Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு சொல் - பல பொருள்

Featured Replies

என் தலைவிதிவசம்

  • Replies 55
  • Views 20k
  • Created
  • Last Reply

வாருமிரும்படியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடி குடியைக் கெடுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தடி மாட்டை தடி கொண்டுதான் அடிக்க வேண்டும்.

பூசைக்கு போனவர்களுக்கு நன்றாக பூசை போட்டு அனுப்பி விட்டார்கள்.

ஓடி வந்த பந்தை ஓடி போய் ஏன் ஓடி பிடித்தான்...???

நாடு விட்டு

நாடு வந்து

நம்ம சனம்

போகுதேன்

வேறு நாடு....???

வன்னி மைந்தன்

தூங்கவில்லை உன் நினைவு தூங்கும் போது பெண்ணே

தூர நான் விலகிடவும் தூர செல்லுதில்லை மனம்

வாருமிரும் படியும்

இதுல எந்த சொல்லு பல பொருள் தருது?????

மற்றது இலக்கியன் சொன்னது தூர நான் விலகிடவும் தூர செல்லுதில்லை மனம்

இதுல வந்த இரண்டு தூரவும் ஒரே கருத்துத்தானே/??? எங்க பல கருத்து வருது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால் என்பது நான்கில் ஒரு பகுதி. மனிதனுக்கு இரண்டு கால்.

வாருமிரும் படியும்

இதுல எந்த சொல்லு பல பொருள் தருது?????

ஓ அப்படியா இதோ பாருங்கள் !!!!!!

வாரும் இரும்பு அடியும் ---------> சேர்த்துச் சொன்னால் வாரும் இரும்படியும்.

வாரும் இருந்து படியும் ----------> சேர்த்துச் சொன்னால் வாரும் இரும்படியும்.

:rolleyes::D ரசிகை

பூவை

நட நீ நட...நம்பி நீ நட....

கவி..நீ எழுது கவி..பலர் அறிய உன் கவி...

நட நீ நட...நம்பி நீ நட....

கவி..நீ எழுது கவி..பலர் அறிய உன் கவி...

மணி எத்தனை மணி....??? நீ இப்போ அடி மணி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா இதோ பாருங்கள் !!!!!!

வாரும் இரும்பு அடியும் ---------> சேர்த்துச் சொன்னால் வாரும் இரும்படியும்.

வாரும் இருந்து படியும் ----------> சேர்த்துச் சொன்னால் வாரும் இரும்படியும்.

:rolleyes::) ரசிகை

மதுகா,

நீங்கள் எழுதியவை சொற்றொடர்கள் (phrases) , இங்கு விளையாடுவது பல பொருள் கொண்ட ஒரு சொல் வைத்தாக்கும் வசனங்கள். இருப்பினும் உங்கள் கற்பனையை ரசித்தேன். :D

மணி எத்தனை மணி....??? நீ இப்போ அடி மணி...

மணியாச் சொன்னியள் உங்களுக்கு முத்து மணிகள் பரிசாய்த் தந்தாலும் தகும். :D

ஏறுபோல் வீறு கொண்டு களம் ஏறு...

பதிவாயிருந்த தாழ்வாரத்தில் பேனாவால் ஏதோ பதிந்துகொண்டிருந்த தன் பதியிடம் அவள் சொன்னாள் "பதித்திதுப்பிடியுங்கள் தெரியவில்லை"என்று

குடிமனைகள் வாழ கோ ஒருவன் திறம்பட குடிகாரனாகாமல் வாழவேண்டுமென கோமாதா சொன்னாள்.

தையல் வேலைக்கு ஆள்தேவை என ஒரு தையல் வந்து விளம்பரம் செய்தாள்.

அவன் அடித்த அடியில் இவன் 7 அடி தள்ளி விழுந்தான்.

நெல்லுக்குத்த சொன்னால் இவள் குத்துக்கல்லாட்டம் உட்காந்திருக்கிறாளென்று முறையிட்ட

மாமி முகத்தில் மருமகள் விட்ட குத்து முறை அல்ல.

மணி ஒன்றொன்றாய் பொறுக்கப்பட்டதும்.. மணியாகி விட்டதால் அரட்டை அடிக்காமல் வீடு சென்றனர்.

வரப்புக்கு வெளியே கதிர்கள் தொங்கிசிரித்தன..ஆனற்தம் கொண்டு ஆதவனும் தன் கதிர்மழையைபட பொழிந்தான்.

