Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 102
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் 
கண்டதும் கோபமாக, 
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" 
என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், 
நான் மருத்துவமனையில் இல்லை... 
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் 
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" 
என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?" 
அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், 
"உங்கள் மகன் 
இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் 
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? 
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், 
"எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், 
நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், 
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" 
என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" 
என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், 
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? 
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?" 
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, 
"அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று, 
அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... 
உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் 
என்று அழைத்தவுடன் 
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்"
என்று கூறினாள்.
‪#‎நீதி‬:
எவரின் மனநிலையையும் 
நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள் 
வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப் 
பற்றியும் 
நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
பின்பு ஏன்...???
((( குறிப்பு : இதை நீங்களே முடித்து வையுங்கள்.!!! )))

முகநூல் பதிவு 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

11051808_429927627213140_243415786888884

வரலாற்றுப் புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் - 14.5.1976
=============================================

இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு ("தனி ஈழம்'') வேண்டும் என்று, தந்தை என அழைக்கப்பட்ட செல்வநாயகம் தலைமையில், வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது. வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் 1976 மே 14-ந்தேதி இந்த மாநாடு நடந்தது. செல்வநாயகத்தின் பிரதம சீடரான அமிர்தலிங்கம் பிறந்த ஊர் பண்ணாகம். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில், வட்டுக்கோட்டை மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
"வட்டுக்கோட்டை பிரகடனம்'' என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் தனி நாடு தீர்மானத்தை செல்வநாயகம் முன்மொழிந்தார். மு.சிவசிதம்பரம் வழிமொழிந்தார். அந்தத் தீர்மான வாசகம் வருமாறு:- "ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.'' இந்தத் தீர்மானம் வாசிக்கப்பட்டதும், கூடியிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழம் வாழ்க'' என கூவி இரத்த திலகம் இட்டனர்.
இந்த தீர்மானத்தை அடுத்து, "தமிழர் கூட்டணி''யின் பெயரை "தமிழர் விடுதலை கூட்டணி'' என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அமிர்தலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதையும் விளக்கி சொற்பொழிவாற்றினார்.
பின்னர் அவர் கூறியதாவது:- "இலங்கைக்கு இங்கிலாந்து சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்களுக்கு தனி நாடு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. "சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்களை நிறைவேற்றக் கூடாது'' என்று கூறி, முழு நாட்டையும் சிங்களரிடமே ஒப்படைத்து விட்டனர். சிங்களர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கிவிட்டனர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட, எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. எனவே, இழந்துவிட்ட அரசுரிமையைப் பெற தமிழ் ஈழம் ஒன்றுதான் வழி என்று, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்.'' இவ்வாறு அமிர்தலிங்கம் கூறினார். அவருடைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. மாநாடு முடிந்ததும், அமிர்தலிங்கத்தை தோளில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 
"ஒவ்வொரு வாக்கும் தமிழீழம் அமைப்பதற்கான ஆணையாகும்,அடுத்த பொதுத்தேர்தல் சுதந்திரம் பெற்ற தமிழீழத்தில் தான் நடைபெறும்” என, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் செய்த முழக்கம் அது தான்.மிகப் பெரும் வெற்றி பெற்றனர்.அதே வேளை , “நான் பிரபல இலங்கையின் பிரபல இடதுசாரி என்.எம்.பெரேராவின் மாணவன். சோசலிசத்தை விரும்புபவன். சோசலிச தமிழ் ஈழம் என்றே எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருக்கின்றோம்” என்று பேசுவார் அமிர். அன்று பாயத்தொடங்கிய இரத்தம் - துரோகி, எதிரி,இராணுவம்,போலிஸ், உளவாளி, மாற்று இயக்கம்,உட்படுகொலை, சுட்டவன், ,சுட்டவனைச் சுட்டவன் என தொடர்ந்தது 33 ஆண்டுகள் தொடர்ந்தது.

1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 
மாவட்ட சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தiலைமை வேட்பாளராகப் போட்டியிட்டவர் தியாகராசா. மாறுபட்ட கொள்கைகளைப் கொண்டிருந்தது போதும் நேர்மையான மக்கள் சேவகன்.தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில்; போட்டியிட்டு வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றவர்.1977 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் சேர்ந்திருந்தார். வரை PLOTE என்ற அமைப்பினர் பிரசாரக் கூட்டத்தின் போது சுட்டுக் கொன்றனர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க , சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. 
1980 களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். “வேகம் போதாது. தமிழ் ஈழத்தை கூட்டணி பெற்றுத் தராது. பாராளுமன்ற வாதிகளால் போராட்டம் நடத்தமுடியாது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் .
1971 இல் தரப்படுத்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் மாணவர்களையும் தமிழ் மாணவர் பேரவையையும் தமது தலைமையின் கீழ் கொண்டு வந்தவர்கள் கூட்டணியினர். 1980 களில் மாணவர்கள் தமக்கெதிராக மாறிவிட்டதை சகிக்க முடியவில்லை.பின்னர் கொலைக் குழுவாக மாறியது விடுதலைக் போராட்டம்.
இன்று,அமைதியாக இருக்கும் இவ்விடம் போல ஒன்றுருவாகிட நாம் இடம்கொடுக்காமலிருப்போமாக!
 
 
 
 
 
  • தொடங்கியவர்

11061274_993436660694467_840929001266251

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மீண்டும் பிறப்பேன். விடுதலைக்காக போராடுவேன்." - பொன் சிவகுமாரன்.

.ஈழத்திலும் தமிழ் மக்களின் அகிம்சை போர் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் புரட்சிப் பயிராக முளைத்தவரே பொன். சிவகுமாரன்.

இன்று இந்த புரட்சி பூ மண்ணில் பூத்த நாள்.

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் இந்த மாணவப் போராளி சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலே ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் ஆயுத புரட்சித் தாக்குதல் என்று கருதப்படுகிறது.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் புரட்சிப் பாதையில் தன்னை இணைத்து அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்லாமல் இலக்கை தொலைக்காமல் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்றன.

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர்.

காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின. இந்த இறப்புகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பியல் நிகழ்வு ஆகும்.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

அக்காலத்தில் உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார்.

ஆனால் அவரின் தீரத்தை துரோகம் வென்று காட்டிக் கொடுப்பினால் தலைமறைவாக இருந்த அவர் கோப்பாயில் காவல் துறையினர் சுற்றி வளைக்கப்பட்டார். அப்பொழுது எதிரி கையில் தான் அகப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தினார்.. ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

ஒரு வீரனின் மரணம் பல ஆயிரம் வீரர்களின் பிறப்பு நிகழ்வுக்கு காரணமாகின்றது என்பதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் முதலான பல்லாயிரம் வீரர்கள் சிவகுமாரன் பாதையில் பின்னாளில் எழுச்சியோடு புரட்சியை கையில் எடுத்ததில் இருந்து கண்டு கொள்ளாலாம்.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

சிவகுமாரன் என்ற எங்கள் விடுதலையின் வித்து இன்று விருட்சமாக வளர்ந்து பல்லாயிரம் புதிய விதைகளை தரும் கனிகளை காலத்திற்கு காலம் தந்து கொண்டே இருக்கும் புரட்சி பெரு விருட்சமாக நிமிர்ந்து நிற்கின்றது ஈழ விடுதலை வரலாற்றில்!

 

 

11923591_10155832117465012_8438083156109

 

 

நன்றி முகநூல் 

Edited by செந்தமிழாளன்

  • 2 weeks later...
  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.