Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தேர்தலில் சிதறிக்கப்படும் இலங்கைத் தமிழர் வாக்குக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தேர்தலில் சிதறிக்கப்படும் இலங்கைத் தமிழர் வாக்குக்கள்
 
rathika_andbaby.jpeg.size.xxlarge.letter
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதி ஸ்காபுறோ ஆகும். டொராண்டோ மாநகரத்தின் கிழக்குப் பகுதியான ஸ்காபுறோவில் அதிகளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஸ்காபுறோ, மார்க்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே கனடாவில் வாழ்கின்ற முக்கால்வாசி இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றார்கள். 
 
இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு கனடா. அதிலும் டொராண்டோ பெரும்பாகத்தில் தான் அதிகம் பேர் வாழ்கின்றார்கள். சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் பேர் டொராண்டோ பெரும்பாகத்தில் இருக்கின்றார்கள். அதிலும் மிக அதிகமானோர் வாழ்வது ஸ்காபுறோ ரூஜ் றிவர் பகுதியில் தான்.

கடந்த முறை பாராளமன்ற தேர்தலில் கனடா வரலாற்றிலேயே முதல்முறையாக இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான ராதிகா சிற்சபையீசன் என்பவர் கனடா பாராளமன்ற உறுப்பினராக புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் செறிவாக வாழ்கின்ற ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியை இரண்டாக பிளவடையச் செய்து மற்றுமொரு முறை இலங்கைத் தமிழர் யாருமே பாராளமன்ற உறுப்பினராக வரக் கூடாது என்ற எண்ணத்தில் ஆள்கின்ற பழமைவாத கட்சி சில ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியின் எல்லைகள் கிழக்கே பிக்கறிங்க நகர எல்லைக்கோட்டோடு தொடங்கி தெற்கே பிஞ்ச சாலையில் மடங்கி மெடோவேல் சாலையில் திரும்பி செப்பர்டு சலையில் மேற்காக மடங்கி மீண்டும் மார்ங்னிங்கசைட் பகுதியில் வளைந்து தெற்கு நோக்கி 401- விரைவுச்சாலையோடு தென் எல்லையாக மேற்கு நோக்கி போய் பிரிம்லி சாலையை தொட்டு வடக்கு நோக்கி வந்து மீண்டும் பிஞ்ச் சாலையில் திரும்பி மிட்லாண்டை தொட்டு வடக்கே ஸ்டீல்ஸ் சாலையோடு மார்க்கம் நகர எல்லையை தொட்டுக் கிழக்கின் பிக்கரிங்க் நகர எல்லை வரை நீளும் பகுதி.

 
Scarborough-Rouge_River_(riding_map).png
இங்கு அதிகம் தெற்காசியர்கள் வாழ்கின்றார்கள், கணிசமான அளவு சீனர்கள் வாழ்கின்றார்கள். மேலும் கறுப்பினத்தவர் உட்பட இதர இனத்தவரும் வாழ்கின்றார்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் மிக அதிகம் வாழும் பகுதி இதுவாகும்.

இந்த நிலையில் இந்த தொகுதியை நீல்சன் சாலையோடு இரண்டாக உடைத்து ஒன்றை ஸ்காபுறோ கிழக்குத் தொகுதியோடும் மற்றப் பகுதியோடு சீனர்கள் மிகுதியாக வாழும் ஸ்காபுறோ அஜின் கோடு தொகுதியின் சில பாகங்களை இணைத்தும் இரு தொகுதிகளாக உருவாக்கி உள்ளனர். ஸ்காபுறோ ரூஜ் பார்க், ஸ்காபுறோ வடக்கு என்பதே அவை.

இதன் விளைவு, தமிழர்கள் வாக்குகள் இரண்டாக பிரிந்து விடுகின்றது. அதே சமயம் கிழக்கு பாகத்தை தமிழரல்லாதோர் வாழும் ஸ்காபுறோ கிழக்கின் பகுதிகளோடு சேர்த்தும், மற்ற பகுதியில் சீனர்கள் அதிகம் வாழும் பகுதிகளைச் சேர்த்தும் இலங்கைத் தமிழரது வாக்குகளை நீர்த்துப் போகச் செய்வது.

இதன் பிரித்தாளும் தந்திரமாக, லிபரல் கட்சியின் ஸ்காபுறோ வடக்குத் தொகுதியில் சீனர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துகின்றனர், கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு இங்கு அதிக ஆதரவில்லை என்பதால், இங்கு வாழும் அனைத்து சீனரும் சீனருக்கு வாக்குப் போடுவர், இதற்காகவே சீனர் அதிகம் வாழும் பகுதிகளை அஜிங்கோடு பகுதியில் இருந்து இதில் சேர்த்தார்கள். இங்கு இந்த முறை ராதிகா சிற்சபையீசன் புதிய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடவுள்ளார். ஆனாலும் தமிழர்கள் ஒன்றிணைது வாக்கிட்டால் மட்டுமே தமிழர் ஒருவரை பாராளமன்றம் அனுப்ப இயலும்.

மற்ற தொகுதியான ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் தமிழர் வட்டாரங்களை ஸ்காபுறோ கிழக்கின் பகுதிகளோடு இணைத்து அங்கும் தமிழர் வாக்குகளின் பலத்தை குறைக்கின்றனர். இதில் இன்னொரு கொடுமை, லிபரல், புதிய ஜனநாயக கட்சி இரண்டும் ஒரு தமிழ் வேட்பாளரை இறக்கவுள்ளது. கொன்சர்வேட்டி கட்சி தமிழரல்லாத ஒருவரை இறக்கினால் , பிரியும் தமிழ் வாக்குகளால் இங்கும் தமிழரல்லாத ஒருவர் வெற்றி பெறும் வாய்ப்பை உருவாக்கி தருகின்றனர். 

