Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண் மாசுபடுதல் நோயுற்ற மனிதர்களை உருவாக்கும் - க.வ.ஜெயதாசன்

Featured Replies

oil1_CI.jpg

சுண்ணாகத்தில் எற்பட்ட கழிவெண்ணை விவகாரம் சுற்றுச்சூழலை பழுதடையச் செய்யும் செயல் மட்டுமல்ல முற்றுமுழுதாக அந்த எண்ணைக்கழிவு வியாபித்திருக்கும் ஏக்கர்க்கணக்கான நிலத்தை ஒன்றுக்கும் உதவாத நிலமாக்கிவிடக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

உலகம் எங்கும் சுற்றுச்சூழல் பழுதடைகிறது என எதிர்காலச் சந்ததியனருக்காக கவலைப்படும் மனிதர்களும் ஊடகங்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதை அனைவரும் அறிவீர்கள்.

ஒரு தொழிற்சாலையை நிர்மாணிக்கும் போது, அந்த தொழிற்சாலை என்ன பொருளை உற்பத்தி செய்யப்படப் போகின்றது  பொருள் உற்பத்தி செய்யப்படும் போது அதிலிருந்து பெறப்படும் கழிவு நிலம், நீர், காற்று, ஆகாயம் போன்றவற்றை மாசு படுத்தாமல் வெளியேற்றப் படுவதற்கான முறைகளையும் உள்ளடக்கியதே தொழிற்சாலை நிர்வாகத்தின் மிக முக்கிய பணியாகும். அதுமட்டுமல்லாமல் தொழிற்சாலையிலிருந்து வரும் இரைச்சல் தொழிலாளர்களையும், தொழிற்சாலையைச் சுற்றியிருக்கும் வீடுகளுக்கும்  பாதிப்பை ஏற்படுத்துகின்றதா என்பதை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படுகின்றது.

சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தித் தொழிற்சாலையின் எண்ணைக்கழிவு நிலத்திலேயே போகச் செய்தமை பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் தருகின்றது. தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எண்ணைக்கழிவை நிலத்தில் பாய விடுவதால் மண் மாசுபடும்,மண்ணால் உறிஞ்சப்படும் மழைநீர் மாசுபடும் என்பதை அவர்கள் அறியவில்லையா என்ற கேள்வி எழுகின்றது. அதுபற்றி அறிந்திருந்தும் ஏன் அலட்சிய மனோபாவத்துடனும் அசமந்தப் போக்குடனும் இருந்தார்கள் என்பது வியப்பாக இருக்கின்றது, அதிர்ச்சியளிக்கின்றது.

சுண்ணாகத்தில் வெளியேற்றப்பட்ட எண்ணைக்கழிவு நிலத்தினில் பல மீற்றர்கள் வரை ஊறி நிலக்கீழ் ஆறாக பரந்து மல்லாகம் தெல்லிப்பழை வரை சென்று கிணற்று நீர்களை மாசுபடுத்தியிருக்கிறதென்றால் எவ்வளவு ஏக்கர் நிலத்தை இந்த எண்ணைக் கழிவு பழுதடைய வைத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

மழைநீர்கூட மண்ணின் மெதுமைக்கேற்ப ஊறி மக்கிப் படிவங்கள், இறுக்கமான கற்படிவங்கள் வரை சென்றே தேங்கி ஊற்றாக வெளிப்படுகின்றன. பல மீற்றர் ஆழத்தில் எண்ணை ஊறி பரந்து நிற்கும் மண்படிவங்களி;ல்  மழை நீர பெய்து கீழ்நோக்கி ஊறிச் செல்லும் போது எண்ணைக்கழிவு படிவத்துக்கூடாகச் செல்லும் போது நீர் அசுத்தப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

மண்ணை ஊடுருவிச் செல்லுகின்ற ஆணிவேரைக் கொண்ட பக்க வேர்களைக் கொண்ட பலா,மா, வேம்பு உட்பட பல பெரிய மரங்கள் காலப்போக்கில் எண்ணைப் படிவத்தால் பட்டுப் போகும் நிலை ஏற்படலாம்.

