Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்தை ஏற்படுத்தும் மாசுக்கள் நீரில் இல்லை ;வடமாகாண நிபுணர் குழு தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image13.jpg

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் மனிதருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சு மாசுகள், எண்ணெய், கிறீஸ் போன்றவை இல்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது என்று நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை யால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு கூறுகின்து.

சுன்னாகம் மின் நிலையத் தைச் சூழ ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்துக்குள் மேற் கொள்ளப்பட்ட  ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு   எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிபு ணர் குழு தெரிவித்தது.
 
தூயகுடிதண்ணீருக்கான செயலணியின் அமர்வு வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகா தார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தி யாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. 
 
நிபுணர் குழுவைச் சேர்ந்த, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி த.ஜெயசிங் கம், யாழ்.பல்கலைக்கழக இரசாயன வியல் துறைக் கலாநிதி கு.வேலாயுத மூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா ஆகியோர் சந்திப்பை நடத்தினர்.
 
9 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று வடமாகாண சபையினால் உருவாக் கப்பட்டது. முதலில் வெளிநாடுகளி லுள்ள வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றினோம். சுன்னாகம் மின் நிலையத்தை மையப்படுத்தி 8 திசைகளிலும் 200 மீற்றர் இடைவெளி யில் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கான மாதிரி வலையமைப்பு உருவாக்கப்பட் டது. அதில் முதல் ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் முதல் ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு திசையி லும் தலா 5 கிணறுகள் வீதம் 40 கிணறுகளில் மாதிரி எடுக்கப்பட்டது. என்று அவர்கள் கூறினார்கள்.
 
கொழும்பு கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் யாழ்.பல் கலைக்கழகம் என்பன தனித்தனியே மாதிரிகளை எடுத்து ஆய்வுக்குட்படுத் தின.கொழும்பு நிறுவன ஆய்வுகளின் 10 கிணறுகளிலும், யாழ்.பல்கலை ஆய்வின்படி 17 கிணறுகளிலும் எண்ணெய் காணப்பட்டது. கொழும்பு ஆய்வில் நியம அளவிலும் பார்க்க எண்ணெய் மற்றும் கிறீஸ் என்பன அதிகளவில் காணப்பட்டன. ஆனால் மொத்த எண்ணெய் மற்றும் கிறீஸ் என்பன வற்றை அளவிடும் பரிசோதனையின் போது, எண்ணெய், கிறீஸுக்குச் சமமாக மேலும் சில பதார்த்தங்களைக் காட்டி விடும். அதாவது, ஆவிப்பதமற்ற பெற் றோலியம், ஐதரோ காபன்கள், மெழு குகள், விலங்குப் பொருள் புர தங்கள், கனிம மற்றும் தாவர எண்ணெய்கள், சதக்காபன், கந்தக சேர்வைகள், சேதன சாயங்கள், குளோரோபின் போன்ற வற்றைக் காட்டிவிடும். இந்தப் பதார்த் தங்கள் அனைத்தும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் எனக் கருத முடியாது. என்றும் தெரி விக்கப்பட்டது.
 
உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்களாகிய பென்சீன், தொலு யீன், ஈதையில் பென்சீன், ஓதோ சைலின், பரா சைலின் மற்றும் மெற்றா சைலின் போன்ற பதார்த்தங்களின சேதனப் பதார்த்தங்களை அளவிட வேண்டிய தேவை ஏற்பட்டது. அத னால் குறித்த ஒரு கிலோ மீற்றர் பரப் புப் பிரதேசம் பரிசோதிக்கப்பட்டது.
 
அதன் முடிவுகளின்படி எந்த ஒரு தண்ணீர் மாதிரியிலும் உள்ள பதார்த்த அளவுகள் சர்வதேச அளவுகளைவிட மேற்பட்டு இருக்கவில்லை. அதாவது 40 கிணறுகளில் 85 வீதமான கிணறு களில் முற்றாக இல்லாமலும் 15 வீத மான கிணறுகளில் நியம அளவிலும் பார்க்க 200 மடங்கு குறைவாகவும் காணப்பட்டன. கொழும்பு கைத்தொ ழில் தொழில்நுட்ப நிறுவன முடிவுக ளின்படி பார உலோகங்களான லென், இரும்பு, கற்னியம், வனேரியம், ஆச னிக், நிக்கல், ரிங், கந்தலியப் படிவுகள் இல்லை என்று கூறுமளவுக்கு மிக மிகக் குறைந்த அளவிலேயே காணப் பட்டன. என்றும் அவர்கள் தெரி வித்தனர்.
 
இதனொரு கட்டமாக 12 கிணற்று நீர் மாதிரிகள் சிங்கப்பூரிலுள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மேலதிக ஆய்வுக்குத் தேவையான உபகரணங்களை வெளி நாட்டிலிருந்து கொண்டு வருவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்தியாவின் ஆதர வுடன் ஜி.பி.ஆர். தொழில்நுட்பத்தைப் பாவித்து 90 அடி ஆழம் வரை ஸ்கான் மூலமாக மண்ணின் தன்மையை ஆய்வு செய்யும் பணி எதிர்வரும் 25 ஆம் 27 ஆம் திகதிகளில் ஆரப்பிக்கப் படும். இவைதவிர  தடைத் திறன் ஆய்வு மூலமாக 120 அடி ஆழத்துக்கு ஆய்வு நடைபெறவுள்ளது. எரி பொருள் கணக்காய்வு நிலத்தடி நீரோட்டம் தொடர்பான ஆய்வுகளும் மேற் கொள்ளப்படவுள்ளன. என் றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
கொழும்பு கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவன ஆய்வறிக்கையின்படி முன்னர் மேற்கொண்ட ஆய்வில் 10 கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் 11 கிணறுகளில் சர்வதேச அளவி லும் பார்க்க அதிகமாகக் காணப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் ஒரு லீற்றருக்கு ஒரு மில்லி கிராம் எண்ணெய்த் தன்மை இருக்க லாம் என்று சுகாதார அமைச்சு அறி வித்தது. 
 
அதன்பிறகு இலங்கையில் கடந்த வருட இறுதியில் லீற்றருக்கு 2 மில்லிகிராம் எண்ணெய் இருக்க முடியும் என்று இலங்கைச் சுகாதார அமைச்சு மாற்றி அமைத்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத் தின் உதவியுடன் வரும் 25 ஆம் திகதி தரையை ஊடுருவும் ராடர் யாழ்ப் பாணத்துக்கு எடுத்துவரப்படவுள் ளது. இரண்டாம் கட்ட நீர் மாதிரி களின் ஆய்வுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். என்றும் அவர் கள் தெரிவித்தனர்.     
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.