Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : கொடும்பாவியை எரிக்க முற்பட்டதால் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rauff-hakeem-protest.jpgநகர்ப்புற அபிவிருத்தி  மற்றும்  நீர்வளத்துறை  அமைச்சர்  ரவூப் ஹக்கீமுக்கு எதிராக இன்று சாய்ந்தமருது  மக்களால் அமைச்சரின் கொடும்பாவியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

கிழக்கு மாகாண சபையின்  முதலமைச்சர் நியமனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்துள்ளமையை ஆட்சேபித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது  

 

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர்  பதவி தொடர்பிலான விவகாரம் பரபரப்பாகியுள்ள நிலையில்  முஸ்லிம் காங்கிரஸ் ஹாபிஸ்  நபீர்  ஹஹமரை முதலமைச்சர் வேட்பாளராக சிபார்சு செய்துள்ளது. 

 

இதனை  எதிர்த்து சாய்ந்தமருது மக்கள் இன்று ஜும்மா தொழுகையின்  பின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஹாபிஸ் நபீர் ஹஹமரை சிபார்சு  செய்தமை  அம்பாறை  மக்களுக்கு செய்த பெருந்துரோகம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 

கல்முனை பள்ளிவாசல்   முன்பாக வீதியை மறைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இளைஞர் குழுவொன்றும் பொதுமக்கள் சிலரும் அமைச்சர்  ரவூப் ஹக்கீமின்  கொடும்பாவியை  எரிக்க  முற்பட்ட  போது கல்முனை பொலிஸார் கொடும்பாவியை எரிக்காது  தடுக்க முற்பட்டதால்  பெரும் தள்ளுமுள்ளுக்கள்  ஏற்பட்டதையடுத்து  சாய்ந்தமருது  ஜும்மா முன்பாக  போக்குவரத்தும்  முற்றாக  தடைப்பட்டது. 

 

 எனினும் கல்முனை  பொலிஸார் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திலிருந்து  பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். வாக்களிக்காதவர்களுக்கு முதலமைச்சர்  பதவியா? கூடிய வாக்களித்த சாய்ந்தமருது மக்களுக்கு எந்த பயனும் இல்லை. 

 

கட்சிக்கு உழைப்பவர்களுக்கு இடமில்லை. தலைவர்  ஹக்கீமே ஏன் இந்த புறக்கணிப்பு?  தனி ஒருவரிடம் பேரம் பேசுவது ஏன்?  என்று பலவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர். இச்சம்பவத்தால் சாய்ந்தமருது  பிரதேசமே அல்லோலகல்லோலப்பட்டு காணப்பட்டது. 

 

http://www.virakesari.lk/articles/2015/02/06/%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தரப்பிடம் முதலமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த ஹக்கீம் அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார். அம்பாறை மாவட்ட வாக்குகளை பெரும்பான்மையாக நம்பி கட்சி நடத்தும் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க தீர்மானத்ததன் காரணத்தால் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக சாய்தமருது உள்ளிட்ட பகுதிகளில் பெரும் எதிர்ப்பைச் சந்திக்கிறார். 

 

இந்த விடயம் அவரது தலைமைப் பதவிக்கு ஆப்பு வைக்குமளவிற்கு சென்றாலும் ஆச்சரியப்பபடுவதற்கில்லை. 

 

இரண்டு வருட முடிவில் முதலமைச்சர் பதவியை பெறுவது தொடர்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட  தொடர் நடவடிக்கைகளின் போதும் இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டதனால் தான் ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே தொடர்ந்து முதலமைச்சராக இருக்கட்டும் என ஹக்கீம் தீர்மானித்திருந்தார். 

 

ஆனால் எங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பதவியைப் பிடித்துவிடப் போகிறதோ என்ற எரிச்சலில் அல்லது ஆத்திரத்தில் அவர் எடுத்த இனவாத நடவடிக்கையின் விளைவை இப்போது அனுபவிக்கிறார்.

 

எது எப்படியோ இதனால் இலாபமடையப் போவது கிழக்கில் மெல்ல மெல்லக் கால் பதித்து வரும் றிசாட் பதியுதீன் தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.