மண் மிக மிகப் பெறுமதி மிக்கது என்பதற்கு எனது தொழிற்சாலையில் எனது கண்ணால் பார்த்த அனுபவத்தை கீழே தருகின்றேன்.

நான் வேலை செய்த காய்கறிகளை பதனிடும் தொழிற்சாலைக்கு துருக்கியிலிருந்து சிறிய வெள்ளரிக்காய்களை ஏற்றி வந்த லொறியை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள வீட்டுக் காணியொன்றுக்குள் பின்னோக்கி லொறியை லொறிச்சாரதி எடுத்த பொது நிலத்தோடு ஏதோ ஒரு அடையாளத்திற்காக இருந்த இரும்பு லொறியின் டீசல் ராங்கிலிருந்து வரும் சிறிய பைப்பில் தட்டுப்பட அந்த பைப் உடைந்து டீசல் ஒழுகத் தொடங்கியது.

நான் தொழிற்சாலையின் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பாக வேலை செய்தவன். லொறி பின்னோக்கி போவதை கண்ட நான் எனது போக்லிப்றில் லொறி பின்னோக்கி போவதை பார்த்துக் கொண்டு பாதையை விட்டு விலகும் வரை காத்திருந்த போதுதான் இந்தச் சம்பவம் நடந்தது.

டீசல் ஒழுகியதைக் கண்டதும் அந்தக் காணியின் வீட்டுக்காரர் ஓடி வரவும் நானும் போக்லிப்றை விட்டு இறங்கி டீசல் ஒழுகிக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து போனபடியே என்னிடம் இருந்த தொழிற்சாலை தந்து தொலைபேசி ஊடாக எனக்குப் பொறுப்பான அதிகாரிக்கு நடந்த சம்பவத்தைச் சொல்ல அவரும் உடனடியாக அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.

பலர் அந்த இடத்தில் கூடிவிட்டனர். எல்லோருடைய கவலையும் மண் பழுதடைந்துவிட்டதே என்பதுதான். 

உடனடியாகவே நகர நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டது. பத்துநிமிட இடைவெளிக்குள் நகர நிர்வாக அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

லொறியை பலரின் உதவியுடன் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் டீசல் ஒழுகிய இடம் அளக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குள் மண்ணை வெட்டி அள்ளும் இயந்திரமும் வந்து டீசல் ஒழுகிய மண் அத்தனையையும் வெட்டி அள்ளி புதிய மண் போட்டு நிரப்பப்பட்டது.

எனது அதிகாரியை நான் இந்தச் செலவு யாருடைய பொறப்பு என்றேன். அவர் சொன்னார் இந்த லொறிக்கு பொறுப்பான துருக்கியிலிருக்கும் நிறுவனமே முழுச்செலவையும் கட்டும், கட்ட வேண்டும் என்பதுடன் காணிச்சொந்தக்காரணுக்கும் அவர்கள் காசு கட்ட வேண்டும் என்றார்.

இங்கே நான் இதைப் பதிவு செய்ததன் காரணம் மண் பெறுமதியானது. இந்தக்கழிவு எண்ணையால் சுண்ணாகமும் அதன் அயல் கிராமங்களான மல்லாகம் தெல்லிப்பழை போன்றவையின் மண் பாதிப்பு அபாயகரமானது.எனவே மண்ணின் பாதிப்புக்கும் மக்களுக்க ஏற்படப் போகும் பாதிப்புக்கும் மின்பிறப்பாக்கி நிறுவனமே பொறுப்பு. அதனால் ஏற்படும் செலவுக்கும் அவர்களே பொறுப்பு.

மனிதர்கள், மண்ணின் கீழ் உயிர் வாழும் உயிரினங்கள் மரம் செடி கொடி வரை எண்ணைக் கழிவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தப் போகின்றது.

கடந்த அரசாங்கத்தில் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பாகவும் இன்றைய அரசில் எரிபொருள் சக்திவள அமைச்சர் மாண்புமிகு சம்பிக்க ரணவக்க அவர்கள் உனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

க.வ.ஜெயதாசன்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115997/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.