Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் அனுசரணையில் உசன் சந்தியில் பொதுமக்கள் நிழல் குடை திறப்பு‏.

Featured Replies

கண்டி வீதி – உசன் சந்தியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்த நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பயணிகள் நிழல் குடை இல்லாதிருந்த குறையை நிவர்த்தி செய்ய உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகம் முன்வந்தது. அவர்களது செயற்திட்டத்துக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் – கனடா ஊடாக அனுசரணை வழங்க முன்நாள் இ.போ .ச நடத்துனர், அமரர் வெற்றிவேலு அவர்களின் குடும்பத்தினர் உறுதி அளித்தனர்.உசன் சிறி முருகன் விளையாட்டுக் கழகஉறுப்பினர்களின் முயற்சியில் கட்டப்பட்ட பேருந்து தரிப்பிட நிழல் குடை இன்றைய தினம் ஏப்ரல் 12 ம் திகதி , மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது ,

கழகத்தின் தலைவர் ,திரு.ரூபன் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவை திரு.செல்லத்துரை ஜதிகேசன் தொகுத்து வழங்கினார்,மங்கள விளக்கை ,தரிப்பிடத்தை அமைக்க ஆலோசனை வழங்கிய சமூக சேவையாளர் திரு.சிவானந்தம் ,திருமதி.மீரா தேவரஞ்சன் ஆகியோர் ஏற்றினர்.தொடர்ந்து கட்டிடத்தை வடமாகானா சபை உறுப்பினர் சட்டத்தரணி திரு.கேசவன் சயந்தன் அவர்களும் ,திரு.கனகசிங்கம் அவர்களும் திறந்து வைத்தனர் ,

அன்னாரின் உருவப்படத்துக்கு கழகத்தின் செயலாளர் திரு.அ.பிரபாகரன் மலர்மாலை அணிவித்தார் .

உசன் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய வடமாகாண சபை உறுப்பினர் திரு.கேசவன் சயந்தன் அவர்கள் , போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எல்லா அபிவிருத்திக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தமது கிராமத்தை தாமே அபிவிருத்தி செய்வது வரவேற்கதக்கது எனவும் அதனை உசன் கிராம மக்களும் ,அமைப்புகளும் சிறப்புடன் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகவும் இதனை அனைத்து கிராம மக்களும் தொடர்ந்தாள் எமது நாடு மிகவிரைவில் அபிவிருத்தியடைந்துவிடும் எனவும் கூறினார்,தொடர்ந்து கட்டிடத்தை சிறப்பாக கட்டிமுடித்த நிறுவன அதிபர் திரு.ப. சுகந்தன் அவர்களுக்கு கழகத்தின் தலைவர் நன்றி தெரிவித்து மதிப்பளித்தார்.தொடர்ந்து இந்த பொதுப்பணி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் , உசன்வைத்தியர்.திரு..ஐ.ஜெபணாமகணேஷன் அவர்கள் நன்றியுரை கூறினார்

IMG_1847-600x450.jpg

IMG_1850-600x450.jpg

IMG_1851-600x450.jpg

IMG_1855-600x450.jpg

IMG_1856-600x450.jpg

IMG_1857-600x450.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/40981.html#sthash.6NPJ5zSd.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.