 
இந்த எல்லை மறுசீரமைப்புக்கு ஏற்கனவே ராதிகா சிற்சபையீசன் கண்டனம் வெளியிட்டு இருந்தார், ஆனால் ஸ்காபுறோ பகுதியின் மற்ற இரு லிபரல் மற்றும் இரு கொன்சர்வேற்றிவ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால், திட்டமிட்ட படி எல்லைகள் பிரிக்கப்பட்டு விட்டன. 
 
மல்வேர்ன், மார்னிங்கசைட் ஹைட்ஸ் வட்டாரம் துண்டாடப்பட்டு விட்டது, இதனால் இங்குள்ள இலங்கைத் தமிழர்கள், கயானா இந்தியர்களது அபிலாஷைகள் நசுக்கப்பட்டும் விட்டன. 
 
இந்த பகுதிகளை ஸ்காபுறோ வடக்குத் தொகுதியில் சேர்த்திருக்கலாமே? ஏனெனில் இந்த பகுதிகள் ஸ்காபுறோ கிழக்கின் தென் பகுதிகளை விட ஸ்காபுறோ வடக்கினோடு தான் அதிகம் தொடர்புடையவை. ஆனால் இலங்கைத் தமிழர்கள், கயானா இந்தியர்களின் வாக்குகளை சிதறடிக்கும் எண்ணத்தில் மட்டுமே ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்கு லிபரல் கட்சியும் துணை போயுள்ளது. இந்த இரு கட்சிகளுமே வெள்ளையின ஆதிக்க கட்சி என்பது ஊரறிந்த உணமையும் கூட. 
 
ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியின் மரணம் கனடா பாராளமன்றத்தில் இலங்கைத் தமிழ் பிரதிநிதித்துவத்தின் மரணமாகவே தென்படுகின்றது.  தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த ஒரே தொகுதியை துண்டாடியுள்ளார்கள்...

கனடா தமிழர்கள் மனது வைத்தால் இந்த இரண்டு தொகுதிகளை தம் வசமாக்கலாம்.. இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்கலாம். அதாவது ஸ்காபுறோ வடக்கில் அனைத்து தமிழர்களும் எவ்வித பேதமுமின்றி ராதிகா சிற்சபையீசனுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஸ்காபுறோ ரூஜ் றிவர் கொஞ்சம் தந்திரமாக வாக்களிக்க வேண்டும், அதாவது இங்கும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒரே ஒரு இலங்கைத் தமிழ் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர் போட்டியிட்டால் அவரில் ஒருவரை மட்டுமே போட்டியிடுமாறும் மற்றவரை விலகிவிடுமாறும் கோர வேண்டும். இதன் மூலம் இங்கும் ஒரு தமிழர் பாராளமன்றம் செல்ல இயலும். அந்த வகையில் கேறி ஆனந்த சங்கரி சிறந்த தேர்வாக அமைவார் என தெரிகின்றது.

அதே போல இந்த இரு தொகுதிகளில் வாழ்கின்ற கயானா இந்தியர்களோடு ஒப்பந்தமிடுவதும் நல்லது. அதாவது பாராளமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழருக்கு வாக்கிட்டால், மாகாண சபை தேர்தலில் இங்கிருந்து ஒரு கயானா இந்தியரை தேர்ந்தெடுக்க உதவுவோம் என்பதே ஆகும். இந்த வகையில் பாலகிசோனுக்கு தமிழர்கள் மாகாண சபை தேர்தல்களில் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்,

இதனை நீண்ட காலத்துக்கு தொடர்ந்து செய்வதன் மூலம் இங்கு தெற்காசிய மக்களின் பிரதிநிதித்துவம் குறிப்பாக இலங்கைத் தமிழர், கயானா இந்தியரது அபிலாஷைகள் காக்கப்படும். இதே போன்ற ஒப்பந்த ஒத்துழைப்பை மாநகரசபை தேர்தல்களிலும் பயன்படுத்த வேண்டும்.

ஸ்காபுறோ வட கிழக்கு பகுதிகளில் தெற்காசியர் நிலை பெற இது உதவும், இதனை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பும் நிறுவப்பட வேண்டும்.

இங்கு இன்னொரு பிரச்சனை, அண்மைய காலமாக இங்கிருந்து அதிகளவு இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர்ந்து மாகாணத்தின் வேறு பாகங்களுக்கு செல்கின்றனர். இது தொடர்ந்தால் காலப் போக்கில் இங்கு இலங்கைத் தமிழர் இல்லாமல் கூட போய்விடலாம், பிறகு பாராளமன்றத்தில் ஒரு இலங்கைத் தமிழர் கூட இருக்க மாட்டர்.

இதனை தடுக்க வேண்டுமானா, இந்த பகுதிகளின் வசதி வாய்ப்புக்களை பெருக்க வேண்டும். வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும், உள்க்கட்டமைப்புக்களை அதிகரிக்க வேண்டும், தொழில் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மற்றும் இந்தப் பகுதிகளில் கார் காப்பீட்டுத் தொகை மிக அதிகம் இதைக் குறைக்கவும், பிற செலவினங்களை கட்டுப்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஸ்காபுறோ வடக்கும், கிழக்கும் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து தக்க வைக்க முயல வேண்டும். ஒன்று பட்டால் நிச்சயம் உண்டு வாழ்வு.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு கனடா இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இல்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.