Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைகள் அட்டகாசம்’ – நம்மூரிலும் இம்முறையை நாம் முயற்சித்துப் பார்க்கலாமே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்மூர் யானைகளுக்கு கரும்பு என்றால் உயிர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தால் செமை கட்டு கட்டிவிடும். போலவே கென்ய நாட்டு யானைகளுக்கு அக்கேசியா என்கிற மரத்தின் மீது தீராப்பசி. எங்காவது அம்மரத்தைக் கண்டால் வளைத்து அப்படியே சாப்பிடும்.

பெண் ஆராய்ச்சியாளரான லூசிகிங்குக்கு ஒரு நாள் ஆச்சரியமான காட்சி ஒன்று காணக்கிடைத்தது. ஓங்குதாங்காக வளர்ந்திருந்த ஓர் அக்கேசியா மரத்தைக் கண்டும், நாலு நாட்கள் பட்டினியில் கிடந்த யானைக்கூட்டம் ஒன்று சட்டை செய்யாமல் விலகி நடந்ததைக் கண்டார். அந்த மரத்தில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது என்பதை உணர்ந்தார். அருகில் சென்று மரத்தை ஆராய்ந்தார். மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. அம்மரத்தில் ஏராளமான தேன்கூடுகள் இருந்தன. தேனீயைக் கண்டாலே யானைக்கு அலர்ஜி. ‘ங்கொய்’ என்று காதில் புகுந்து ரீங்காரமிடும் தேனீயின் ஓலம்தான் யானைக்கு சகிக்க முடியாத தொந்தரவு. லூசிகிங்கின் மூளையில் சட்டென்று பல்ப் எரிந்தது. வயல்களில் புகுந்து நாசம் செய்யும் யானைக் கூட்டங்களைத் துரத்த தேனீச் சுவர் அமைத்தால் என்ன?

அங்கிருந்த விவசாயி ஒருவருக்கு பயங்கர யானைத் தொல்லை. அவரிடம் போய் பேசினார். ‘உங்கள் வயலைச் சுற்றி நான் ஓர் ஏற்பாடு செய்கிறேன். யானைகள் கிட்டவே நெருங்காது. டீலா நோ டீலா?’ விவசாயி மகிழ்ச்சியோடு டீலுக்கு ஒப்புக்கொண்டார். உருவானது யானையை விரட்டும் தேனீச் சுவர். பத்து மீட்டர் இடைவெளியில் இரண்டு மரக்கம்பங்கள். அவற்றை மெல்லிய இரும்புக் கம்பி ஒன்றின் மூலம் (நாம் துணி காய வைக்க மாடியில் அமைக்கும் அமைப்பு மாதிரி) இணைத்தார். தேனீ வளர்ப்புக்கு உதவும் இரண்டு மரப்பெட்டிகளை அந்தக் கம்பியில் தொங்கவிட்டார். யானைகளின் கண்களுக்கு பளிச்சென்று தெரியும் உயரத்தில் அந்த மரப்பெட்டிகள் மாட்டப்பட்டன. அதேநேரம் தேனை சேகரிக்க வசதியான உயரமாகவும் அது அமைந்தது. இதே மாதிரி அமைப்பை நிலத்தைச் சுற்றிலுமாக உருவாக்கினார்.

