Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓசையில்லாமல் பிறந்துவிட்டது தமிழ்ப்புத்தாண்டு

Featured Replies

ஒரு சிலரின் உறக்கத்தை மட்டும் கலைத்திருக்கிறது. ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ்ப்புத்தாண்டு என்பது 24.12.2014 அன்று வானவியல் அடிப்படையில் முறையாகப் பிறந்துவிட்டது. தமிழ்ப்புத்தாண்டின் முதல் பன்னிரண்டு நாட்களும் முறையாக முற்றி முதல் முழுநிலவு 04.1.2015 அன்று தோன்றியது.

2014 -ஆம் ஆங்கில ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு என்பது வானவியல் அடிப்படையில் 05.01.2014 முதல் 23.12.2014 வரையில் சரியாக 353 நாட்களில் சுருண்டு விட்டது.

ஓராண்டின் உட்கூடு என்பது கதிரவனின் தென் செலவுத் திருப்பத்தைப் பிறைநாளில் உறுதி செய்து அதன் மறுநாளில் தொடங்கி, சரியாகப் 12 ஆம் நாளில் முதல் முழு நிலவினையும், தொடர்ந்து 11 முழு நிலவுகளும் நாள் முறையில் எண்ணப்பட்டு அதன் பின்னும் அமையும் அமாவாசைக்காகப் பதினைந்து நாட்கள் காத்திருந்து மேலும் மூன்று நாட்கள் பிறை தோன்றும் நாள் வரையில் அமைவது ஆகும்.

மூவைந்தான் முறை முற்ற ...........(புறம் - 400-2)

என்ற வழக்கத்திற்கு ஏற்ப 12 முழு நிலவுகளும், 12 மறை நிலவுகளும் ஒரு பிறையும்

360 நாட்களில் கூடும் என்றும், அது அறம் சார்ந்த ஆட்சியாளர்களால் மட்டுமே

ஒழுங்கு செய்யப்படும் என்றும் பழந்தமிழ் பேசுகிறது,

12+ (30 x 11)+ 15+3 = 360

12+330+15+3= 360

24 x 15 ........ = 360

12 + (23 x 15) + 3= 360

கதிரவனின் வடசெலவு, தென்செலவு ஆகியவற்றின் நிழல் திருப்பத்தை வானவியல் நிகழ்வுகளோடு ஒரு பற்சக்கரப் பிணைப்பாகப் பொருந்திக் கோட்பாட்டு அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழர் ஆண்டுக் கணக்கு முறையைப் பஞ்சாங்கப் பார்ப்பனரிடம் பறிகொடுத்துவிட்டு மொழியிழந்து போன தமிழர்களை விழித்தெழச் செய்ய வைத்திருக்கிறது தமிழ்ப்புத்தாண்டு பற்றிய தேடல்.

ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ் ஆண்டு 24.12.2014 ல் தொடங்கி 04.01.2015 ல் தனது முதல் கட்டமான முறையான முழு நிலவை 12 -ஆம் நாளில் கடந்து விட்ட நிலையில் இந்த ஆண்டு முழுவதுமான நாட்களைத் தொடர் நாட்களாக எண்ணிக் கண்காணிக்குமாறு உலகெங்கும் வாழும்தமிழர்களை 'மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்' கேட்டுக்கொள்கிறது.

ஆண்டு நாட்களில் ஏற்படும் பிழையைச் சரிசெய்யும் துப்பு பழந்தமிழில் உள்ளது என்றும் தமிழர்களால் அதனை விளங்கிக் கொள்ள இயலும் என்றும் மரபுவழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் கருதுகிறது.

தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின்

தொல்முது கடவுள் பின்னர் மேய

வரை தாழ் அருவிப் பொருப்பின் பொருந!

