Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணத்தின் அமைச்சர்களாக கூட்டமைப்பின் தண்டாயுதபாணி, துரைராஜசிங்கம்! பிரதித் தவிசாளராக பிரசன்னா

Featured Replies

TNA%20Easrt%2027.jpg

 

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களும் பிரதித் தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரைராஜசிங்கம் ஆகியோர் மாகாண அமைச்சுப் பதவிகளையும், பிரசன்னா இந்திரகுமார் பிரதி தவிசாளர் பதவியையும் பெறவுள்ளனர்.
 
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்படி அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணியும், விவசாய, கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சராக கே.துரைராஜசிங்கமும் நியமிக்கப்படவுள்ளனர்.
 
இதேவேளை, பிரசன்ன இந்திரகுமார் பிரதித் தவிசாளராகவும் நியமிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து மாகாண ஆட்சியில் அனைத்துக் கட்சிகளையும் பங்கேற்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான பேச்சுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது இரண்டு அமைச்சு, பிரதி தவிசாளர் ஆகிய பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
 
எனினும் ஜனாதிபதியுடனான பேச்சின் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். கட்சியின் இறுதித் தீர்மானத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மற்றும் கிழக்கின் முதல்வர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
 
 
http://www.malarum.com/article/tam/2015/02/26/8836/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-.html#sthash.Nqqd9S5y.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டைமைப்பு கிழக்கு மாகாணத்தில் தலைமை வேட்பாளராக தண்டாயுதபாணியை நிறுத்தும் போது அவர் பற்றி நண்பர்கள் சொன்னது. தண்டாயுதபாணி ஒரு சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என நண்பர்கள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். திருமலை இந்துவை வளர்த்த பெருமை அவரையே சாரும். பின் வவுனியாவில் கல்வி திணைக்ககளத்தில் வேலை செய்து விட்டுதான் அரசியலுக்கு வந்தவர். அவருக்கு ஏற்ற அமைச்சை கொடுத்து இருக்கிறார்கள். ஒருவர் சொன்னவர் இவர் தான் சம்பந்தனின் இடத்தை கிழக்கு மாகாணத்தில் பிடிப்பார். மிகவும் நேர்மை ஆனவர். புலிகளுடன் நல்ல உறவை இராணுவ கட்டுபாட்டு பிரதேசத்தில் இருந்து கொண்டு செய்தவர். சிறப்புடன் செயலாற்ற வாழ்த்துகள்.

இறுதித் தீர்மானம் எடுக்க முன்பே இணையங்களில் செய்தி வந்து விட்டது .இது விடயமாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணியுடன் சில நிமிடங்களுக்கு முன் கதைத்தனான் ,அமைச்சுகள் பகிர்தல் சம்பந்தமாக இன்னும் உடன்பாடுகள் ஏற்படவில்லை .

ஆம் , m p அவர்களின் கூற்று சரியானது . திருமலை இந்துவுவின் அதிபராக பல ஆண்டுகள் பதவி வகித்தவர் . கட்டுகோப்பாக இந்துவை வளர்த்து எடுத்ததில் பெரிய பங்கு இருக்கு . கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில்

மாகாண கல்வி பணிப்பாளராக இருந்தவர் . எல்லா வித சாதியாபாடுகளையும் ஒன்றிணைத்து கிழக்கு மண் முன்னேற வேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.