"அவள் மெய் தொட்டு 5வருடங்கள் ..நான் சொல்வது மெய்"என இவன் பொய் சொல்கிறான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அழகுதான்

கருங்குழல் மீது மலர் சூடிய கண்ணன் குழல் ஊதி மனமெல்லாங் கொள்ளை கொண்டான்.

அரி ஒன்று அருகே வநடதுதும் தெரியாமல் காட்டுமரத்தை அரிந்து கொண்டிருத்தான் விறகுவெட்டி.

குடையை ஏன் விட்டுவிட்டு வந்தீர்கள் என் மனைவி அன்று முழுவதும் குடைந்துகொண்டேயிருந்தாள்..

பரிகளும் யானைகளும் நிறைந்த அரச பரிவாரங்கள் சிறிது இளைப்பாரப் பரிந்துரை செய்யப்பட்டது.

கவி கையில் கவி..படிக்குமா.. ரசிக்குமா..

முரட்டுக்காளை கொம்பால் மோதி காளை இறந்தான்.

சாமி...வருகுதடா..சாமி...ஓடுடா...சாமி....

பிடித்து வா ''வண்டி'' குத்துது எனக்கு வண்டி''....

நீர் குடியும்..நீர்...போகும் நீர்வியாதி.....

மக்களைப் படைத்தவன்.. அரசின் படைகள் மக்களை கொன்றொழிப்பதை வேடிக்கை பார்க்கிறானே..

தொலைந்தவளைத் தேடி தொலை தூரம் போய்விட்டானோ..

வலிமை கொண்டவன் வலிய வலிய வந்த வம்பிழுத்தால் இதயத்தில் வலி வருமே..

இல்லானை இல்லாளும் வேண்டாள்..

(ஒன்றுமில்லாதவன்-இல்லத்தை ஆளுபவள்)

மாமரத்தடியிலே மாக்களை மேய்த்துக்கொண்டிருந்தவன்.. மாபெரும் வெடிச்சத்தத்தினால்..மயங்கி விழுந்தான்.

பட்டினத்திலிருந்து வற்த அவன்.. ஆட்டுப்பட்டிக்குள் ஏறிநுழைய இடுப்புப் பட்டி கழன்றதால்..அவன் வேட்டி...அவிழப் பார்த்தது..

வல்லியம்.. மெல்லினம்..இடையினம் சொன்னவளை இடைமறித்தவன்..

அவள் இடையில் ஊர்ந்த கட்டெறும்பைத் தட்டிவிட்டான்..

நூல் இல்லாமல் எப்படி பட்டம் விடுவதென டாக்டர் பட்டம் பெற்ற பட்டம்மாள் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

சில சொற்கள் பேச்சுவழக்கில் மட்டும் கையாளப்படுவதால் அவற்றை பெரிய உதாரணங்களாக சொல்வதற்கில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டுக்கடையில் கடனாய் சாப்பிட்டதற்காக தண்டம். வீட்டுக்கு வந்தபிறகும் தண்டச்சோறு என்று பேச்சு.

டிக்கட் இல்லாமல் பயணம் செய்தபோது செலுத்தியதோ தண்டப்பணம்.

காசு கொண்டு வந்து காதல் செய்யும் போது கண்ணே கனிமொழியே

கல்யாணம் ஆகி, காசு செலவாகியபின்னே

அவளும் ஒரு தண்டம்தான் அவனுக்கு.

போதையில அவனுக்கு வெறி..மகிந்தர் ஆட்சியல் இருக்குதின்று இன வெறி

ஆடு...தோட்டத்துக்க..ஆடு....

அத்திக்காய் காய் காய் ஆலம்காய் வெண்ணிலவே

இங்கே அத்திக்காய் என்பது: அத்திமர காயையும் குறிக்கும் அந்த திக்கையும்(திசை) குறிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறி வைத்து பார்த்து சுட்டதில் குறி தப்பியது

குறிக்கோள் இல்லாத வாழ்வும்

குறி பார்த்து சொன்ன எதிர்காலமும்

கேள்விக்குறியாக இருக்கும் வேளையிலும்

கட்டியாள நினைக்கும் பணம் தான்

குறியாக நடாத்தும் வாழ்க்கையின்

குறிக்கோள்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புடைவையின் கரையும் அழகு.

ஆற்றுக்கு இருபுறமும் இருப்பது கரை.

தண்ணீரில் புளியை கரைத்து விடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.