Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகள் விவகாரம்: தி.மு.க. தலைவருக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்பால் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சி இன்னமும் தணியாத நிலையில் இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசைக் குற்றம்சாட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பல முரண்பாடுகளைக் கொண்டதாக உள்ளது என கூறியுள்ளார்.

இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாக, இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு கலந்து கொள்ளாதது சரியான நிலைப்பாடு என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இருந்தபோதும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல் என்று கூறுவது இரட்டை வேடமாகாதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னரே, இங்கே உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். .

தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சலுகைகள் பல மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டவை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரான தனக்கு மரியாதை அளிக்கப்படாதது குறித்து மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்திருக்கும் பன்னீர்செல்வம், அவரவர்க்கு உரிய மரியாதை அவரவர்க்கு கிடைக்கப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியிருந்த கடிதத்தில், தில்லியில் நடைபெறும் கூட்டத்திலே கலந்து கொண்டு, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிய நிவாரணங்கள் விரைவில் காணப்பட வேண்டுமென்று நேருக்கு நேர் நின்று குரல் எழுப்பாமல், அந்தக் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு நொண்டிச் சமாதானம் கூறிக் கடிதம் எழுதியிருப்பதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

10269432_10152560219770163_5636688700658
10968357_10152560220265163_8050299709383
 
 
bb

bbctamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.