித்தேன் என இவர் கதையை மாற்றி, காப்புறுதிப் பணமும் எடுத்து எல்லாம் சுபம். :o:D

 

நீங்கள் சொல்வது சுத்துமாத்து மோசடி ஆயினும், அது வேறு யாருக்கும் பிரச்னை வராத செயல்பாடு.
 
இங்கு அவரோ தனது அப்பாவி புது மனைவியினை பலிக்கடா  ஆக்கப் பார்கிறார். பெண்களை அவர்கள் கிள்ளுக் கீரையாக மதிக்கும் நிலை அப்படியே தெளிவாகின்றது அல்லவா. அந்த போலிஸ் காரர் முகத்தினை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே.
 
வீடியோ பதிவு இல்லாவிடில், 'ஜோவ் என்னை என்ன கேனயன் என்று நினைத்தாயா' என்று கேட்டிருப்பார். :lol:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சுத்துமாத்து மோசடி ஆயினும், அது வேறு யாருக்கும் பிரச்னை வராத செயல்பாடு.

 

இங்கு அவரோ தனது அப்பாவி புது மனைவியினை பலிக்கடா  ஆக்கப் பார்கிறார். பெண்களை அவர்கள் கிள்ளுக் கீரையாக மதிக்கும் நிலை அப்படியே தெளிவாகின்றது அல்லவா. அந்த போலிஸ் காரர் முகத்தினை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே.

 

வீடியோ பதிவு இல்லாவிடில், 'ஜோவ் என்னை என்ன கேனயன் என்று நினைத்தாயா' என்று கேட்டிருப்பார். :lol:

அதென்ன யாருக்கும் பிரச்சினை வராத செயற்பாடு?? :unsure: இப்படி காப்புறுதி மோசடி செய்து செய்து.. இப்போது premium பல மடங்கு கூடவாகிப் போய்விட்டது. ஒழுங்காக நடந்து கொள்பவர்களின்மீது சுமை ஏற்றப்படுகிறது.. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன யாருக்கும் பிரச்சினை வராத செயற்பாடு?? :unsure: இப்படி காப்புறுதி மோசடி செய்து செய்து.. இப்போது premium பல மடங்கு கூடவாகிப் போய்விட்டது. ஒழுங்காக நடந்து கொள்பவர்களின்மீது சுமை ஏற்றப்படுகிறது.. :o

 

தலைவா, இந்த நிலைமையை யோசித்துப் பாருங்கோ.
 
நீங்கள் சொன்ன படி அவர் வந்து 'ஓம், நான் தான் கார் ஓடினனான்' என்று சொன்ன பிறகு, நண்பர் வந்து, 'மச்சான் விசயம் எனெண்டா, நாலு மைலுக்கு அங்கால ஒரு ஆளைத் தட்டிப் போட்டன். ஆள் விழுந்திட்டுது. யாரும் வந்து நம்பர் எடுக்க முன்னம் ஓடுவம் எண்டு வந்ததில பதட்டத்தில உங்க அடிச்சுப் போட்டன். அங்க ஆள் முடிஞ்சுதோ தெரியவில்லை மச்சான்'. anyway, நீ வந்து help பண்ணியதுக்கு thanks மச்சி. பிறகு சந்திக்கிறேன் மச்சான், எண்ட டென்சனுக்கு ஒரு பெக் போட்டால் தான் சரி..... எண்டு சொன்னால் என்ன கதை.....  :o  :icon_idea:
 
உங்க கதையில, அவர் சுஜமாக வந்தார். நம்ம கதையில கணவர், மனைவி மேல் பாரத்தினை, மனைவியினை கேளாமல், செய்ய முயன்றார்.   :icon_mrgreen:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.