Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈ - திரை விமர்சனம்

Featured Replies

பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ"

மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங்களை சோதனை செய்யும் சோதனைச் சாலைகளாக ஏழைமக்கள் வசிக்கும் நாடுகள் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் சென்ற வாரம் சிக்கன் குனியாவுக்காக தனக்கு போடப்பட்ட ஊசி என்ன ஊசியோ என்று தியேட்டரில் அலறினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராமகிருஷ்ணன் என்ற மருத்துவர் கெமிக்கல் ஆயுதங்களைத் தயாரித்து அந்த பார்முலாவை சென்னையின் சேரிகளில் வாழும் ஏழை மக்கள் மீது பிரயோகித்து பார்க்கிறார். இவரது சோதனை முயற்சிகளில் பல பேர் மரணமடைகிறார்கள். கொடுமை என்னவென்றால் அந்த ஏழைகளுக்கு டாக்டர் போடும் ஊசி எதற்கென்றே தெரியாது. இலவச மருத்துவம் செய்பவர் என்பதால் அவரது மருத்துவமனைக்கு விட்டில் பூச்சிகள் மாதிரி நிறைய ஏழைகள் படையெடுக்கிறார்கள்.

இந்த மாதிரியான டாக்டர்களை அழிக்க ஆயுதம் ஏந்துகிறார் மருத்துவம் படித்த இளைஞர் நெல்லை மணி. டாக்டர் ராமகிருஷ்ணனை கொல்லும் முயற்சியின் போது அவருக்கு அறிமுகமாகிறான் "ஈ" எனும் ஈஸ்வரன். ஆரம்பத்தில் ஈயும் நெல்லை மணியுமே மோதுகிறார்கள். ஒரு கட்டத்தில் "ஈ"யின் ஆயாவும் டாக்டர் ராமகிருஷ்ணனின் சோதனையில் மரணமடைகிறார். நெல்லை மணி மூலமாக "ஈ"க்கு உண்மை தெரியவருகிறது. நெல்லை மணியும் மரணமடைய அவரது பணியைத் தொடர்கிறான் "ஈ"

"ஈ"யாக ஜீவா. காசுக்காக எதையும் செய்வார். "ஒரு நாளைக்கு நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு சம்பாதிக்கலாம். தொழிலுக்கு வர்றியா" என்று காதலியிடமே கேட்கிறார். சென்னை ஸ்லாங்க் என்பதற்காக ரொம்பவும் இழுத்து இழுத்துப் பேசாமல் ஒரிஜினல் சென்னைத் தமிழை யதார்த்தமாகப் பேசுகிறார். போலிசிடம் அடிவாங்கி அயுவுர மாதிரி ஆக்ட்டு கொடுக்கும் போதும் சரி, தனக்கெதிராக சாட்சி சொல்ல நினைத்தவனை புரட்டியெடுக்கும் போதும் சரி.... பட்டையைக் கிளப்புகிறார்.

"ஈ"க்கு காதலியாக, காபரே டேன்ஸராக ஜோதியாக நயன்தாரா. இவர் உருப்படியாக நடிக்க ஆரம்பித்ததே இந்தப் படத்தில் தான் போல. "காசுக்காக என்னையே கூட்டிக் கொடுக்க நெனைச்ச மாமா பையன் நீ" என்று காதலனிடம் சீறும் போதும். அவனை கடைசி வரை திருத்த முயற்சித்து தோற்று ஊரை விட்டே போகும் போதும் நடிப்பு ரொம்பவும் இயல்பாக இருக்கிறது.

"ஈ"க்கு நண்பனாக கருணாஸ். லுங்கியை போர்த்திக்கொண்டு பிளாட்பாரத்தில் தூங்குகிறார். லுங்கியின் முனையைக் கடித்துக் கொண்டே வேன் புட்போர்டில் தொங்குகிறார். சென்னை சேரி இளைஞர்களை நன்கு அப்சர்வேஷன் செய்து நடித்திருக்கிறார். டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஷ் வித்யார்த்தி அவரைக் கொல்ல வரும் தீவிரவாதி நெல்லை மணியாக பசுபதி என நல்ல நடிகர் தேர்வு....

மக்களுக்காக போராட தன் பிறப்புக்கே தகுதியில்லை என கதாநாயகன் சொல்லும் கட்டத்தில் "நீ பொறந்த சாதி தெரிஞ்சிருந்தா சாதிசங்கத் தலைவன் ஆயிருப்பே, நீ பொறந்த மதம் தெரிஞ்சிருந்தா மத வெறியன் ஆயிருப்பே... நீ தேவடியா மகனா பொறந்ததே பெரிய தகுதி தாண்டா" என்று பசுபதி வசனம் சொல்லும் இடம் செம காரம். சீரியஸான சப்ஜெக்டாக இருந்தாலும் கூட வசனங்களையும், காட்சியமைப்புகளையும் நகைச்சுவையாக அமைத்து படத்தின் ஒரு காட்சியில் கூட தம் அடிக்க வெளியே போக இடம் தராமல் விறுவிறுப்பாக படம் நகருகிறது.

பாடல்கள் பரவாயில்லை. கேட்கவும், பார்க்கவும் நன்றாக இருக்கிறது. ஒரே முறை பாடலும், காதல் ஒரு போதிமரமும் ஒன்ஸ் மோர் கேட்கலாம். படத்துக்காக போடப்பட்டிருக்கும் சென்னை சேரி செட்டிங் அட்டகாசம்.

"ஈ" - ஈடு இணையில்லாதவன்....

(http://madippakkam.blogspot.com)

நல்லது லக்கி வாழ்த்துக்கள் இதெ போலெ நகைச்சுவை படம் இல்லையில்லை கோமாளிகளின் கூட்டில் உருவாகிய படமான தர்மபுரியை பற்றி விமர்சிக்கலாமே படம் முழுக்க சிரிப்பாக கிடக்கு

அதிலயும் பேரரசுவின் டயலொக் வேற ஜயோ ஜயோ

ஆகா...பயோகெமிக்கல் ஆயுதங்கள் மனிதர் மீது பரிசோதனை செய்வது பின்னர் அவர்களை "ஈ" என்பவர் பழிவாங்குவது எல்லாம் எற்கனவே எங்கோ பார்த்த கதை போலத் தெரிகிறதே...

ஆட ஆமாம் "V for Vendetta"

http://www.imdb.com/title/tt0434409/

http://en.wikipedia.org/wiki/V_for_Vendetta

Lion top 10 ஸ்டைலில் சொல்வதானால்

"ஈ - ஈ அடிச்சான் கொப்பி"

பி.கு.: நானே எனது முகமுடியை அங்கேதான் உருவினேன்.

:-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.