Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒபாமா வருகையை முன்னிட்டு மிரளவைக்கும் பாதுகாப்பு ஏற்பாடு -

Featured Replies

ஒபாமா வருகையை முன்னிட்டு, டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுமார் 80 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற 10 ஆயிரம் துணை நிலை ராணுவ வீரர்கள் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ஆக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

என்றாலும் அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா பாதுகாப்புக்காக 1600 வீரர்களை அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. இந்த 1600 வீரர்களும் ஒரு கொசுவை கூட ஒபாமா அருகில் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இவர்கள் பயன்படுத்துவதற்காக 6 விமானங்கள் நிறைய நவீன கருவிகளும் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கருவிகளை கொண்டு 2 இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளனர்.

ஒபாமா செல்லும் பாதைகளை கண்காணிக்க தனி ராடார் பொருத்தப்பட்டுள்ளது. எங்காவது வெடி குண்டு பதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பல நவீன கருவிகளை டெல்லி போலீசார் வைத்துள்ளனர்.

என்றாலும் வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களை கூட அமெரிக்க வீரர்கள் கையோடு அழைத்து வந்துள்ளனர்.

ஒபாமா ராஜபாதை பகுதியில் சுமார் 2 மணி நேரம் தங்கி இருந்து அணி வகுப்பை பார்வையிடுவார். எனவே ராஜபாதை அருகில் உள்ள 71 உயரமான கட்டிடங்களை அமெரிக்க பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஒபாமா செல்லும் வழிகளில் ஏற்கனவே டெல்லி போலீசார் சுமார் 10 ஆயிரம் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி உள்ளனர். ராஜபாதையில் மட்டும் 165 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனால் இது போதாது என்று அமெரிக்க பாதுகாப்பு படையும் ரகசிய காமிராக்களை பொருத்தி வருகிறது. ஒபாமா செல்லும் இடங்களில் உள்ள புல்லை கூட ஸ்கேன் செய்து விடும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களின் நடவடிக்கைகள் உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மிரள செய்யும் வகையில் உள்ளதாக டெல்லி மக்கள் பேசுகிறார்கள்.

- See more at: http://www.canadamirror.com/canada/37144.html#sthash.eHCmSQPp.dpuf

 

 நானும் எத்தனை தடை போயிருக்கேன் கண்டுக்கவேயில்லை

Edited by BLUE BIRD

cart24_2288391f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி வந்திருக்கும் ஒபாமாவின் அதிநவீன கார்
January 24, 2015 உலகம்
 
 
Obama1%28C%29.JPG?itok=OMwVS1tU

புதுடெல்லி - குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக இன்று இந்தியா வரும் ஒபாமா பயணம் செய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கார் அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்தது.

நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த  விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமாக பங்கேற்கிறார். இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான  போலீசார், துணை ராணுவத்தினர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

டெல்லியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லையில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. குடியரசு  தினவிழா வுக்கு இந்தியா வரும் ஒபாமா, இங்கு பயணம் செய்யும் வகையில் அதிநவீன  தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட கார், அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கொண்டு  வரப்பட்டது.

 

இந்த கார் 8 டன் எடை கொண்டது. குண்டு துளைக்காத இந்த கார் 8 இன்ச் தடிமன் கொண்டது. காரின்  கதவுகள் விமானத்தின் கதவுகள் போன்று இருக்கும். உலகின் எந்தவொரு மூலையிலும் தொடர்பு  கொள்ளும் வசதிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் தீ பிடிக்காத  வகையில் பெட்ரோல், டீசல் டேங்குகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. தீயணைப்பு கருவிகள்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை உள்ளன.

இரவிலும்கூட தெளிவாக தெரியும் அதிநவீன  கண்காணிப்பு கேமராக்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த காரில் 7 பேர் பயணம் செய்ய  முடியும். காரின் டயர்கள் பஞ்சர் ஆகாத வகையிலும், துப்பாக்கி  குண்டுகளால் சேதமடையாத தன்மை கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி  பெற்ற டிரைவர்கள் மட்டுமே இந்த காரை இயக்க முடியும்.

