Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களக் கொலைகாரர்களுக்கு ஆயுதம் வழங்க இந்தியா முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கொலைகாரர்களுக்கு

ஆயுதம் வழங்க இந்தியா முடிவு

தமிழர்களே உங்கள் முடிவு என்ன?

இலங்கை அரசுக்குத் தாக்குதல் ஆயுதங்களை வழங்குவது இல்லை என்ற கொள்கை உள்ளது. ஆனால் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிரதேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாம் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - என்று அரசிடம் இருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்துடன் பேச்சு நடத்தினோம். சோனார்கள், இராடார்கள், இலத்திரனியல் தளவாடங்கள், கடற்படையினருக்கான துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவற்றை அனுப்ப உள்ளோம்" என்று இந்தியக் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் கூறியுள்ளார்.

இலங்கைக்கு இராணுவ உதவி செய்யமாட்டோம் என பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் பலமுறை வாக்குறுதிகள் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அந்த வாக்குறுதிகளைத் துச்சமாக மதிக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.

சிங்களக் கடற்படையினருக்குத் துப்பாக்கிகளை வழங்கப்போவதாக இந்தியக் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் அறிவித்திருப்பது எதற்காக?

ஏற்கனவே கடந்த 20 ஆண்டு காலமாக சிங்களக் கடற்படையினர் எல்லை தாண்டிவந்து அத்துமீறி தமிழ்நாட்டின் மீனவர்களைச் சுட்டுத் தள்ளுகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டின் மீனவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். நமது மீனவர்கள் கடலில் செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. அவர்களைப் பாதுகாக்கும் கடமையுள்ள இந்தியக் கடற்படை அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுத் தள்ளுவதற்காக இந்தியக் கடற்படை அவர்களுக்குத் துப்பாக்கிகளை வழங்க இருக்கிறது.

நியாயமாக இந்தியக் கடற்படையின் துப்பாக்கிகள் நம்முடைய மீனவர்களைக் காப்பாற்ற சிங்களக் கடற்படையினரை நோக்கித் திருப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் அந்தத் துப்பாக்கிகளை சிங்களக் கடற்படையினருக்கு வழங்கி நமது மீனவர்களைச் சுட்டுத் தள்ள இந்தியக் கடற்படை உதவப்போகிறது.

இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்தும் வேலையை இந்தியா செய்வது எதற்காக? இலங்கை பாகிஸ்தானோடு மிக நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் நோக்கத்திற்கு சிங்கள அரசு துணைபோகிறது.

இந்துமாக்கடல் பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாக எண்ணிக்கொண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாட்டின் மீனவர்களை சின்னஞ்சிறிய நாடான இலங்கையின் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருவதும் அதன் முன்னால் மண்டியிட்டு இந்திய அரசு அது கேட்கும் ஆயுதங்களைக் காணிக்கையாக அளிப்பதும் மிகக் கேவலமான செயலாகும்.

தமிழக மீனவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, சிங்களரின் நட்புக் கரங்களே நமக்குத் தேவை என இந்திய அரசு முடிவெடுத்துவிட்டது.

தமிழர்களும் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

-தென்செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்தியா மட்டும் இல்லை.. ஆயுதங்களை விற்பனை செய்யும் ஒருவருக்கும் அதனால் வேதனைப்பட்டு கதறியழும் மக்களின் குரல்கள் கேட்பதில்லை!

இதுதான் உலக யதார்த்தம்..!

அது தான் வடக்கத்தை நாட்டு அரசு இதே தமிழ்நாட்டு பிரதமர் இருந்தால் நடக்குமா? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.