Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியோரம் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியர் ஜெசிந்தாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் என்ன?

Featured Replies

வீதியோரம் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியர் ஜெசிந்தாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் என்ன?

 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் தம்மை உருக்கி வெளிச்சம் கொடுப்பது ஆசிரியர்கள். அவர்கள் போற்றத்தக்கவர்கள். இந்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் கல்வி கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியை ஒருவருக்கு நிகழ்ந்த துயரச் சம்பவம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியை திருமதி ஜெசிந்தா மத்தேயு பிள்ளை (வயது-51) என்பவருக்கே உயிர் பிரியும் அளவிற்கு துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அரிப்பு – நானாட்டான் பிரதான வீதியிலே ஆசிரியை ஜெசிந்தா மத்தேயுபிள்ளை (வயது-51) என்பவரது வீடு உள்ளது. ஆசிரியை ஜெசிந்தா அவர்களுடைய கணவர் மத்தேயுப்பிள்ளை ஒரு ஆசிரியராக மன்னார் பரிகாரிகண்டல் ம.வி பாடசாலையில் கல்வி கற்பித்து வருகின்றனர்.

இருவரும் நல்ல மாணவ சமூகத்தை உருவாக்க ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியை ஜெசிந்தா நானாட்டான் ம.வி பாடசாலைக்குச் செல்வதற்காக காலையிலே தனது வீட்டுப் பணிகளை முடித்துக் கொண்டு பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளார்.

தனது கணவருடன் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் ஆசிரியை ஜெசிந்தா அவர்கள் நேரத்தை கருத்தில் கொண்டு அன்றைய தினம் அரிப்பு வீதியில் இருந்து நானாட்டான் ம.வி பாடசாலைக்குச் நடந்து செல்ல வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

வீட்டில் இருந்து நடந்து சென்ற ஆசிரியை அரிப்பு நானாட்டான் பிரதான வீதியேரமாக காலை 7.25 மணிமுதல் 7.50 வரை பலத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். இரத்தமும் வெளியேறியுள்ளது

ஆனால் குறித்த வீதியூடாக பலர் பயணித்த போதும் அனைவரும் பார்வையாளர்களாக சென்றுள்ளனர்.

சுமார் 25 நிமிடங்களின் பின்னார் மன்னார் பொது வைத்தியசாலைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன் போது ஆசிரியை ஜெசிந்தா மத்தேயு பிள்ளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆசிரியை வீதியில் எவ்வாறு பலத்த காயங்களுடன் கிடந்தார் என்ன விடயம் மர்மமாகவே உள்ளது.

எனினும் வீதியில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்காது பலர் வேடிக்கை பார்த்துச் சென்றமை அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானமுள்ள யாராவது முன் வந்து வீதியில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஆசிரியை ஜெசிந்தா அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த ஆசிரியையின் மர்ம மரணம் நானாட்டான் பகுதியில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தற்போது அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

பாடசாலைக்கு மாணவர்கள் தற்போது தனிமையில் செல்ல அஞ்சுகின்றனர். குறித்த ஆசிரியையின் மர்மமான மரணம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை எவ்வித தடயங்களும் வெளியாகவில்லை.

எனவே குறித்த ஆசிரியையின் மரணத்தின் பின்னணி வெளிப்பட வேண்டும் என பாடசாலை சமூகம் கோரிக்கை விடுக்கின்ற அதே சமயம் வீதியில் உயிருக்காக போராடும் ஒருவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேடிக்கை பார்த்ததனாலேயே இன்றைய கல்வி சமூகம் பிரபலமான ஆசிரியை திருமதி ஜெசிந்தா மத்தேயு பிள்ளை அவர்களை இழந்துள்ளதாக நானாட்டான் கல்வி சமூகம் கவலை வெளியிட்டுள்ளனர்.

Jesintha-7000-600x455.jpg

http://www.jvpnews.com/srilanka/104986.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் ஒருவரின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் ம.வி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியரான திருமதி ஜெசிந்தா மத்தேயு பிள்ளை(வயது-51) கடந்த 30 ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த போது வீதியில் பலத்த பாயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த ஆசிரியர் உயிரிழந்தார். அரிப்பு – நானாட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து குறித்த ஆசிரியர் கடந்த 30 ஆம் திகதி நானாட்டான் ம.வி பாடசாலைக்கு செல்லதற்காக குறித்த வீதியல் நடந்து சென்று கொண்டிருந்தார். இதன் போது குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,பின் யாழ் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது ஆசிரியர் உயிரிழந்தார். இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வந்த போதும் இது வரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது. குறித்த பிரதான வீதியில் தொடர்ச்சியாக ஓடித்திரியும் டிப்பர் வாகனம் மோதி ஆசிரியர் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு சம்பவங்களினால் ஆசிரியருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற விடையம் இது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் குறித்த ஆசிரியரின் மரணம் தொடர்பில் உரிய விசாரனைகளை மேற்கொள்ளுமாறு கோரியும்,பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதியில் ஓடுகின்ற டிப்பர் வாகனத்தின் அதிகரிப்பையும்,வேகத்தையும் குறைக்கக்கோரியும் மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலைகளில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நானாட்டான் பிரதேசச் செயலகத்தை சென்றடைந்தது.பின் மன்னார் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய மகஜர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாசிடம் கையளிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றனர். http://www.sankathi24.com/?p=1953

என்ன உலகமடா இது , ஒரு ஆசிரியை அடிபட்டு கிடக்கும் போது ஒருத்தர் கூட முன்வரவில்லையா ...
எப்படியும் மாணவர்கள் இந்த வீதியால் வந்திருப்பார்களே ?  அட என்ன கொடுமையடா ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.