(மதுரைக் காஞ்சி - 40 -41)

மேற்குறிப்பிட்ட பாடலின் வழியே நெருங்க முடியாத துப்புடைய முன்னோன் ஒருவன் தென்பொதிகை மலையில் நிலையான சில அடிப்படை வேலைகளைச் செய்துள்ளான் என்றும்

கைதொழு மரபின் கடவுள் சான்ற செய்வினை

(அகம் 125-14)

என்றும் புகழப்பட்ட அந்தச் செயல் தமிழ்ப் புத்தாண்டு சார்ந்தது என்று கருத இடம் இருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் முழு நிலவின் வருகையை அருகிலிருந்து பார்க்கவும் அதுபற்றிப்பேசவும் 03.1.2015 அன்று பாபநாசம் மலையடிவாரத்தில் கருத்தாளர்களின் சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள உயர்ந்த உள்ளங்களின் ஒத்துழைப்பால் அத்திட்டம் இனிதே நிறைவேறியது.

வெகு தொலைவில் இருந்து வந்து கலந்து கொண்ட அனைத்து முன்னோடிகளையும் 'மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்' நன்றியுணர்வின் ஈர நெஞ்சத்தோடு வாழ்த்துகிறது. பிறை என்று வரும், முழுநிலவு என்று வரும் என முன்கூட்டியே கணித்துக் கூறுவது தமிழர் மரபு அல்ல. என்று வருகிறது என்பதைக் காத்திருந்து நேர்மையாகப் பதிவு செய்வதும், சரியெனில் சரியென்றும் பிழையெனில் பிழையென்றும் தயங்காமல் எடுத்துச் சொல்லிப் பிழையை உரிய முறையில் திருத்துவதுமே தமிழர் மரபு. அதனைப் பழந்தமிழ் மன்னர்கள்  செய்திருக்கிறார்கள்.

அந்த அரச மரபு வீழ்ந்தது. அது மீண்டும் எழுந்து விடாமல் இருக்க ஆரிய வைதிகம் காவல் காக்கிறது. அதனை உடைத்தே எழுகிறது தமிழ்ப் புத்தாண்டு.

24.12.2014 முதல் 04.01.2015 வரையில் ஆன முதல் 12 நாட்கள்  அச்சுப் போலக் கருதப்பட வேண்டிய நாட்கள் ஆகும். ஏனெனில், அடுத்த தமிழ்ப் புத்தாண்டு என்பது இது போன்ற இன்னொரு அச்சுப் போன்ற 12 நாட்கள் கொண்ட தொகுப்பில் மட்டுமே கொண்டாடப்பட வேண்டும்.

இடைநாட்களை எண்ணுவது மட்டுமே உலகத்தாரின் வேலை. ஒழுங்குபடுத்த வேண்டியது தமிழர்களின் கடமை.

கடந்த தமிழ் ஆண்டுக்கான அச்சு நாட்கள்  05.01.2014 முதல் 20.01.2014 வரையிலும் முதல் 12 நாட்களில் அமைந்திருந்தது. தொடர் நாட்களை முறையாக எண்ணிய வகையில் ஒரு சரிவு தெரிந்தது. 12 முழு நிலவுகளில் 7 முழு நிலவுகள் ஒவ்வொரு நாள் முந்தியதன் விளைவே அந்த இழப்பு.

இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்த்து ஆவணப்படுத்த வேண்டும். சில ஆண்டுகள்  இவ்வாறு பலர் கூடிக் கண்காணித்த பின்னரே உண்மையினை உலகத்தார் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்ல இயலும்.

அறிவியல் என்று நாம் கருதிக் கொண்டு பின்பற்றுகிற பல செயதிகள் அறியாமை என்று தெரிய வரும். தற்போதுள்ள சூழலில் ஆங்கில நாட்காட்டியை அடியோடு புறக்கணிக்கலாம், ஆனால் அது மிகப் பெரும் குழப்பத்தை விளைவிக்கும். அதனால் ஆங்கில நாள்காட்டியின் குறிப்புகளை ஒட்டியே புரிந்து கொள்வது நலம் தரும்.

04.01.2015 ல் முதல் முழு நிலவு உறுதி செளிணியப்பட்ட நிலையில் அந்தநாளைத் தவிர்த்துச் சரியாக 15 வது நாளில் மறைநிலவைக் கணக்கிட வேண்டும். அந்த நாள் 19.01.2015 ல் அமையும்.

