Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கியூபெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுத் தலைமையாளர் துரைரத்தினம் முரளிகரன் (முரளி) காலமானார் : - இன்று அஞ்சலி நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
THURAI-Muralee-100115-funeral-seithy-200

மொன்றியல் கிய10பெக் மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் களத்தின் தலைமையாளராக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேசப்பற்றாளர் முரளி (துரைரத்தினம் முரளிகரன்) அவர்கள் இந்த மாதம் 5ம் திகதி திங்கட்கிழமை இரவு மொன்றியல் வைத்தியசாலையொன்றில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.

   

தமிழீழத் தாயகத்தில் புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட முரளி அவர்கள் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர். 1966ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி ‘சான்டோ’ என அழைக்கப்பட்ட துரைரத்தினம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முரளி இளமைக் காலத்திலிருந்தே தேசிய விடுதலை உணர்வின்பால் ஈர்க்கப்பட்டு அப்பாதையில் தடம் பதித்தவர்.

1992ம் ஆண்டு கனடாவுக்குப் புலம் பெயர்ந்து மொன்றியலில் குடியேறியதை அடுத்து தேசிய ஊடகப் பணியில் தம்மை ஒரு தொண்டராக இணைத்துக் கொண்டார். குறுகிய காலத்தில் அறிவுச்சோலையின் முக்கிய பிரிவுப் பொறுப்பாளராகி 1999ம் ஆண்டிலிருந்து வேறு துறைகளில் பொறுப்பாளராகி 2005ம் ஆண்டிலிருந்து இறுதிவரை கியூபெக் மாநிலத்தின் தேசிய செயற்பாட்டுத் தலைமையாளராக ஆத்மசுத்தியுடன் பணியாற்றி வந்தார்.

தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்னும் கொள்கையை இறுகப் பற்றி இடர்கள் இடையூறுகள் பலவற்றை சந்தித்த வேளையிலும் நேர்ப்பாதையிலிருந்து சற்றும் விலகாது கொண்ட கொள்கையைப் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விட்டுக்கொடாது இறுக்கமான கொள்கைப் பிடிமானத்துடன் இயங்கி வந்த கர்ம வீரரான முரளி அவர்களை 49 வயதில் நாம் இழக்க நேர்ந்தது காலத்தின் கொடுமையன்றி வேறன்று.

தேசியத்துக்காக இரவும் பகலும் ஓய்வின்றி உழைத்த குடும்பத் தலைவனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவி பாசத்துக்குரிய இரு குழந்தைகள் அவருடன் சேர்ந்து பயணித்த தமிழீழத் தேசிய செயற்பாட்டளர்கள் அவரை நேசித்த உறவினர்கள் நண்பர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறுவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

தமிழ்த் தேசிய விடுதலைப் போரில் உயிர்நீத்த உத்தம புனிதர்களில் ஒருவராகிவிட்ட திரு. முரளி அவர்களின் நிறைவான பணிகளை நெஞ்சில் இருத்தி எங்கள் தூயவணக்கத்தை அவருக்கு அர்ப்பணிக்கின்றோம்.

அன்னாரின் இறுதிச் சடங்கு விபரங்கள் வருமாறு அன்னாரின் வித்துடல் மொன்றியலில் 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 என்னும் முகவரியில் அமைந்துள்ள Aeterna Funeral Complex இல் சனவரி 10ம் திகதி சனிக்கிழமை மாலை 3:00 தொடக்கம் இரவு 9:00 வரை மறு நாள் சனவரி 11ம் திகதி காலை 9:00 தொடக்கம் பிற்பகல் 11.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவறிவித்தலை தமிழ் மக்கள் அரனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

கனடியத் தமிழ் சமூகம்

(514) 512-8755

(514) 605-9870

(647) 975-0524

 

THURAI-Muralee-100115-funeral-seithy-001

 

 

THURAI-Muralee-100115-funeral-seithy-002

 

http://seithy.com/breifNews.php?newsID=124325&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.