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த அதி நவீன கார் டெல்லி வந்துள்ளது. இது ஒரு நடமாடும் அதிபர மாளிகை என்று வர்ணிக்கப்படுகிறது.

http://www.thinaboomi.com/2015/01/25/42035.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அதி நவீன சிறப்பு வசதிகளுடன் கூடிய பீஸ்ட் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிரத்யேக வாகனம் டெல்லி வந்தடைந்துள்ளது. 

ஒருவேளை அமெரிக்க அதிபர் ஒபாமா பாரம்பரியாமாக கடைபிடித்து வரும் நெறிமுறைகளை தகர்க்காமல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஒரே காரில் ராஜபாதையில் வருகை தந்தால், அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட தங்களது சொந்த காரில் பயணிக்காத ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
லின்கான் காண்டினெண்டல் என்ற திறந்த வெளி காரில் சென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடி கொலை செய்யப்பட்டபிறகு அமெரிக்கா தங்கள் அதிபர்களின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்தது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பீஸ்ட் காரில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-


18 அடி நீளமும் 8 டன் எடையும் கொண்ட இந்த ‘பீஸ்ட்’ கார் எந்த வகையான தோட்டா மற்றும் வெடிகுண்டுகளையும் தாங்கும் வல்லமை படைத்ததாகும். இதனுடைய சக்கரங்கள் பஞ்சர் ஆகாத தன்மை கொண்டவையாகும்.டீசல் டேங்க் வெடித்துச் சிதறாமல் இருக்க, தனித்துவமான நுரை உடைய தீயணைப்பு கருவி, இரவிலும் தெளிவாகக் காட்டக்கூடிய கேமரா போன்ற கருவிகளை உடைய இந்த காரை ஆபத்துக் காலத்தில் மிக வேகமாகவும், 180 டிகிரி சுழற்சி செய்து தப்பிக்கவும் பயிற்சி பெற்ற ரகசிய பாதுகாப்புப் படை ஓட்டுநர் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது..10382434_1103800936312585_23468038716100

 

 

  • தொடங்கியவர்

இலங்கையர்கள் மீது தீவிர கண்காணிப்பு – ஒபாமாவைக் குறிவைக்கலாம் என எச்சரிக்கை JAN 25, 2015 | 1:48by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

delhi-security-300x199.jpgஇன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சிறிலங்காச் சேர்ந்தவர் குறிவைக்கலாம் என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இன்றுகாலை 10 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வரவுள்ளார். நாளை புதுடெல்லியில் நடைபெறும் இந்தியக் குடியரசு நாள் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார்.

ஒபாமாவின் இந்தியப் பயணத்தைச் சீர்குலைக்க இஸ்லாமிய தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக சிறிலங்கா அல்லது மாலைதீவை சேர்ந்தவர்களைக் கொண்டு ஒபாமா மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் இதுபோன்றதொரு திட்டம் இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்தநிலையில், ஒபாமா மீது சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கலாம் என்று புதுடெல்லி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நீண்டகால நுழைவிசைவுடன் தங்கியிருப்பவர்கள் மற்றும் நுழைவிசைவு காலாவதியான பின்னர் தங்கியிருப்பவர்கள் குறித்து, தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மற்றும் மாலைதீவு நாட்டவர்களை உன்னிப்பாக கண்காணிக்கும்படி,  டெல்லி, உத்தரப்பிரதேச காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

//இலங்கையர்கள் மீது தீவிர கண்காணிப்பு – ஒபாமாவைக் குறிவைக்கலாம் என எச்சரிக்கை//

 

இலங்கையருக்கும், ஒபாமாவுக்கும்... வாய்க்கால், வரப்பு சண்டையா?
இந்திய புலனாய்வுக்கு..... பைத்தியம் பிடிச்சிட்டுது. :rolleyes: 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.