Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுக நகர கட்டுமானம்; 'இன்னும் முடிவாகவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுக நகர கட்டுமானம்; 'இன்னும் முடிவாகவில்லை'

8 மணி நேரங்களுக்கு முன்னர்

150205122347_colombo_port_city_512x288_dசுற்றுச்சூழல் காரணங்களுக்காக கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் விமர்சனங்களுக்கு உள்ளானது

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிவருகின்றது.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் குறித்த கவலைகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் கைவிடப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புகளே பெரும்பாலும் நிலவின.

எனினும், இந்த செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

மொறட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்தியிருந்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் தங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகர கட்டுமான வேலைகள் தொடங்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த அறிவிப்பு புதிய அரசாங்கத்தின் தேர்தலுக்கு முந்தைய பிரசாரங்களுக்கு முரணானது என்று மக்கள் விடுதலை முன்னணி இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

'எந்தவிதமான சோதனைகளும் இன்றி, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கூறியிருக்கிறார். அமைச்சரவை இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்று இந்த நாடாளுமன்றம் தெரிந்துகொள்ள வேண்டும்' என்றார் ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க.

'முழுமையாக ரத்துசெய்யும் முடிவும் இல்லை' 150101205001_ranil_wickramasinghe_maithr'புதிய ஜனாதிபதியும் பிரதமரும் துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்': ஜேவிபி

இதற்குப் பதில் அளித்த புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தை முழுமையாக ரத்துசெய்துவிட வேண்டும் என்ற முடிவை அரசாங்கம் இன்னும் எடுக்கவில்லை என்று கூறினார்.

'இந்த கட்டுமான செயற்திட்டம் பெரிய அளவிலான செயற்திட்டம். சீன அரசின் உதவி கிடைத்துள்ள ஒரு திட்டம். இந்த வேலைத்திட்டத்தை வெறுமனே கோரிக்கைகள் வருகின்றன என்பதற்காக நிறுத்திவிடமுடியாது' என்றார் ரணில் விக்ரமசிங்க.

'அதேநேரம் எமது நாட்டின் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும். இதுபற்றி ஆய்வுநடத்திவரும் குழுக்களின் அறிக்கை கிடைத்தவுடன் அமைச்சரவை துணைக்குழு கூடி ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவை எடுக்கும்' என்றும் கூறினார் பிரதமர்.

சீனாவுடன் பேச்சுவார்த்தை 110826131649_liu_jianchao_304x171_ap.jpgலியூ ஜியான்சாவோ கொழும்பில்

சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் லியூ ஜியான்சாவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவினரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

'இலங்கையுடனான சீனாவின் எல்லா கட்டுமான வேலைத்திட்டங்களும் அவை தொடர்பான மீள் மதிப்பீடுகளின் பின்னர் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்' என்றார் லியூ ஜியான்சாவோ.

'சீனா பெரிய அளவிலான முதலீடுகளின்போது நீண்ட நடைமுறைகளை கடக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறே நாங்கள் ஏற்கனவே பெரிய அளவிலான முதலீடுகளை இலங்கையில் தொடங்கியுள்ளோம். துறைமுக நகரம் இந்த நாட்டில் நாங்கள் செய்கின்ற மிகப்பெரிய முதலீடு' என்றார் சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150206_colombo_port_city

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.