Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓடும் ரயிலில் இருந்து போலீசால் தூக்கிவீசப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாரணாசி: உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஓடும் ரயிலில் இருந்து ரயில்வே காவலரால் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிதா, தனது உறவினர்களுடன் கான்பூரில் வேலை செய்யும் தனது கணவர் பார்வேஸ் பாலை பார்க்க சென்றுள்ளார். ஹவுரா - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது உறவினர்களுடன் அசான்சோலில் இருந்து கான்பூர் சென்றுள்ளார்.

ரயிலில் அதிகமான கூட்டம் இருந்ததால், ரிதா தனது 18 மாத குழந்தை காஜல், அப்பா மானிக் பால் மற்றும் சகோதரர் ஜெய்தீப் பால் ஆகியோருடன் பார்சல் பெட்டியில் ஏறியுள்ளார் என்று கூறப்படுகிறது. ரயில் வாரணாசி வந்ததும், ரயில்வே காவலர் ஒருவர் பார்சல் பெட்டிக்குள் வந்ததோடு, அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது, பணத்தை கொடுங்கள், இல்லையென்றால் ரயிலைவிட்டு இறங்குங்கள் என்று காவலர் மிரட்டியுள்ளார். அவர்கள் கொடுக்க மறுக்கவே ரயிலில் இருந்து வெளியே தள்ளியுள்ளார்.  காவலர் வெளியே தள்ளியபோது ரயில் புறப்பட்டுவிட்டது. ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழுந்த ரிதா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜேஸ் குமார் சிங் கூறுகையில், ரிதா மற்றும் ஜெய்தீப் என்று இரண்டு பேர் இங்கு அனுமதிக்கப்பட்டனர். ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட ரிதா மார்பு பகுதியில் காயம் காரணமாக உயிரிழந்தார் என்று கூறினார்.

இது குறித்து ரிதாவின் தந்தை மானிக் கூறுகையில், "ரயில் பெட்டிக்குள் ஏறிய நபர் என்னிடம் இருந்த ரூபாய் 3,500-யை பிடுங்கி கொண்டார். எனது மகன் ஜெய்தீப்பை கடுமையாக தாக்கினார். என்னுடைய மகளை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தார். அந்த நபர் போலீஸ் சீருடையில் இருந்தார். வாக்கி டாக்கியும் வைத்திருந்தார்” என்று கூறினார்.

இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், ஓடும் ரயிலில் பெண்ணை வெளியே தள்ளிவிட்டது ரயில்வே போலீஸ் படையை சேர்ந்த சரத் சந்திரா துபே என தெரியவந்துள்ளது.

இது குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரி ஒ.பி.சிங் கூறுகையில், "நாங்கள் குற்றவாளியை காவலில் எடுத்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=37954

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியாவில் காட்டுமிராண்டிகள் அதிகம் என்பது இன்னுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.. அந்த காட்டுமிராண்டி ஜீன்களில் கொஞ்சம் சிங்கள ரத்தத்திலும் ஓடுவது தெளிவு. எல்லாருக்கும் ஜீன் மாற்று சிகிச்சை செய்ய வேணும். :o

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியாவில் காட்டுமிராண்டிகள் அதிகம் என்பது இன்னுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.. அந்த காட்டுமிராண்டி ஜீன்களில் கொஞ்சம் சிங்கள ரத்தத்திலும் ஓடுவது தெளிவு. எல்லாருக்கும் ஜீன் மாற்று சிகிச்சை செய்ய வேணும். :o

 

வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர் என்று அவர்களது மகாவம்சமே தெரிவிக்கிறது. மகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயனாவான். இவன் சிங்கபாகு ஆட்சி செய்த வங்க தேசத்தில் உள்ள லாலா நாட்டு மக்களுக்கு மிகவும் கொடுமையானவனாகவும் வன்முறை மிக்கவனாகவும் இருந்தான். இவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் இலங்கைகையின் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. அங்கே இயக்கர் தலைவி குவேனியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே, குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக்கொண்டான்.             (ஆதாரம் விக்கிபீடியா)
 
இச்சரித்திர வாயிலாக தாய்வழி ஜீன்களைக் கொண்டும் தந்தைவழி ஜீன்களைக் கொண்டும் சிங்களவர்கள் உள்ளனர். தாய்வழி ஜீன்களைக் கொண்ட சிங்களவர்களையே இன்றும் நல்ல மனிதர்களாகக் காண்கிறோம். தந்தைவழிக் காட்டுமிராண்டி ஜீன்கள் ரத்தத்தில் ஓடும் சிங்களவர்களையே மகிந்த ராசபக்ச, கோத்தபாய ராசபக்ச போன்ற வடிவங்களில் காண்கிறோம்.  :o  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.