தமிழர் மரபுப்படி அந்த நாளில் ஒருவரும் ஆரிய வைதிகக் கருமாதிகள் எதனையும் செய்யக் கூடாது. விரும்பினால் விளக்கேற்றலாம் . தமிழர் மரபுப்படி எந்த நாள் மாறினாலும் மறை நிலவு நாள்  செவ்வாய்க் கிழமை என்பது மாறாது. மாற விடக் கூடாது. அதனைப் பற்றிய அறிவைத் தமிழர்கள் இழந்தது மிகப்பெரிய பிழை.

அந்த நாளைக் கடந்து மறு நாளில் இருந்து எண்ணத் தொடங்கினால் சரியாக 15 வது நாளில் அடுத்த முழு நிலவு கூடி வர வேண்டும். வரும் என்று அடித்துக் கூற முடியாது. இம்முறை 03.02.2015 ல் அது வந்தால் பதிவு செய்யலாம். ஒரு நாள் முந்தினாலும் பிந்தினாலும் உள்ளவாறு பதிவு செய்யயலாம். ஆனால் என்று முழு நிலவு வந்தாலும் அந்த நாளையே இயற்கையின் ஆணையாக ஏற்று அன்றிலிருந்து நாளெண்ணிக் காத்திருந்து செவ்வாய்க் கிழமையாகிய நிறைந்த காருவாப் பெருநாளைக் கைக்கொள்ளல் தமிழரின் தனித் திறமையாகும். அவ்வாறாக ஆண்டு முழுவதும் 12 செவ்வாய் நாட்களைக் காத்துக் கைக்கொள்ளும் தொடர் முயற்சியினால் ஆண்டுச் சரிவைச் சீர் செய்ய இயலும் என்பது ஒருவகை உத்தி. அதற்காகவே கட்டமைக்கப் பட்ட நாள்காட்டியின்படி அதற்குரிய களமாகச் செவ்வாய்க் கோட்டம் காலப்போக்கில் மலரும் என்று எதிர்பார்க்கலாம்.

'மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்' என்பது தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான புரிதலை விழிப்புணர்வை, கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பை, முற்று முழுதாகத் தமிழ்த் தேசிய அரசியலின் அலைவரிசையில் மட்டுமே முன்னகர்த்திச் செல்லும். எந்த மாற்றுக் கருத்தாளர்களோடும் இதில் இணக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவை இந்தப் பணியா மரபுக்கு இல்லை.

கருத்து உரிமையின் அடிப்படையிலும் மரபு வழி வாழ்வுரிமையின் அடிப்படையிலும் இவ்வாறாகத் தமிழ்ப்புத்தாண்டு நடைமுறையை மீட்டு எடுப்போர் யாவரையும் அவர்களது வழியில் தன்னியல்பாக வளரவிட்டு மற்றையோர் வாழ்த்தப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுவே' மரபுவழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் விழைவு'

தமிழர்களின் மரபு வழிப்பட்ட அனைத்துக் கூறுகளையும் தெளிவாக வகைப்படுத்தி ஆளுமை செய்யும் கோட்பாடு ஒன்றே ஒன்று உண்டு என்றால் அது தமிழ்ப்புத்தாண்டு தொடர்பான 'ஆடு கோட்பாடு' ஆகும். அது துலங்கும் போது அறியாமை அகலும்.

திங்கள் தோறும் 'துப்பு' என்ற பெயரில் ஒரு செய்தி இதழை 'மரபுவழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்' வெளியிடத் திட்டமிட்டு உள்ளது. பலதரப்பட்ட பார்வையில் தோன்றும் செய்திகளையும் முறையாக ஆவணப்படுத்தவிருக்கும் இந்த முயற்சிக்குத் தமிழரும் தமிழ்மொழி இன நலம் விரும்பிகளும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று மரபுவழித் தமிழ்த்தேசியத்தக்கார் அவையம் கோரிக்கை வைக்கிறது.

 

(தென்னன் மெய்ம்மன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.