வெயிலும், மழையும் தேனீக்கு ஆகாது. எனவே அவற்றைக் காக்க வைக்கோலால் ஆன மினியேச்சர் குடிசைகள் ஒவ்வொரு பெட்டிக்கும் மேலாக உருவாக்கப்பட்டன. இப்பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் பயங்கரப் பிளிறலுடன் யானைக் கூட்டம் ஒன்று பூமியதிர அந்த நிலத்தை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. பார்த்துக் கொண்டிருந்த விவசாயிக்கு பக்கென்று ஆனது. இந்த களேபரமெல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். யானைகள் கம்பியைத் தொட்டதுமே, அந்த அதிர்வில் மரப்பெட்டிகள் பயங்கரமாக ஆட, உள்ளே உல்லாசமாக தேன் சேகரித்துக்கொண்டிருந்த தேனீக்களுக்கு வந்ததே கோபம். ஒட்டுமொத்தமாகப் படையெடுத்து, ஒவ்வொரு யானையையும் அவற்றுக்கேயுரிய தனித்தன்மையான ரீங்காரத்தால் புரட்டியெடுத்தது. டொக் டொக்கென்று தங்கள் கொடுக்கால், ஒவ்வொரு யானையையும் நாலு போடு போடவும் தேனீக்கள் தயங்கவில்லை. இதென்ன புதுத்தொல்லை என்று யோசித்த யானைகள் வந்த வழியே பின்னங்கால் பிடறியிலடிக்க புறமுதுகு காட்டி ஓடின.

விஷயம் கேள்விப்பட்ட லூசிகிங் யானை சைஸ் மகிழ்ச்சியை அடைந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் பதினேழு விளைநிலங்களில் இதேமாதிரி தேனீச் சுவர் அமைத்தார். இந்நிலங்களுக்கு யானைக் கூட்டங்கள் தொண்ணூறு முறை வந்திருக்கின்றன. ஆனால் ஆறு முறை மட்டும்தான் (தேனீத் தொல்லையை தாண்டியும் கடும்பசி போலும்) அந்தப் படையெடுப்புகளில் யானைகளால் வெற்றிகொள்ள முடிந்தது.

லூசிகிங்கின் இந்த வெற்றிகரமான யானைத் தடுப்புமுறையை கேள்விப்பட்ட கென்ய விவசாயிகள் பலரும் இப்போது தங்கள் நிலங்களிலும் இதே அமைப்பை நிறுவி, சந்தோஷமாக வேலை பார்க்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். விவசாய வேலையும் தடைபடுவதில்லை. அதே நேரம் தேன் மற்றும் மெழுகு சேகரிப்பு மூலம் பாக்கெட் மணியும் கூடுதலாக கிடைக்கிறது.

பொதுவாக யானைத் தொல்லையை தவிர்க்க விவசாயிகள் மின் அதிர்ச்சி தரும் கம்பிகளைத்தான் உலகெங்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் யானைகள் சில இறக்கின்றன என்பதால் இது சட்டவிரோதமான செயலாக அரசுகளால் தடைசெய்யப்பட்ட முறை. ஆனால் தேனீச் சுவரால் யானைகளுக்கு பெரிய தொல்லை எதுவுமில்லை. மேலும் தேனீக்களின் வருகையால் மகரந்தச் சேர்க்கை அதிகமாகி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மரம், புல், செடி, கொடிகளின் எண்ணிக்கை பெருகி பசுமையும் பரவுகிறது. கால்நடைகளுக்கு உணவு உற்பத்தி கூடுகிறது.

எளிய ஆனால் பெரும்பலன் தரக்கூடிய இந்தக் கண்டுபிடிப்புக்காக லூசிகிங் 2013-ஆம் ஆண்டுக்கான ப்யூச்சர் ஃபார் நேச்சர் விருதை வென்றிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச ஆராய்ச்சிப் பரிசை கொடுத்து இவரை கவுரவித்திருக்கிறது.unnamed8-450x409.jpgunnamedw-450x275.jpg

http://tamil24news.com/news/2015/04/14/யானைகள்-அட்டகாசம்-நம்/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை.
இயற்கையை  நன்கு அவதானித்தாலே... பல தீங்கு இல்லாத மாற்று வழிகளை, மனிதர் கற்க முடியும். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை.

இயற்கையை  நன்கு அவதானித்தாலே... பல தீங்கு இல்லாத மாற்று வழிகளை, மனிதர் கற்க முடியும். :)

உண்மை.. தேனீக்களை பாவித்தல் இயற்கை வேளாண்மை. :D மின்சார வேலி அமைத்து யானையை கொடுமைப்படுத்துதல் நவீன விவசாயம். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.